முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் உடல்நலக்குறைவு மத்திய அமைச்சர் அனந்தகுமார் மருத்துவமனையில் அனுமதி

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு,உடல்நலக்குறைவு காரணமாக மத்திய ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அனந்தகுமார்  உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். பிறகு உடல்நிலை சீரான நிலையில் இந்தியா திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கும் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பெங்களூருவுக்கு வந்து அனந்தகுமாரின் உடல்நிலை, மற்றும் அவருக்கு  அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறிந்து மருத்துவர்களிடம் விசாரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து