எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு எந்தவித அடிப்படை பணிகளையும் செய்யாமல் நேற்று அண்ணா தி.மு.க. ஆட்சி மீது குறை சொல்வதா? என்று சட்டசபையில் தி.மு.க.வுக்கு மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார். உடன்குடி அனல் மின் நிலைய திட்டத்தை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தவர் அம்மா என்றும் அமைச்சர் கூறினார்.
சட்டசபையில் நேற்று உடன்குடி அனல் மின் நிலையம் நிறைவேற்றப்படாதது குறித்து மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), தங்கவேல் மார்க்சிஸ்ட், ஆறுமுகம் கம்யூனிஸ்ட், கணேஷ் குமார் பா.ம.க., ஜவாஹிருல்லாஹ் மனித நேய மக்கள் கட்சி ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்கள்.இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் விளக்கம் அளித்தார்.
உடன்குடி அனல்மின் நிலைய திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு கால தாமதம் ஏன்? டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்? மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரும் சூழ்நிலை ஏற்பட்டது ஏன்? என்றெல்லாம் இங்கே கேட்டார்கள். இது நியாயமான கேள்வி தான். பதில் சொல்ல வேண்டியது அரசு கடமை என்று கூறி அமைச்சர் நத்தம் விசுவநாதன் நீண்ட விளக்கம் அளித்து பேசினார்.
அம்மா ஆட்சிக்கு வந்ததும் 650 மெகாவாட் திறன் கொண்ட 5 யூனிட்டுகளை நிறுவ முடிவு எடுத்து அறிவித்தார். அம்மாவின் பகீரத முயற்சி காரணமாக எண்ணூர் விரிவாக்க திட்டத்தில் 650 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு நிறுவ ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடந்தன. இதனை தொடர்ந்து 800 சிறப்பு பொளாதார மண்டத்தில் 650 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் துவங்க முடிவு செய்யப்பட்டு, அந்த பணிகளும் நடைபெற்று வருகின்றன.
3வது 650 மெகாவாட் திறன் கொண்ட 2 யூனிட் உற்பத்தி செய்வதற்கு டெண்டர்கள் கோரப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
இங்கு மு.க.ஸ்டாலின் பேசும்போது, 2007ம் ஆண்டு எங்கள் தலைவர் (கருணாநிதி) அறிவித்த திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லையே என்று கேட்டார். 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நீங்கள் (தி.மு.க.) ஆட்சியில் இருந்தீர்கள். நீங்கள் நினைத்திருந்தால், 4 ஆண்டுகளில் இந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்க முடியும். நீங்கள் இந்த திட்டத்தை அன்றைக்கே நிறைவேற்றி இருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது.
நீங்கள் 4 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? இந்த திட்டத்திற்கு அடிக்கல் மட்டும் நாட்டினீர்கள். வேறு எந்த பணியையும் செய்ய வில்லை. இந்த திட்டத்தை நிறைவேற்ற பெல் நிறுவனத்திற்கு நிலத்தை பெற்று தர வேண்டாமா? தனியாரிடமிருந்து நிலத்தை வாங்க ஒரு வருவாய் அலுவலரை நீங்கள் நியமித்தது உண்டா? 4 ஆண்டுகளாக நிலத்தை கையகப்படுத்த எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்கவில்லை. உள்நோக்கத்துடன் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டீர்கள்.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எரிபொருள் தேவை. அதாவது, இந்த திட்டத்திற்கு நிலக்கரி வாங்குவதற்கு மத்திய அரசிடமிருந்து பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மத்தியில் ஆட்சியில் நீங்கள் அங்கம் வகித்தீர்கள். உங்களது செல்வாக்கை பயன்படுத்தி நிலக்கரி பெறுவதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டுமா? வேண்டாமா? அதனையும் செய்யவில்லை. 3வது சுற்றுசூழல் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி பெறவும் 4 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் நீங்கள் எடுக்கவில்லை. 4–வதாக பங்கு மூலதனம் பெற நிதி நிறுவனத்தை நீங்கள் கண்டு அறியவில்லை
.
சர்க்கரை என்று தாளில் எழுதி வைத்தால் அது இனிக்குமா? அப்படி தான் நீங்கள் திட்டத்தை அறிவித்து அடிக்கல் நாட்டி விட்டு 4 ஆண்டு காலம் எந்த பணியையும் செய்யவில்லை. (அப்போது மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து கூச்சல் எழுப்பினார்கள்) குற்றம் உள்ள நெஞ்சு ஏன் குறுகுறுக்கிறது. (மீண்டும் தி.மு.க.வினர் கூச்சல்) என்னை பதில் சொல்ல விடுகிறீர்களா? இல்லையா? நீங்கள் குற்றச்சாட்டை சொல்கிறீர்கள்.
அதற்கு நான் பதில் சொல்ல வேண்டாமா? உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த தாசில்தாரை நியமித்தவர் அம்மா. நிலத்தை கண்டறிய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுற்றுச்சூழல், நிலக்கரி பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையெல்லாம் செய்திருந்தால் பெல் நிறுவனம் பணியை துவக்கி இருக்கும். 4 ஆண்டுகளாக எதையும் நீங்கள் செய்யவில்லை. அப்படியே இந்த திட்டத்தை மறந்து விட்டீர்கள். திட்டத்தை குழித்தோண்டி புதைத்து விட்டீர்கள். (மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு முற்பட்டார்) உங்களால் இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
4 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. நீங்கள் கிடப்பில் போட்ட இந்த திட்டத்தை அம்மா கண்டறிந்து இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார். 24.2.2012 அன்று உடன்குடி அனல்மின் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு பணியாக துவங்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய 19.11.2012 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. நீங்கள் செய்ய தவறியதை அம்மா செய்திருக்கிறார்.
(தி.மு.க.வினர் மீண்டும் எழுந்து கடும் கூச்சல்) நான் சொல்லும் பதிலை கேளுங்கள். நீங்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொன்னால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது. என்னை பதில் சொல்ல விடுங்கள். நீங்கள் செய்ய தவறியதை அம்மா செய்திருக்கிறார். உடன்குடி மின் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த அம்மா வருவாய் அலுவலரை நியமித்தார். நீங்கள் அந்த நிலத்தை அன்றைக்கே கையகப்படுத்தி இருந்தால் இன்று இந்த நிலை ஏன்? இதேபோன்று சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு ஒன்றரை ஆண்டு காலம் ஆகி இருக்கிறது. நீங்கள் இதனை அன்றே செய்திருந்தால், இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. (மீண்டும் தி.மு.க.வினர் கடும் கூச்சல்). கூச்சல் போடுவதா?
நான் சொல்வதை கேட்க உங்களுக்கு விருப்பம் இல்லையா? இப்படி கூச்சல் போடுவதை நிறுத்துங்கள். நீங்கள் செய்ய தவறியதை அம்மா செய்திருக்கிறார். உடன்குடி மின் திட்டத்திற்காக 4 நிறுவனங்கள் தொழில் நுட்ப ரீதியான டெண்டர்கள் கொடுத்திருந்தன. தகுதி உள்ள நிறுவனத்தை தேர்வு செய்ய 4 மாத காலம் ஆனது. ஆவனங்களை எல்லாம் சரி பார்க்க வேண்டி இருந்தது. 4 நிறுவனங்களில் சீன நிறுவனமும், பெல் நிறுவனமும் தகுதி பெற்றிருந்தது. பலமுறை அவர்களை அழைத்து பேசி முடிவு செய்யப்பட்ட பின்னர் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் இறுதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருந்ததால், எந்த பணியையும் செய்ய முடியவில்லை.
2014ம் ஆண்டு 2 நிறுவனங்களின் டெண்டர் விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டது. எண்ணூர் சிறப்பு மண்டலத்தில் அனல் மின் நிலைய திட்டத்தை நிறைவேற்ற பெல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. உடன்குடி அனல்மின் திட்டத்தை நிறைவேற்ற பெல் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சீன நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றது. பெல் நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. பெல் நிறுவனம் மத்திய அரசு நிறுவனம். புகழ் பெற்ற நிறுவனம். அதனை கறுப்பு பட்டியலில் சேர்க்க முடியுமா? சீன நிறுவனம் நீதிமன்றம் சென்றதால் இந்த திட்டம் மேலும் கால தாமதம் அடைந்தது.
தமிழக மின் வாரியமும் பதில் மனு தாக்கல் செய்தது. இன்று விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கூறுகிறாரா? அந்த கட்சி தலைவர் என்ன சொன்னார் தெரியுமா? பெல் நிறுவனத்தில் 30 ஆயிரம் பேர் பணி புரிகிறார்கள். அது ஒரு பொதுத்துறை நிறுவனம். அந்த நிறுவனத்திற்கு தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இன்று நீங்கள் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? உங்கள் தலைவர் டெண்டர் விடாமலேயே பெல் நிறுவனத்திற்கு அனல் மின் திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் நீங்கள் இப்போது இப்படி பேசுகிறீர்கள்.
மற்றொரு உறுப்பினர் (பா.ம.க.) சீன நிறுவனத்திற்கு வக்காலத்து வாங்குவது போல் பேசுகிறார். சீன நிறுவனத்தை தூண்டி விட்டு அம்மாவின் திட்டத்தை வர விடாமல் செய்வதற்கு நீங்களே இதுபோன்று செய்கிறீர்களோ? என்று தான் தெரிகிறது. உங்கள் நடவடிக்கை அப்படி தான் தெரிகிறது. அம்மாவின் ஆட்சியில் ஒளிவுமறைவற்ற டெண்டர் தான் விடப்படுகிறது. அரசுத்துறை நிறுவனமாக இருந்தாலும் போட்டியில் கலந்து கொண்டு குறைந்த விலைப்புள்ளி தெரிவித்தால் தான் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்க முடியும். பெல் நிறுவனம் என்பதால் சலுகை காட்டவில்லை.
4 ஆண்டுகளாக நீங்கள் (தி.மு.க) முடக்கி வைத்திருந்தீர்கள். ஆனால் இன்று அம்மா எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார். எந்த உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த திட்டம் உரிய காலத்தில் நிறைவேற்ற முடிக்கப்படும். ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கன்சல்டன்ட் அதாவது கலந்தாலோசகர் வேண்டும். இதற்கு ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு அமைப்பை தேர்ந்தெடுத்தோம். அந்த அமைப்புக்கு இந்தியாவில் பல்வேறு கிளைகள் உள்ளன. சீன நிறுவனம் மற்றும் பெல் நிறுவன ஒப்பந்தப்புள்ளி பற்றி கலந்து ஆலோசனை செய்யப்பட்டது. அந்த நிறுவனம் அனைத்தையும் ஆராய்ந்து அறிக்கைகளை தந்தது.
பெல் நிறுவனம் விலைப்புள்ளியில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன? சீன நிறுவனம் விலைப்புள்ளியில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன? என்று பட்டியலிட்டு அந்த நிறுவனம் அறிக்கை தந்தது. இது பற்றி மின் பகிர்மான கழகம் முடிவு செய்யலாம் என்றும் பரிந்துரைத்தது. பெல் நிறுவனத்திற்கு கொடுப்பதாக இருந்தால் அவர்கள் குறைகளை சரி செய்ய வேண்டும். அதேபோன்று சீன நிறுவனமும் குறைகளை சரி செய்ய வேண்டும் என்று ஜெர்மன் நாட்டு கன்சல்டன்ட் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் ஒன்றுமே செய்யாமல் சீன நிறுவனம் நீதிமன்றம் சென்றது.
அந்த குறைகளை சரி செய்தால் ஏன் நீதிமன்றம் செல்லவேண்டும்? ஒளிவுமறைவு அற்ற ஆட்சி அம்மாவின் ஆட்சி. ( ஜெர்மன் நாட்டு கன்சல்டன்ட் நிறுவனம் அளித்த அறிக்கையை சட்டசபையில் காட்டினார்).
சீன நிறுவனம் நீதிமன்றம் சென்றது. தமிழக மின் வாரியமும் நீதிமன்றத்தில் தனது நிலையை எடுத்து சொன்னது. இந்த நிலையில் இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதற்கு பின் ஏன் விசாரணை? மு.க.ஸ்டாலினின் கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 3 ஆண்டுகள் தாமதம் ஏன்? என்று அவர் கேட்டிருக்கிறார். டெண்டர் போட்ட தேதியிலிருந்து தான் கணக்கு. 3 ஆண்டுகளும் என்னென்ன பணிகள் செய்யப்பட்டன என்ற முழு விவரத்தையும் எடுத்து சொன்னேன். அடிப்படை பணிகள் அனைத்தையும் செய்திருக்கிறோம். டெண்டர் போட்டவர்கள் சரியாக அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று செயல்படுத்தும் வகையில் போட வேண்டும். சரியாக போடுங்கள் என்று நாங்கள் சொல்ல முடியுமா? அவர்கள் தான் போட வேண்டும். இதற்கு அரசு எப்படி பொறுப்பாகும்.
கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக தான் இந்த திட்டம் தாமதப்படுத்தப்படுகிறது என்று முன்னாள் முதலமைச்சர் கூறியிருக்கிறார். உங்கள் ஆட்சியில் தான் அதிக விலைக்கு வாங்கி இருக்கிறீர்கள். நாங்கள் குறைந்த விலைக்கு மின்சாரத்தை வாங்கியிருக்கிறோம். ( இது சம்பந்தமாக புள்ளி விவரங்களை ஒவ்வொன்றாக அமைச்சர் எடுத்து கூறினார். அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து கூச்சல் எழுப்பினார்கள்.) நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு என்னை பதில் சொல்ல விடுங்கள். நீங்கள் வௌியே சொன்னது தவறு என்று சொல்லுங்கள். நான் விட்டு விடுகிறேன்.
நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்லக்கூடாதா? ( தொடர்ந்து தி.மு.க.வினர் கூச்சல்) என்று நத்தம் விசுவநாதன் காட்டமாக கேட்டார்.அப்போது முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து, ‘உடன்குடி அனல் மின் திட்டத்திற்கு தாமதம் ஏன்? யார் காரணம்? என்று அக்குவேறு ஆணிவேறாக அமைச்சர் சொல்லியிருக்கிறார். கூடுதல் விலைக்கு நீங்கள் மின்சாரம் வாங்கியதையும் புள்ளி விவரங்களோடு அமைச்சர் கூறியிருக்கிறார். நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கு பதில் சொல்ல வேண்டமா? தயவு செய்து அமைச்சர் கூறுவதை கேளுங்கள். வெளிநடப்பு செய்து விடாதீர்கள் என்று கூறினார்.தொடர்ந்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
தி.மு.க. ஆட்சியை விட குறைந்த விலைக்கு தான் என்று மின்சாரம் வெளியிலிருந்து வாங்கப்படுகிறது. நீங்கள் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கினீர்கள். தேர்தல் நேரத்தில் நீங்கள் மிக அதிக விலை கொடுத்து வாங்கினீர்கள். மின்சாரத்தை இப்படி கொள்முதல் செய்துவிட்டு பணத்தைக்கூட தரவில்லை.அம்மா ஆட்சிக்கு வந்தபின் அந்த பணத்தை கொடுத்தார். இப்போது எங்களை பார்த்து குற்றஞ்சாட்டுகிறீர்கள். யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்? மக்கள் ஏமாளிகள் அல்ல. எத்தனை அறிக்கைகள், உண்மைக்கு மாறான செய்திகளை வௌியிட்டாலும், மக்கள் மத்தியில் அது எடுபடாது. அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிய நீங்கள் உங்களை போல் எங்களை நினைத்து பேசாதீர்கள் என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.