எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் மேலாண்மைப் புலம், அறிவியல் மற்றும் கல்வியியல் புல மாணவர்களுக்கான பட்டமளிக்கும் விழா பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவானது இருகட்டங்களாக காலையும், மாலையும் நடைபெற்றது.
காலையில் நடந்த முதல் நிகழ்வில், கலை மற்றும் மேலாண்மைப் புலத்தைச் சேர்ந்த 482 மாணவ-மாணவிகளுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் பட்டங்களை நேரில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனைவர் எஸ். விமலா பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அவர் தமது உரையில், வள்ளல் அழகப்பரின் வள்ளல் தன்மையையும், அவருடைய தொலை நோக்குப் பார்வையையும் நனவாக்கும் வகையில், அழகப்பா பல்கலைக்கழகம் இன்று தலை சிறந்த உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது. வியக்கத்தக்க வகையில் வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவின் உயர்கல்வி பற்றி குறிப்பிட்டு பேசும்பொழுது, இந்தியா பண்டைக்காலந்தொட்டே உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்றும், இதற்கு சிறந்த உதாரணம் பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் என்றும் கூறினார். இந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இன்று இந்தியாவில் 864 பல்கலைக்கழகங்களும், 40,000 கல்லூரிகளும் செயல்பட்டு வருவது பெருமைக்குரியது.
மேலும் அவர் பேசுகையில், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்ல பண்புகளும், ஒழுக்கமும் உள்ள குடிமக்கள் இருப்பது அவசியம். படிப்பறிவு மட்டும் இருந்து, சமூகநலனில் அக்கறை இல்லாதவர்கள் இருந்தால் அதனால் பயனில்லை. அவர்கள் நாட்டிற்கு ஒரு சுமையாக மட்டுமே கருதப்படுவார்கள். கல்வியின் நோக்கம் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் குடிமக்களை உருவாக்குவதேயாகும். வெற்றி என்பது தானாகவே வராது. கடின உழைப்பின் மூலமே வெற்றியை எட்ட முடியும். தொடர்ந்து மேற்கொள்ளும் விடா முயற்சி நிச்சயம் வெற்றிக்கு வித்திடும் என்றார். மாறிவருகின்ற சூழ்நிலைக்கேற்ப அவ்வப்போது தங்களுடைய அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், நீங்கள் பின்னுக்கு தள்ளப்படுவீர்கள். படிப்பு என்பது வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடியது. படிப்பைவிட சிறந்த அணிகலன் வேறொன்றும் இல்லை எனக் குறிப்பிட்டு பட்டதாரிகளாகிய நீங்கள் தொடர்ந்து படித்து நல்ல நிலைக்குச் சென்று, தாங்கள் பயின்ற நிறுவனத்திற்கு பெருமைச் சேர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
பிற்பகலில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கல்வியியல் புல மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில், 657 மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் பட்டங்களை நேரில் வழங்கினார்.
மிசோராம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. கே.ஆர்.எஸ். சாம்பசிவ ராவ் பிற்பகலில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
அவர் தமது உரையில், இன்றைய நவீன உலகில் புதுமையான சிந்தனைகளையும், கருத்துக்களையும் கொண்ட நிபுணர்களையும், அறிஞர்களையும் உருவாக்குவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்றும், உலகம் முழுவதும் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்களில் 20 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பதும் பெருமைப்படத்தக்க வி~யம் என்றார். இந்திய மாணவர்கள் கடினமாக உழைக்ககூடியவர்களாகவும், எடுத்துக் கொண்ட துறையில் குறிக்கோளுடனும், மிகுந்த கவனத்துடனும், நேர்த்தியுடனும் செயல்படுபவர்களாகவும் உள்ளனர். கல்வித் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலகளவில் ஏற்படக்கூடிய சவால்களை சந்திக்கக்கூடிய வகையில், இந்திய கல்வி நிறுவனங்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மாசு, இயற்கை பேரழிவுகள், பாதுகாப்பு பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து நாடு முழுமையாக விடுபடுவதற்கு படித்த இளைஞர்கள் உதவி புரிய முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டார். மாணவர்கள் தங்களது கனவை நனவாக்குவதற்கு, மனதுக்கு பிடித்தவற்றை மிகுந்த ஆசையுடனும், குறிக்கோளுடனும் செய்து, வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ஹா. குருமல்லே~; பிரபு அனைவரையும் வரவேற்று பல்கலைக்கழகத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேரா. பி. சுபாஷ் சந்திரபோஸ், பேரா. எஸ்.எம். இராமசாமி, பேரா. எ. நாராயணமூர்த்தி, பேரா. ஜெ. ஜெயகாந்தன் மற்றும் பேரா. கே. குருநாதன், தேர்வாணையர் பேரா. எஸ். சக்திவேல், நிதி அலுவலர் (பொ.) முனைவர் டி.ஆர். குருமூர்த்தி, பல்கலைக்கழக அதிகாரிகள், புல முதன்மையர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.