முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி: ஷியாமல் கோஷ் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - கடந்த 2002ல் நடைபெற்ற 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை செயலர் ஷியாமல் கோஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது ஷியாமல் கோஷூக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஷியாமல் கோஷ் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஷைனி, ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 
இதற்கிடையே 2 ஜி விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்திருந்த மற்றொரு வழக்கில் சிபிஐ தரப்பு கூடுதல் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தவர்களின் விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் உதவி செயலராக தற்போது பணியாற்றி வரும் நவில் கபூர் சாட்சியம் அளித்தார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஷைனி ஒத்தி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து