முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசியில் 4 மணி நேரமாவது மக்கள் குறைகளை கேட்க உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

வாரணாசி - பிரதமரின் வாரணாசி தொகுதியில் தினமும் சுமார் 4 மணி நேரமாவது மக்கள் குறைகளை கேளுங்கள் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி எம்எல்ஏக்களுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார். மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பிரதமர் ஜெட்லி பிரதமர் நரேந்திரமோடி உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். இதனையொட்டி அவர் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு வந்தார்.

அப்போது பல்வேறு தரப்பினரும் வாரணாசியில் பிரதமர் அலுவலகம் திறக்கப்பட்ட போது குறைகளை கேட்க யாரும் இல்லை என்று அவரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து இந்த விவகாரம் டெல்லி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வாரணாசி தொதியில் உள்ள 6 எம்எல்ஏக்கள் மற்றும் எம்சிக்கள் ஆகியோரை அழைத்து மத்திய அமைச்சர் ஜெட்லி உத்தரவிட்டார் என்று செய்தி தொடர்பாளர் சஞ்சய் பரத்வாஜ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து