முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் மனித வெடிகுண்டு வெடித்து 10 பேர் பலியாயினர் காபூல்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      உலகம்

ஏப்.15-ஆப்கானிஸ்தான் நாட்டில் அஸ்மார் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் அதிகம் உள்ளனர். இப்பகுதியில் தீவிரவாதிகளுடன் ஆப்கன் மற்றும் அமெரிக்க படையினர் போரிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இப்பகுதியில் பழங்குடியின தலைவர்கள் கூட்டம் நடைபெற்ற போது மனித வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாயினர். 7 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில் அரசுக்கு ஆதரவாக செயல்படும் பழங்குடியின தலைவர்களை பழிவாங்குவதற்காக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. பழங்குடியின தலைவரை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவிக்க வந்த தஹ்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்துள்ளான். ஆனால் இந்த தாக்குதலுக்கு தல்பான்கள் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்