எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.6 - பொங்கல் திருநாள் என்றால் கரும்பும் நினைவுக்கு வரும். அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இனிப்பு செய்தியாக, போக்குவரத்து செலவு உட்பட ஆதாரவிலையை ரூ.2100 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேளாண் துறையில் நிலவும் தேக்க நிலையை நீnullக்கும் வகையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்குவதிலும், விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை அதிகரிப்பதிலும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், வேளாண் நிலப்பரப்பினை அதிகரிப்பதிலும், உற்பத்தித் திறனை உயர்த்துவதிலும் பல ஆக்கப்nullர்வமான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், உணவு உற்பத்தியை பெருக்கும் வகையில், சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக மேட்டூர் அணையை ஜூன் 6ஆம் தேதி திறக்க உத்தரவிட்டேன். இது மட்டுமல்லாமல், திருந்திய நெல் சாகுபடித் திட்டத்தின் மூலம் கூடுதலாக 60,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், துல்லிய பண்ணையம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் உகந்த பயிர் மேலாண்மையைக் கடைபிடித்தல், துல்லிய பண்ணையம் முறைகளில் காய்கறிகளை பயிரிடுதல், தோட்டக்கலை பயிர்களுக்கான அடர் நடவு முறை என பல புதிய முறைகளை நடப்பாண்டில் எனது தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்க நான் உத்தரவிட்டேன். இதே போன்று, கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், நீnullடித்த நவீன கரும்பு உற்பத்தித் திட்டம் என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்த உத்தரவிட்டு, இதற்கென 12 கோடியே 93 லட்சம் ரூபாயை நான் ஒதுக்கீடு செய்துள்ளேன். இந்தப் புதிய திட்டத்தின் மூலம் குறைந்த அளவு விதை நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி, சரியான அளவு ஊட்டச் சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.
மேலும், பயிர் செய்வதற்கான உற்பத்தி செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், உணவு உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்காக ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் மானியமாக 20 லட்சம் ரூபாய் வீதம் 400 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு 80 கோடி ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம், குறைந்த நிலப் பரப்பில் அதிக அளவு உணவு உற்பத்தி கிடைக்க வழிவகை ஏற்படும்.
வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த ஆண்டு 57.92 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த அரிசி உற்பத்தி நடப்பாண்டில் 80 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 76.6 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த மொத்த உணவு தானிய உற்பத்தி, நடப்பாண்டில் 115 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரும்பைப் பொறுத்த வரையில், கடந்த ஆண்டு 3.1 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட கரும்பு நடப்பாண்டில் 3.5 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு 342.5 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி நடப்பாண்டில் 400 லட்சம் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், கரும்புக்கான ஆதார விலை உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை மனதில் கொண்டும், முதற்கட்டமாக இந்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலையை, போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட 2,100 ஆக உயர்த்த நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதே போன்று, கரும்பு விவசாயிகள் கூடுதல் உற்பத்தி செய்து பொருளாதார பயனடையவும், சர்க்கரை ஆலைகள் போதிய வருவாய் ஈட்டி அதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு அதிக விலை கொடுப்பதற்கு ஏதுவாகவும், எத்தனால் உற்பத்தியை துவங்க எனது தலைமையிலான தமிழக அரசு 2002 ஆம் ஆண்டு கொள்கை அளவில் முடிவு எடுத்தது.
இதன் அடிப்படையில், ஆறு தனியார் எரிசாராய வடிப்பாலைகளும், இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் அமைந்துள்ள எரிசாராய வடிப்பாலைகளும் எத்தனால் உற்பத்தியை தொடங்கின. இதன் மூலம், அவை 185 லட்சம் லிட்டர் எத்தனால் தயாரித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்தன. எனினும், 2006 ஆம் ஆண்டு இறுதியில், எத்தனால் உற்பத்திக்கான அனுமதியை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. இதனால், எத்தனால் ஆலைகளை அமைத்த சர்க்கரை ஆலைகள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளன.
எத்தனால் உற்பத்தியினால் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதால், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் கரும்பு விலையை வழங்குவது சர்க்கரை ஆலைகளுக்கு எளிதாக இருக்கும். எனவே தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் எத்தனால் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் எத்தனால் உற்பத்தியை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், கரும்பு விவசாயிகள் கூடுதல் விலை பெறவும், சர்க்கரை ஆலைகள் கூடுதல் வருவாய் ஈட்டவும் வழி வகை ஏற்படும். என்னுடைய இந்த இனிய நடவடிக்கைகளின் மூலம் இனிக்கும் கரும்பைத் தரும் விவசாயிகள் இன்புறுவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 19 hours ago |
மினி பான் கேக்6 days 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்: கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
06 May 2024கன்னியாகுமரி : கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.