முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி பதவி உயர்வு பெற்று நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து வந்த இந்திரா பானர்ஜியை அண்மையில் கொலீஜியம் அமைப்பு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு அளித்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீதிபதி இந்திரா பானர்ஜி நேற்று டெல்லியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், வினீத் சரண் ஆகியோரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.

நீதிபதி இந்திரா பானர்ஜி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பானுமதி, இந்து மல்ஹோத்ரா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து