எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஐபிஎல் நடத்தை விதிமுறையில் படிநிலை ஒன்றின் கீழ் விதி 2.5-ஐ ராணா மீறியுள்ளார். அவர் தனது விதிமீறலை ஒப்புக் கொண்டு அதற்கான அபாராதத் தொகையை கட்ட சம்மதித்துள்ளார். படிநிலை ஒன்றில் வீரர் ஒருவர் விதிமீறலில் ஈடுபட்டால், நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வாலை ஆட்டமிழக்கச் செய்தபோதும், இதே விதிமீறலில் ஈடுபட்ட ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வருகிற மே 3 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாட ஹர்ஷித் ராணாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
___________________________________________________
மும்பை அணி குறித்து கிளார்க்
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமை இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்டில் அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவார்களா என எனக்குத் தெரியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் நாம் வெளியில் பார்ப்பதைக் காட்டிலும் அணிக்குள் நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருப்பதாக நினைக்கிறேன். சிறந்த வீரர்கள் பலரை அணியில் வைத்துக் கொண்டு மும்பை அணி தொடர்ச்சியாக வெற்றி பெறத் தவறுகிறது.
அணியில் அவர்களுக்குள் ஒற்றுமையில்லை என நினைக்கிறேன். அந்த அணியில் ஏதோ ஒரு விஷயம் தவறாக இருக்கிறது. அவர்கள் ஒன்றாக இணைந்து அணியாக விளையாடவில்லை. தனிநபர்கள் சிறப்பாக செயல்பட்டால் மும்பை அணியால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற முடியும். ஆனால், இது போன்ற பெரிய தொடர்களை வெல்ல வேண்டுமென்றால் தனிநபரின் செயல்பாடுகளைக் காட்டிலும் ஒரு அணியாக ஒற்றுமையாக செயல்படுவது அவசியம் என நினைக்கிறேன் என்றார்.
___________________________________________________
அடுத்த சுற்றில் மெத்வதெவ்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றார். மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர், 6-1, 6-0 என, உள்நாட்டு வீராங்கனை சாரா சொரைப்ஸ் டோர்மோவை எளிதாக வீழ்த்தினார். அடுத்ததாக காலிறுதியில், பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயாவை சந்திக்கிறார் ஸ்வியாடெக். போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் மாயா, 6-4, 6-4 என்ற நேர் செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் மரியா சக்காரியை வென்று அவருக்கு அதிர்ச்சி அளித்தார். போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுர் 6-0, 6-4 என்ற செட்களில், 9-ஆம் இடத்திலிருந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை வெளியேற்றினார்.
உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-1, 6-7 (5/7), 6-4 என்ற செட்களில், அமெரிக்காவின் ராபின் மான்ட்காமெரியை போராடி வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளார். அதில் அவர், மற்றொரு அமெரிக்கரான டேனியல் காலின்ஸுடன் மோதுகிறார். 13-ஆம் இடத்திலிருக்கும் காலின்ஸ் முந்தைய சுற்றில் 3-6, 6-4, 6-1 என்ற கணக்கில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை சாய்த்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 5-7, 7-6 (7/4), 6-3 என்ற செட்களில், 25-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை வெளியேற்றினார். இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்திருக்கும் மெத்வதெவ், அதில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்லிக்கை சந்திக்கிறார். போட்டித்தரவரிசையில் 17-ஆவது இடத்திலிருக்கும் பப்லிக், 3-6, 7-6 (7/2), 6-4 என்ற செட்களில், 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பென் ஷெல்டனை வென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்3 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்6 days 2 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 3 days ago |
-
ராஜீவ் காந்தி நினைவு தினம்: ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரசார் மலரஞ்சலி
21 May 2024காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மலர் வளையம் வைத்து அஞ்சல
-
சென்னை பிராட்வே பஸ் நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு
21 May 2024சென்னை, நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள சென்னை பிராட்வே பஸ் நிலையத்திற்கான மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-
காவிரி ஆணைய தீர்மான நகல்களை கொளுத்தி தஞ்சையில் போராட்டம் நடத்திய விவசாயிகள்
21 May 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் மேகதாது அணைக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-05-2024.
21 May 2024 -
குழந்தையின் பாலினத்தை வலைதளங்களில் அறிவித்த பிரபல யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
21 May 2024சென்னை, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.
-
திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
21 May 2024திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா வெகுவிமர்சையாக நடக்கிறது.
-
ரிசர்வ் வீரர்கள் அறிவிப்பு
21 May 202420 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் இந்த முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
-
இப்ராகிம் ரைசி மரணம்: ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
21 May 2024டெக்ரான், ஈரான் நாட்டின் 14-வது அதிபர் தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தீவிர காற்று சுழற்சி: சிங்கப்பூர் சென்ற விமானத்தில் திடீர் நடுக்கத்தால் பயணி பலி
21 May 2024பாங்காக், லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம், தீவிர காற்று சுழற்சி காரணமாக மேகங்களில் உரசியதால் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கனமழை எதிரொலி: முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் : 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
21 May 2024பெரியகுளம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
சுவாதி மாலிவால் வழக்கு: செல்போன் தரவுகளை மீட்க கெஜ்ரிவாலின் உதவியாளருடன் மும்பை விரைந்த போலீசார்
21 May 2024புதுடெல்லி : சுவாதி மாலிவால் வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் உதவியாளரின் செல்போன் தரவுகளை மீட்டெடுக்க போலீசார் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.
-
ஈரான் அதிபர் இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி பங்கேற்பு
21 May 2024புதுடெல்லி : இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பிரிட்டன் தேர்தலில் இந்தியர் போட்டி
21 May 2024லண்டன், தெலுங்கானாவில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் உதய் நாகராஜூ என்பவர், அந்நாட்டு பார்லிமென்ட் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.
-
15-வது ஆண்டு விழா: மல்லை தமிழ் சங்கத்துக்கு : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 May 2024சென்னை, 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மல்லை தமிழ் சங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்குத் தொண்டு செய்வோர் தாழ்வதில்லை என்று தெரிவித்துள
-
குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய வெளியுறவு துறைக்கு சிவ்தாஸ் மீனா கடிதம்
21 May 2024சென்னை : குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார்.&nb
-
தொடர் மழை எதிரொலி: கொடைக்கானலில் படகு போட்டி 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
21 May 2024கொடைக்கானல், தொடர்மழையால் கொடைக்கானலில் நேற்று நடைபெறுவதாக இருந்த படகுப் போட்டி வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்களுக்கு நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்
21 May 2024பெங்களூரு, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
-
சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு
21 May 2024துபாய், சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
நாடு கடத்தும் வழக்கு: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசேஞ்ஜிற்கு லண்டன் ஐகோர்ட் உத்தரவு
21 May 2024லண்டன், விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் வழக்கில் மேல்முறையீடு செய்ய லண்டன் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
-
கோடை விடுமுறையையொட்டி நெல்லை - பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு
21 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி நெல்லை-பெங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
-
பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: தமிழ்நாடு அரசு பெருமிதம்
21 May 2024சென்னை, இல்லம் தேடிக் கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் நாட்டிலேயே தமிழக கல்வித்துறை தலைசிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
காசாவில் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலை செய்யவில்லை: அதிபர் ஜோபைடன் பேச்சு
21 May 2024வாஷிங்டன், காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப் படுகொலை செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
-
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
21 May 2024கோவை, கர்நாடக மாநிலம், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரண்டு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகம
-
ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு இன்று ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
21 May 2024புதுடெல்லி : ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் இன்றைக்கு ஒத்தி வைத்துள்ளது.
-
ஜூன் 4-ல் இண்டியா கூட்டணிக்கு பெரிய அடி நிச்சயம்: பிரதமர் மோடி
21 May 2024பாட்னா, ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் சனாதனத்தை எதிர்க்கும் இண்டியா கூட்டணிக்கு ஜூன் 4-ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போது பெரிய அடி நி