எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே: புனேயில் நடைபெற்ற 27வது ஐபிஎல் போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரோஹித் சர்மா தலைமை மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 11 ஓவர்களில் 97/1 என்ற சிறப்புக்கட்டத்திலிருந்து 20 ஒவர்களில் 169/5 என்று சரிந்தது. பிறகு இலக்கைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா (56), சூரியகுமார் யாதவ் (44), எவின் லூயிஸ் (47) ஆகியோரது ஆதிக்கத்தினால் 170/2 என்று வெற்றி பெற்றது.
சுரேஷ் ரெய்னா தொடக்க ஷார்ட் பிட்ச் சோதனைகளைக் கடந்து வந்து 47 பந்துகளில் 75 ரன்கள் என்று இறுதி வரை நின்ற போதும் சென்னை எப்படி 185-190 ரன்களை எட்டாமல் போனது என்பது புரியாத புதிர்! தோனி மீண்டும் வைடான யார்க்கர் முயற்சி புல்டாஸை நீட்டிக் கொண்டு அடிக்க கவரில் எவின் லூயிஸ் கையில் போய் விழுந்தது, இது ஒரு திருப்புமுனை என்றால் மெக்லினாகன் இதே ஓவரில் பிராவோவுக்கு ஒரு ஏத்து ஏத்த பாயிண்டில் முடிந்தார், டக் அவுட்.
இந்த இரண்டு விக்கெட்டுகளினால் 143/2 என்று இருந்த சென்னை 144/4 என்று ஆனது.
அன்று பவன் நெகியிடம் எப்படி விக்கெட் கொடுக்க மனம் வந்ததோ ஷேன் வாட்சனுக்கு நேற்று 1 பவுண்டரியுடன் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து 5வது ஓவரின் 2வது பந்தில் குருணால் பாண்டியா பந்தை ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், தொடக்கத்தில் ஜஸ்பிரீத் பும்ரா தன் பவுன்ஸ் மூலம் அம்பாத்தி ராயுடுவின் பேட்டிங் தரத்தை சோதித்தார். ஆனால் பும்ராவை பிறகு வீசுவதற்காக உடனே கட் செய்தார் ரோஹித் சர்மா, ஒருவேளை தொடர்ந்து கொடுத்திருந்தால் வேறு ஒரு தரநிலை பவுலிங்கிற்கு எதிரான ராயுடுவின் பலம் தெரிந்திருக்கும், அவுட் கூட ஆகியிருப்பார்.
ஆனால் அதன் பிறகு ராயுடு அற்புதமாக ஆடினார், அப்படித்தான் அவர் ஆடி வருகிறார். பாண்டியா உண்மையில் நன்றாகவே வீசினார், பவர் ப்ளேயில் அவரது சிக்கன விகிதம் ஓவருக்கு 10 ரன்கள் என்றாலும் ரோஹித் அவரைக் கொண்டுவந்தார். 4 பந்துகள் 2 ரன்கள்தான், ஆனால் கடைசியில் ஒரு கூடுதல் பவுன்ஸ் கொண்ட பந்துக்கு எட்ஜ் பவுண்டரி ஒன்றையும் கடைசியில் மிக அருமையாக புல் லெந்த் பந்தை லாங் ஆஃப் மேல் சிக்ஸரும் அடிக்க ஸ்கோர் 6 ஓவர்களில் 51/1 என்று இருந்தது. முன்னதாக குருணால் பாண்டியாவையும் ஒரு பிளிக் சிக்ஸ் அடித்திருந்தார் ராயுடு, ரெய்னா இறங்கி தன் பாணியில் ஒரு குறுக்குசால் ஓட்டி மிட்விக்கெட்டில் குருணாலை ஒரு சிக்ஸ் அடித்திருந்தார்.
ரெய்னாவுக்கு கடும் ஷார்ட் பிட்ச் சோதனை கொடுக்கப்பட்டது, அருகில் 3 பீல்டர்களை நிறுத்தி அவரை குதிக்க வைத்தனர். ஆனாலும் நேராக அவரது உடலுக்கு ஷார்ட் பிட்ச் வீசவில்லை. இதனால் ஷார்ட் பைன் லெக் தாண்டி 2 பவுண்டரி அடித்தார், ஷார்ட் பிட்ச் சரியாக வீசத் தெரியவில்லை அல்லது நேற்று அமையவில்லை, இதனால் ரெய்னா செட்டில் ஆகி தனக்குச் சாதகமான, தூக்கத்தில் எழுந்து அடிக்கச் சொன்னால் கூட அடிக்கும் லாங் ஆன் மிட்விக்கெட் பகுதிகளில் ஒரு 40 ரன்கள் பக்கம் அடித்தார். மயங்க் மார்க்கண்டேயை ரெய்னா நேராக ஒரு பவுண்டரி பிறகு ஏறி வந்து லாங் ஆனில் ஒரு சிக்ஸ் விளாசினார். முதல் ஓவரில் 3 ரன்கள் கொடுத்த மார்க்கண்டே இந்த ஓவரில் 14 ரன்கள் கொடுத்தார். 10 ஓவர்களில் 91/1 என்று இருந்த போது ரெய்னா 17 பந்துகள்ல் 31 என்றும் ராயுடு 32 பந்துகளில் 45 என்றும் இருந்தனர்.
அதன் பிறகு மும்பை நடுஓவர்களை இறுக்கிப் பிடித்தது. ராயுடு 46 ரன்களில் குருணால் பாண்டியா பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 11வது ஓவரில் 6 ரன்கள், 12 வது ஓவரில் ராயுடு விக்கெட்டுடன் 2 ரன்கள், 13வது ஓவரில் பும்ரா அபாரமாக வீச தோனி, ரெய்னா இருந்தும் 1 ரன் மட்டுமே வந்தது. மீண்டும் 14வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே. 15வது ஓவரில்தான் தோனியிடம் சிக்கினார் பாண்டியா, லாங் ஆஃபில் பந்து நசுங்கிவிடும் போல் ஒரு அறை, பிறகு அசட்டுத்தனமாக தோனிக்கு ஒரு ஷார்ட் பிட்ச் முயற்சி செய்ய மிட்விக்கெட்டில் விளாசினார்.
மயங்க் மார்க்கண்டே ஓவரில் தோனிக்கு ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை இஷான் கிஷன் விட்டார்.. (உஷ்!) மறுபடியும் கிரிக்கெட்டின் எழுதப்படாத விதியின் படி கேட்ச் விட்டாலோ, ஸ்டம்பிங் விட்டாலோ என்ன ஆகும், தோனி அடுத்த பந்தை ஒரு ஸ்டெப் எடுத்து வைத்து லாங் ஆன் ஸ்டாண்ட்சுக்கு அனுப்பினார். அடுத்த ஓவரில் ரெய்னா பும்ராவின் இரண்டு மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 35 பந்துகளில் அரைசதம் கண்டார்.
மெக்லினாகன் திருப்பு முனை ஓவர்:
17 ஓவர்கள் முடிவில் 143/2. ரெய்னா, தோனி என்ற இறுதி ஓவர் விளாசல் ஜோடி களத்தில், ஆனால் மெக்லினாகன் வேறு சில யோசனைகளைத் தன் வசம் வைத்திருந்தார்.
18வது ஓவரில் தோனிக்கு அனைவரும் செய்யும் வைடு ஆஃப் திசை பந்தை வீசினார், இம்முறை இது புல்டாஸ், தோனி நீட்டிக்கொண்டு அடித்தார் டீப் கவரில் கேட்ச் ஆகி 26 ரன்களில் வெளியேறினார்
ரெய்னா ஒரு ரன் எடுத்து பிராவோவிடம் ஸ்ட்ரைக் கொடுக்க மெக்லினாகன் கூடுதல் பவுன்ஸ் செய்தார், பிராவோவின் புல்ஷாட் மார்க்கண்டேயிடம் லெக் சைடில் கேட்ச் ஆனது, டக் அவுட் ஆனார் பிராவோ. கடைசியில் பும்ரா ஷார்ட் பிட்ச்சை ரெய்னா ஒரு சிக்சர், மீண்டும் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியாவின் கடைசி பந்தில் இன்னொரு சிக்சரை ரெய்னா அடிக்க சென்னை அணி 169/5 என்று முடிந்தது. ரெய்னா 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 75 நாட் அவுட்.
ரோஹித், சூரியகுமார் யாதவ் அபாரம்:
காட்டடி மன்னன் எவின் லூயிஸ் சரியாக ஆடவில்லை, அவரது பேட்டிங் எடுபடவில்லை. 26 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார், ஆனால் அவருக்கென்றே வந்து சிக்கிய இம்ரான் தாஹிரை கவரில் ஒரு அரக்க சிக்சரையும் அதேஓவரில் லாங் ஆனில் பந்து இறங்குமா என்ற சந்தேகம் எழுமாறு இன்னொரு சிக்சரையும் அடித்தார் லூயிஸ்.
அடுத்த வாட்சன் ஓவரில் ரோஹித் சர்மா லாங் ஆஃபில் ஒரு கையில் சிக்ஸ் அடித்தார். அவரது பாட்டம் ஹேண்ட், மட்டையின் பவர் ஆகியவற்றினால் சிக்ஸ் ஆனது. பிறகு வாட்சனை ஸ்வீப் சிக்ஸ். இது ஸ்வீட் சிக்ஸ்.
முன்னதாக சூரிய குமார் யாதவ், எவின் லூயிஸ் திணறலுக்கு ஈடு கட்டி தனது அபாரமான பார்மைத் தொடர்ந்து பயன்படுத்தி 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்கள் விளாசி ஹர்பஜன் பந்தை புல் ஷாட் ஆட ஜடேஜா இடது புறம் ஓடி பிறகு டைவ் அடித்து கிளாஸ் கேட்சை எடுக்க ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 71/1 என்று நல்ல நிலையில் இருந்தது மும்பை.
அதன் பிறகு தோனியின் களவியூகத்துடன் விளையாடினார் ரோஹித் சர்மா, பிராவோவை ஒரு புல்ஷாட் பவுண்டரி, வாட்சனை தூக்கி அடித்த ஒரு பவுண்டரி என்று ரோஹித் தன்னை வெளிப்படுத்தினார். ஹர்திக் பாண்டியா வாட்சனின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சி லாங் ஆனில் அனாயசமாக ஒரு சிக்ஸ் அடித்தார்.
கடைசி 2 ஓவர்களீல் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்கூரை 4 பவுண்டரிகள் விளாசினார். அன்று பந்தை சாத்துக்குடியாகப் பிழிந்து டிவில்லியர்ஸுக்குக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டார், நேற்று ஃபுல் லெந்த்தில் வீசி ரோஹித்திடம் சிக்கினார். அதுவும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை ஸ்வீப் அடித்து பவுண்டரிக்கு அனுப்பியது தாக்கூர் ரக பவுலிங்கிற்கு ஒரு பாடம். இந்த ஷாட் ரோஹித் சர்மாவின் அரைசதமானது. 20வது ஓவரில் வெற்றி வந்தது. சாஹர் காயமடைந்ததும் ஒரு பின்னடைவுதான். ரோஹித் சர்மா ஆட்ட நாயகன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ