எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேட்டூர் : டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது தேசிய நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா ? என்று மேட்டூரில் பாசனத்திற்காக அணையை திறந்த பின் நிருபர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி கேள்வி தி.மு.க.வுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை தண்ணீரை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர். திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையை திறந்த பின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: எட்டுவழிச் சாலைக்காக மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருப்பது பற்றி...
பதில்: யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் ஊடக நண்பர்களும், தொலைக்காட்சி நண்பர்களும் ஒரு சில இடத்தில் செய்வதை வைத்து, பெரிதாக பூதாகரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் நில அளவுப் பணி நடைபெற்று முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். பசுமைவழிச் சாலைக்கு தேவையான நிலத்தை, நில உரிமையாளர்களிடமிருந்து, எல்லைக்கல் போடப்பட்டுள்ளதாக தகவல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நில உரிமையாளர்கள் முன்வந்து, எங்களுக்கு நிலம் எடுப்பதனால் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கின்றார்கள். ஒருசிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, நில உரிமையாளர்கள் பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பதனால், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை வைத்து தொலைக்காட்சி படம் எடுப்பது, பத்திரிகையிலே போடுவது, இதற்கென்று ஒரு கூட்டம் இருக்கின்றது. வளர்ச்சிப் பணியை இவர்கள் ஆதரிப்பதே கிடையாது. இந்த அரசை எதிர்க்க வேண்டும், இந்த அரசு கொண்டு வருகின்ற வளர்ச்சிப் பணியை முடக்க வேண்டும் என்பதுதான் அவர்கடைய நோக்கம்.
தி.மு.க. ஆட்சியில் பாதிக்கவில்லையா?
பசுமை வழிச்சாலை திட்டத்தில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்? அவசரம் இல்லை, அவசரம் என்ற பிரச்சினையே கிடையாது. அந்த நிதியை குறிப்பிட்ட காலத்தில் வாங்கிக் கொள்ளவேண்டும். ஏனென்றால், எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள், இரண்டாவது திட்டமாக இந்த பசுமை வழிச்சாலை திட்டம் இந்தியாவில் வருகிறது. பல்வேறு மாநிலங்கள் எங்களுக்கு கொடுங்கள், எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். மத்திய அரசை நாங்கள் கேட்டவுடனேயே கொடுத்தார்கள். ஆகவே, அந்த வாய்ப்பை நல்லமுறையிலே பயன்படுத்த வேண்டியது அரசினுடைய கடமை. இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம், மற்ற எதிர்க்கட்சியெல்லாம் சொல்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் டி.ஆர்.பாலு தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.
3005 ஹெக்டேர் நிலங்கள்...
அப்பொழுது, தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைக்கு 17 சாலைகள் எடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்பொழுதெல்லாம் விவசாயிகள் பாதிக்கவில்லையா? அப்பொழுது தமிழகத்தினுடைய வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 7 லட்சம், இன்றைய தினம் 2 கோடியே 57 லட்சம். இந்தத் திட்டம் நிறைவு பெறுவதற்கு இன்னும் ஐந்தாண்டு காலம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலே 14 லட்சம் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, 2.57 லட்சம் இருக்கின்றது. ஐந்தாண்டு காலம் நிறைவுபெறுகின்றபொழுது, 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். ஆக மொத்தம், 3.27 லட்சம் வாகனங்கள் உயர்ந்து விடும். எனவே, அதற்குத் தேவையான சாலை வசதி தேவை. இவர்களுடைய காலத்தில் சாலை போட்டால், மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா ? நிலம் எடுத்தால் பாதிக்கப்படமாட்டார்களா ?
60 கிலோ மீட்டர் ...
ஆனால், இன்றைக்கு அம்மாவினுடைய அரசு, மத்தியிலிருந்து போராடி, வாதாடி, நிதி உதவி பெற்று இந்த சாலையை அமைக்கின்றது. இந்த சாலையை அமைப்பதின் மூலமாக சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு 60 கிலோ மீட்டர் குறைவாகிறது. பயண நேரம் குறைகிறது. இதனால் தொழில்வளம் பெருகும். இன்னும் பல்வேறு தொழிற்சாலைகள் நம்முடைய பகுதிக்கு கொண்டு வந்து, படித்து, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டியது அரசினுடைய கடமை. இப்படிப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் புதிய, புதிய தொழிற்சாலைகள் வரும். அதற்காகத்தான் இந்தத் திட்டத்தை அம்மாவினுடைய அரசு கொண்டு வந்திருக்கிறது.
கேள்வி: கிட்டத்தட்ட 2.50 கோடி வாகனங்கள் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அதில் 2 கோடி வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் தானே ?
பதில்: தவறு. 2006-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரை உளுந்தூர்பேட்டை, கிருஷ்ணகிரி சாலை என இரண்டு சாலை இருந்தது. அப்பொழுது கனரக வாகனம் 17 லட்சம்தான் இருந்தது. இன்றைய தினம் 23 லட்சம் கனரக வாகனங்கள் உயர்ந்து 40 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் அதிகமாவதால், உயிரிழப்புகள் அதிகமாகிறது. இந்த சாலையை பொறுத்தவரைக்கும், நவீன, தொழில்நுட்பத்துடன் கூடிய சாலை. மற்ற சாலையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். விபத்துக்கள் குறைக்கப்படுகிறது. விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை.
இழப்பீட்டுத் தொகை...
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சில் நில எடுப்பிற்கான இழப்பீட்டுத் தொகை குறைவாகக் கொடுத்தார்கள். இன்று அம்மாவினுடைய ஆட்சிக் காலத்தில், நிலத்தின் வழிகாட்டு மதிப்பை 66 சதவிகிதம் உயர்த்தி விட்டோம். அதற்குமேல் கூடுதலாகக் கொடுக்கின்றோம். அதுமட்டுமல்ல, அவர்களுடைய நிலங்களிலிருக்கின்ற தென்னை மரங்களின் வயதிற்கு ஏற்றவாறு, சுமார் ரூபாய் 50 ஆயிரம் வரைக்கும் விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்கள் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு, வீடுகளுக்கு, பாசனக் கிணறுகளுக்கு, ஆழ்துளைக் கிணறுகளுக்கு, மாட்டுக் கொட்டகை, தக்க இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். எந்தவகையிலும் நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அரசு கண்ணும், கருத்துமாக இருந்து மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவின் அடிப்படையில் கணக்கீடு பணி செய்து, இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும்.
விவசாயம், பொருளாதார...
அதுமட்டுமல்ல, கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களின் நிலம் கையகப்படுத்தும் போது, உடனடியாக அந்தப் பகுதி மக்களுக்கு வீட்டு மனை கொடுத்து, வீடுகளும் கட்டித்தரப்படும். இன்றைக்கு சேலம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அதற்கு பட்டா கொடுத்துள்ளார்கள். அரசைப் பொறுத்தவரைக்கும், மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது, அதே நேரத்தில், நம்முடைய தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். விவசாயம், பொருளாதார வளர்ச்சி இரண்டையும் அம்மாவினுடைய அரசு கவனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.