எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் - உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. உலக கோப்பை இறுதி போட்டியில், முக்கியமான நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 184 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய ஆஸ்திரேலியா, ஆரம்பத்திலேயே ஆரோன் பின்ச் விக்கெட்டை டக் அவுட்டில் இழந்தாலும், கேப்டன் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் தயவால் அதிரடியாக ஆடி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆகியது.
முன்னதாக, உலக கோப்பை பைனலில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நியூசிலாந்து அணி உலக கோப்பை பைனலை, பதற்றத்தோடு ஆட ஆரம்பித்ததன் விளைவு, முதல் ஓவரிலேயே அதிரடி வீரரும், அந்த அணி கேப்டனுமான மெக்கல்லத்தை இழந்தது. எனவே, மார்டின் கப்திலும், வில்லியம்சனும் நிதானமாக ஆட ஆரம்பித்தனர். எனவே, முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்களின் ஆதிக்கமே இருந்தது.
10 ஓவர்களில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், அதன்பிறகும், விக்கெட் சரிவை தடுக்க முடியவில்லை. அணியின் ஸ்கோர் 11.2 ஓவர்களில் 33ஆக இருந்தபோது மார்டின் கப்திலும் (15 ரன்), 12.2 ஓவர்களில் ஸ்கோர் 39ஆக இருந்தபோது, வில்லியம்சனும் (12 ரன்) அவுட் ஆகினர். கப்திலை மேக்ஸ்வெல் பௌல்ட் செய்தார். வில்லியம்சன், ஜான்சன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார்.
இதனால் நியூசிலாந்து தடுமாற்றமடைந்தது. டைலரும், எலியட்டும் நிதான ஆட்டத்தால் அதை சரிகட்ட முயன்றனர். இருவரும் 69 பந்துகளில் 50 ரன் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர். ஆட்டத்தின் பாதியான 25 ஓவர்களில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களை எடுத்திருந்தது. இதன்பிறகு சற்று வேகம் பிடித்த பேட்டிங் 35 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. அப்போது, டைலர்-எலியட் ஜோடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் கடந்தது.
ஆனால், அடுத்த ஓவரிலேயே, டைலர் 40 ரன்களில் நடையை கட்டினார். அதே ஓவரிலேயே கோரி ஆண்டர்சனும் டக் அவுட் ஆனார். இதற்கடுத்த ஓவரில் ரோன்ச் டக் அவுட் ஆனார். 150 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் பவர் பிளேயை ஆரம்பித்த நியூசிலாந்து 151 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது.
இதனிடையே சிறிது நேரம் நின்ற டேனியல் வெட்டோரி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்சன் பந்தில் பௌல்ட் ஆனார். பொறுத்து பார்த்த எலியட்டும் 83 ரன்களில் அவுட் ஆனார்.
171 ரன்களுக்கு 8 விக்கெ்ட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாநதை அதன்பிறகு எழவிடவில்லை ஆஸ்திரேலியா. மேட் ஹென்ட்ரி டக் அவுட் ஆன நிலையில், 11 ரன்கள் எடுத்திருந்த டிம் சவுத்தியை அருமையாக ரன் அவுட்செய்தார் மேக்ஸ்வெல். இதனால் 45 ஓவர்களிலேயே நியூசிலாந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 184 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆஸ்திரேலியா விரட்டலை தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 1.4 ஓவர்களில் 2 ரன்களாக இருந்தபோது, ஆரோன் பின்ச், டரெண்ட் பவுல்ட் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணியினரும், ரசிகர்களும், கொண்டாட்டத்தில் திளைத்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சியை வார்னர் நீடிக்கவிடவில்லை. தனது வழக்கமான அதிரடியால் நியூசிலாந்து பந்து வீச்சை திணறடித்தார்.இதனால் 11 ஓவர்களில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 58 ரன்கள் எடுத்திருந்தது.
வார்னர் 40 ரன்களுடனும், ஸ்மித் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆனால், அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 45 ரன்களில், ஹென்ட்ரி பவுன்சரில், எலியட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது 12.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா 63 ரன்களை எடுத்திருந்தது. எனவே நியூசிலாந்து மீண்டும் ஆட்டத்திற்குள் வர வாய்ப்பு கிடைத்தது.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் இதைத் தொடர்ந்து களமிறங்கினார். முதலில் சிறிது பதற்றத்தோடு ஆடிய கிளார்க், பிறகு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே நியூசிலாந்தால் ஆஸ்திரேலியாவை நெருக்கடிக்குள்ளாக்க முடியவில்லை. 29 ஓவர்கள் முடிவிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 151 ரன்களை எடுத்திருந்தது.
வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, 74 ரன்கள் எடுத்திருந்த கிளார்க் ஹென்ட்ரி பந்தில் பௌல்ட் ஆகினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக கைதட்டலுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை கொடுத்தனுப்பினர். கிளார்க் அவுட் ஆனபோது ஆஸ்திரேலியா 175 ரன்களை எடுத்து வெற்றியை நெருங்கியிருந்தது. வாட்சனும், ஸ்மித்தும் இணைந்து 33.1 ஓவரில், வெற்றியை உறுதி செய்தனர்.
இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் சதம் அடித்த ஸ்டீவன் ஸ்மித் இப்போட்டியிலும் அருமையாக ஆடி 56 ரன்களுடனும், வாட்சன் 2 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். நியூசிலாந்து தரப்பில் ஹென்ட்ரி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியோடு ஆஸ்திரேலியா 5-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்38 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 3 hours ago |
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி
15 May 2024மதுரை : மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்
15 May 2024புதுடெல்லி : மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பஸ்: ஆந்திராவில் 6 பேர் உடல் கருகி பலி
15 May 2024அமராவதி : ஆந்திராவில் லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
15 May 2024புதுடெல்லி : செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு இன்றைக்கு ஒத்திவைத்துள்ளது.
-
வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல: இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
15 May 2024காந்திநகர் : வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் நான் அல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரி