எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.22 - பொங்கல் தினத்தன்று இரவு சென்னை எழிலகத்தில் இயங்கி வந்த தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் தொழில் வணிக வரித்துறையின் தலைமை அலுவலகங்கள் திடீர் தீவிபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானதால், மக்கள் நலப்பணிகளை செய்து வரும் அந்த இரு அலுவலகங்களும் முறையே, சிந்தாதிரிப்பேட்டை மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கவும், அந்த அலுவலகளுக்கு தேவையான தளவாட சாமான்களும் வாங்க ரூ.2.46 கோடி நிதிஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமூகநலத்துறை இயக்குனரகம், மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனரகம் ஆகிய அரசு அலுவலகங்கள் இயங்கி வந்த சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள தொன்மை வாய்ந்த கட்டடத்தில் அரசு விடுமுறை தினமான 15.01.2012 அன்று நள்ளிரவு 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் சமூக நலத்துறை இயக்குனரகம் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனரகம் ஆகிய அலுவலகங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின. இவற்றிலிருந்த பல ஆவணங்கள், கோப்புகள், கணினிகள், மேஜை, நாற்காலி போன்ற அனைத்து தளவாடச் சாமான்களும் தீக்கிரையாகி உள்ளன. சமூக நலத்துறைக்கு இதன் மூலம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிற்கும் மற்றும் தொழில் வணிகத்துறை அலுவலகத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அலுவலகங்களின் பணிகள் பொதுமக்கள் சம்பந்தப்பட்டவை என்பதால், இப் பணிகளில் எவ்விதமான தொய்வும் ஏற்படாதிருக்க, உடனடியாக மாற்று இடங்களை தேர்வு செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் இயங்கிட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பணித்துள்ளார். இதன் அடிப்படையில் சமூகநலத்துறை அலுவலகம், சிந்தாதிரிப்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி கட்டடத்திலும், தொழில் வணிகத்துறை அலுவலகம், சென்னை ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள சவுத்கெனால் பேங்க் சாலையில் அமைந்துள்ள தொழில் கூட்டுறவு வங்கியின் தலைமையகத்திலும் உடனடியாக இயங்க ஆரம்பித்துள்ளன.
சமூகநலத்துறை இயக்குனரகம் மற்றும் தொழில் வணிகத்துறை அலுவலகம் ஆகியவை முழுவீச்சில் செயல்பட ஏதுவாக, சமூகநலத்துறை இயக்குனரகத்திற்கு தேவையான புதிய கணினிகள், மேசை, நாற்காலிகள், தளவாட சாமான்கள் மற்றும் எழுதுப் பொருட்கள் வாங்குவதற்காக முதற்கட்டமாக 96 லட்சம் ரூபாயும், இதேபோன்று, தொழில் வணிகத்துறை அலுவலகத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 2 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த தீ விபத்தில் அழிந்த பணியாளர்களின் பணிப்பதிவேடுகள் மற்றும் கோப்புகளை விரைந்து மீண்டும் உருவாக்கவும் ஆணையிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த துரித நடவடிக்கையின் மூலம், பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் சமூக நலத்துறையும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உதவித் திட்டங்கள், சுய வேலை வாய்ப்பு திட்டங்கள் போன்ற பல்வேறு மக்கள் நலப் பணிகளை ஆற்றிவரும் தொழில் வணிகத்துறை அலுவலகமும் விரைவில் முழு அளவில் செயல்படத் துவங்கும். மேலும், இத்தொன்மை வாய்ந்த கட்டடத்தின் உறுதித் தன்மையை கண்டறியவும் இதை போன்றே புதிதாக ஒரு கட்டடத்தை இந்த வளாகத்திலேயே கட்டுவது குறித்தும் அல்லது இதனை முன்பிருந்தது போன்ற பழைய நிலைக்கே மீளக் கொண்டு வந்து அதைப் போன்றே புதிதாக ஒரு கட்டடத்தைக் கட்ட இயலுமா என்பது குறித்தும் ஆய்வு செய்வதற்காக டாக்டர் ஏ.ஆர்.சாந்தகுமார், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் (ஓய்வு) ஆர்.கோபாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடம்) சி.பழனிவேலு, தலைமை நகர்ப்புற திட்ட அலுவலர் மற்றும் தொன்மைக் குழுமத்தின் தலைவர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து, அக்குழு தனது அறிக்கையினை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இக்குழு, சென்னை பெருநகரில் உள்ள இதர தொன்மை வாய்ந்த அரசு கட்டடங்களை ஆய்வு செய்து, அவற்றின் பாதுகாப்புத்தன்மை குறித்து அறிக்கை ஒன்றினை அளிக்கும்படியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இனி வருங்காலத்தில் அரசு கட்டடங்களில் தீ விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும்பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலக கட்டடங்களில் உள்ள தீயணைப்பு கருவிகளை காலமுறைப்படி பரிசோதனை செய்து, அவைகளை தீ விபத்துக்கள் ஏற்படும் சமயம் உபயோகிப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், அதேபோன்று, மின் சாதனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த அனைத்து இணைப்புகளையும் காலமுறைப்படி பரிசோதித்து, அதில் உள்ள குறைகளை கண்டறிந்து அவைகளை சரிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 19 hours ago |
மினி பான் கேக்6 days 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.