முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் கரையை கடந்தது டிட்லி புயல் - 8 பேர் பலி: 3 லட்சம் பேர் வெளியேற்றம்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர் : வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த டிட்லி புயல் நேற்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கரையைக் கடந்தது. புயல் தாக்கிய பகுதியில் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிட்லி புயல் தற்போது ஒடிசாவிலிருந்து தெற்கு - தென்கிழக்கு திசையில் 280 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இது ஆந்திர மாநிலத்தையொட்டி ஒடிசாவின் கோபால்பூர் - கலிங்கப்பட்டினம் இடையே 11-ம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங் களில் தங்க வைக்கும் பணிகளில் ஒடிசா மாநில அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். கடலோர பகுதிகளான கஞ்சம், புரி, குர்டா, கேந்திரபுரா, ஜக்த்சிங்பூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சம் பேரும், ஆந்திராவில் சுமார் ஒரு லட்சம் பேரும் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசா அருகே, ஒடிசா மாநில எல்லை பகுதியில் நேற்று அதிகாலை காலை கரையை கடந்தது. அப்போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் மரங்கள் வேறோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. வீட்டின் கூரைகளும் தூக்கி வீசப்பட்டன. இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 30 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஆயிரத்து 112 முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கஞ்சம் மற்றும் ஜெகத்சிங்பூரில் கர்ப்பமான பெண்கள் 105 பேர் மருத்துவமனையில் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கட் கிழமை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளி்ல் 45 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பிரிந்து பணியாற்றி வருகின்றனர். இதனிடை புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து