எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி - ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் 80 வயதான சவுதாலா 10 ஆண்டுகள் அதாவது 2023 வரை சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் முன்னாள் தலைவரான இவர் கடைசியாக 1999ம் ஆண்டு முதல் 2005 வரை முதல்வர் பொறுப்பை வகித்தார். அரியானாவில் 1999- 2000ம் ஆண்டு 3206 பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் ஆவணங்களை திருத்தியும், போலி ஆவணங்கள் கொடுத்தும் இளநிலை ஆசிரியர்கள் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் தகுதியற்ற 3 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
இது பற்றி சிபிஐ விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் மற்றும் 53 பேர் ஆசிரியர் தேர்வு முறைகேடுகளில் நேரடியாக தொடர்பு வைத்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து உரிய ஆதாரங்களுடன் டெல்லி சிபிஐ கோர்ட்டில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
டெல்லி சிபிஐ கோர்ட் இந்த வழக்கில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தீர்ப்பை வெளியிட்டது.
ஓம் பிரகாஷ் சவுதாலா ஊழல் செய்ததற்கு ஆதாரம் இருப்பதாக கூறிய சிபிஐ கோர்ட் அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அரசு பதவியை சட்டவிரோதமாக பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளதால் சவுதாலாவுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை கொடுக்கப்படுவதாக நீதிபதி தன் தீர்ப்பில் கூறினார்.
சவுதாலாவின் மகன் மற்றும் மேலும் 8 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 44 பேருக்கு தலா 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ஒரு நபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஓம் பிரகாஷ் சவுதாலா தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அதில் அவர் தனது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு தண்டனை காலத்தை குறைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதற்கிடையே அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அனுமதி பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்து பிரச்சாரம் செய்தார். அவர் விதிகளை மீறியதாக கூறியதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுதாலாவின் அப்பீல் மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வந்தது. தண்டனை காலத்தில் சவுதாலா ஜெயிலில் நடந்து கொண்ட விதம் பற்றி நீதிபதிகள் கேட்டறிந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று நீதிபதிகள் தீர்ப்பை வெளியிட்டனர்.
அதில் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலா உட்பட 55 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனை உறுதிப்படுத்தப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
சவுதாலாவின் வயதை கருத்தில் கொண்டு கருணை காட்ட இயலாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஏமாற்றுதல், மோசடி செய்தல், போலி ஆவணங்களை பயன்படுத்தி சதி செய்தல், அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்தல் உட்பட பல குற்றச்சாட்டுகள் இருப்பதால் சவுதாலா மற்றும் குற்றவாளிகள் தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது என்று டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் 80 வயதான சவுதாலா 10 ஆண்டுகள் அதாவது 2023ம் ஆண்டு வரை ஜெயிலில் இருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.