எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : அம்மா முதல்வராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலை பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழகம்தான் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சேலம், சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, தாரமங்கலம் புதிய புறவழிச் சாலை மற்றும் மேம்பாலங்களை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
நீண்டகாலமாக தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற பொதுமக்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோரின் ஒட்டுமொத்தக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தாரமங்கலம் புறவழிச் சாலையையும், இரண்டு பாலங்களையும் இன்று திறந்து வைக்கின்றேன். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சாலை உள்கட்டமைப்பு என்பது மிகமுக்கியமான ஒன்றாகும். எந்தவொரு மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு சிறந்து விளங்குகின்றதோ அந்த மாநிலம் தொழில் வளம் நிறைந்த சிறந்த மாநிலமாக இருக்கும். எனவே, நம்முடைய தமிழ்நாடு சாலை மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்து விளங்கியிருக்கின்றது. சிறந்த உள்கட்டமைப்பு உள்ள மாநிலம் என்று சொன்னால் அது தமிழ்நாடு என்று பெயர் சொல்கின்ற அளவிற்கு அம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலைப் பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கின்ற மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டத்தின் சார்பாக சங்ககிரி சட்டமன்றத்திற்கு உட்பட்ட தாரமங்கலத்தில் ரூபாய் 24 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 3.110 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தாரமங்கலம் புதிய புறவழிச் சாலை மக்களின் ஆசியோடும், அம்மாவின் அருளாசியோடும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புறவழிச் சாலை ஓமலூர், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி சாலை கிலோமீட்டர் 9/240 பெரியபட்டியில் துவங்கி, கிலோ மீட்டர் 15/300 தொட்டம்பட்டியில் முடிவடைகின்றது. சேலம் நெடுஞ்சாலைத் துறையின் நபார்டு மற்றும் புறவழிச் சாலை கோட்டத்தின் சார்பில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், கோணசமுத்திரம் ஊராட்சி, வடகரை வாய்க்கால் நரிமேடு சாலை ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டிலும் மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், ஓலைப்பட்டி ஊராட்சி, தொலசம்பட்டி சாலை ரூபாய் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூபாய் 5 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய பாலங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், ஓமலூரிலிருந்து மேட்டூர் வரைக்கும் உள்ள ரயில்வே கடவுகளின் இருபுறங்களிலும் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சட்டப்பேரவை உறுப்பினர்களும், பொதுமக்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தொலசம்பட்டியில் ரூபாய் 18.44 கோடியில் ரயில்வே மேம்பாலம், முத்தநாயக்கன்பட்டியில் ரூபாய் 15.94 கோடியில் ஒரு ரயில்வே மேம்பாலம், ஜே.எஸ்.டபுள்.யூ என்ற தொழிற்சாலைக்கு அருகிலே ரூபாய் 19.34 கோடி மதிப்பீட்டில் ஒரு உயர்மட்ட மேம்பாலம், புஞ்சாண்டியூரில் ரயில்வே கடவின் குறுக்கே ஒரு மேம்பாலமும் விரைந்து கட்டிக் கொடுத்து, மக்களுடைய பயன்பாட்டிற்கு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக, திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூர் வரை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தி போக்குவரத்து நெரிசலற்ற சாலையாக உருவாக்கித் தரப்படும். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக ஓமலூர் - மேச்சேரி சாலையில் ஓமலூர் முதல் மேச்சேரி வரை 14.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4 வழிச் சாலை அமைப்பதற்கு அம்மாவினுடைய அரசு திட்டமிட்டு அந்தப் பகுதியும் வளர்ச்சியடைவதற்கு விரிவுபடுத்தப்படும். பவானி-மேட்டூர், மேட்டூர் - தொப்பூர் பகுதிகளில் செல்கின்ற வாகனங்கள் தங்கு தடையின்றி செல்வதற்கு அம்மாவின் அரசு அந்த சாலைகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கின்றது.
சாலை அமைக்கும் போது, நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால், மனமுவந்து நிலம் கொடுத்தால் தான் இது போன்ற சாலைகளை அமைத்து, விபத்து, விலைமதிக்க முடியாத உயிர்ச் சேதம், பயண நேரம் ஆகியவற்றை குறைக்க முடியும், எரிபொருளும் மிச்சப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தான் எங்களுடைய லட்சியம். அம்மா காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். நான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சாலைகளை சீரமைத்திருக்கின்றோம். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
ஹரா திரைப்பட இசை வெளியீடு
13 May 2024கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது