எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை, - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நிகழ்ச்சி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழா அமைச்சர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் சாலை பாதுகாப்பு குறித்த விதிமுறைகளின் விளம்பர பதாகைகள் ஏந்தி ஓட்டுநர் பயிற்சி மாணவர்கள் சென்றார்கள். மேலும் அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில்,
சாலை பாதுகாப்பு வார விழா ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இதன்; நோக்கம் சாலை விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதேயாகும். அதற்காக வட்டார போக்குவரத்துறை மற்றும் அரசு போக்குவரத்துறையின் மூலம் பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாலையில் விபத்துக்களை தவிர்த்திடுவது என்பது வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்ல நடந்து செல்பவர்களும் கவனமாகச் சென்றால்தான் சாலையில் விபத்துக்களை தவிர்க்க முடியும். அதேபோல் அரசு பல்வேறு நிலைகளில் விதிமுறைப்படி வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. அதை ஒருசிலர் கண்டு கொள்ளாததால் விபத்து போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படுகிறது. சாலை விதிமுறைகளின்படி வாகன ஓட்டிகள் தங்களுரிய பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். அதேபோல் சாலையை கடக்கும் போது போக்குவரத்து விதிமுறைகளின்படி எங்கு சாலை கடக்க அனுமதிக்கப்பட்ட இடமோ அந்த இடங்களை மட்டுமே பயன்படுத்தினால் விபத்துக்களை தவிர்த்திடலாம். அதேபோல் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும். அதேபோல் சாலை கடப்பவராக இருந்தாலும் சரி, இருசக்கர வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி, கனரக வாகன ஓட்டியாக இருந்தாலும் சரி சாலையில் வாகனங்களை இயக்கும் பொழுது செல்போன் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்த்திட வேண்டும். மேலும் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு முறையாக விதிமுறைகளை கடைப்பிடிக்கும் போது விபத்துக்கள் குறைந்து விடும்.
இதை பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென திட்டமிட்டு இதற்காக 23.04.2018 முதல் 29.04.2018 வரை ஒருவாரம் காலம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. துவக்கமாக இன்று (23.04.2018) சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர் பேரணி துவக்கப்பட்டு இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. 24.04.2018 அன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் இருச்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மூலம்
முக்கிய வீதிகளின் வழியாக பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிதல், சீட்பெல்ட் அணிவதன் முக்கியவத்துவம் குறித்து எடுத்துரைக்கப்படுகின்றன. 25.04.2018 அன்று பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள், அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் கணினி மென்பொருள் பணியாளர்கள் ஆகியோருக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகின்றன. 26.04.2018 அன்று உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தலின்படி போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 27.04.2018 அன்று நான்கு வழிச்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன் வாகன ஓட்டுநரின் சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் ஒட்டுதல் மற்றும் வாகனங்களை முந்தும்போது விதிமுறைகளை கடைபிடித்தல் குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். 28.04.2018 அன்று சாலையின் முக்கிய சந்திப்புகள், வாரச்சந்தைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியப் பகுதிகளில் அதிகளவில் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊர்காவல் படை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நிறைவாக 29.04.2018 அன்று சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி மேற்கொள்ளுதல் மற்றும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்வு ஒருவார காலத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை ஏன் கடைபிடிக்க வேண்டும் அதன் அவசியம் என்ன என்பதை நன்கு உணரமுடியும். அந்த வகையில் அரசு பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வு நன்றாக தெரிந்து கொண்டு ஒவ்வொருவரும் தன்னைத்தானே பாதுகாத்திடுவது மட்டுமன்றி தன் குடும்பத்தையும் பாதுகாத்திடும் வகையில் செயல்பட்டு தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்றிட ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவர், வட்டார ஆய்வாளர்கள் முருகன், அருண்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.