எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்குவதாக பல்கலைக்கழக மானியக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் "பல்கலைக்கழகங்கள், தொழில்நிறுவனங்கள், மற்றும் சமுதாயம் இடையே அறிவு பரிமாற்றம்" தொடர்பான 3 நாள் நாடு தழுவிய கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் நேற்று தொடங்கியது. உயர்கல்வித்துறையில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதாக பல்கலைக்கழக மானியக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில், சென்னையில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், சமூகம் மூன்றும் ஒருங்கிணைந்து சிறந்த கல்வியாளர்களை உருவாக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இக்கருத்தரங்கில், பங்களாதேஷ், பாகிஸ்தான், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிவியலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற , பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் . தேவராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 450 தன்னாட்சிக்கல்லூரிகள் உள்ளன. அதில் 150 தன்னாட்சி கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது. கல்லூரிகளுக்கு தன்னாட்சி உரிமை வழங்க பல்கலைக்கழக மானியக்குழு, புதிய நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் 20 கல்லூரிகள் தன்னாட்சி உரிமை வழங்க வலியுறுத்தி விண்ணப்பங்களை அளித்துள்ளன. தமிழகத்தில் கல்விபுரட்சியே நிகழ்ந்து வருகிறது. 1980 ஆம் ஆண்டில் கல்வித்துறையில் எம்.ஜி.ஆர் தனியார் துறைக்கு ஊக்கம் அளித்தார்.அதன் விளைவாக தமிழகத்தில் உயர்கல்வியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. இப்போது இந்தியாவிலேயே உயர்கல்வித்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருவதாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்களில் கல்வி சீர்திருத்த புதிய நெறிமுறைகள் ஜுலை 15-ம் தேதிக்குள் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் . தேவராஜ் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் அனைத்து நாடுகள் சார்பிலும் ஒருங்கிணைந்து சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்பட்டது.இந்த கருத்தரங்கில் தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தின் (என்சிடிஇ) தலைவர் சந்தோஷ் பாண்டா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-
ஆசிரியர் பயிற்சி கல்வி தொடர்பான புதிய ஒழுங்குமுறை விதிகளை வரும் ஜூலை முதல் நடைமுறைப்படுத்தும் பணியில் தேசிய ஆசிரியர் கல்விக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதன்படி புதிய ஒழுங்குமுறையின் படி, பி.எட், எம்எட். படிப்பு காலம் ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் இந்த புதிய ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்தும்போது பிரச்னைகள் எழலாம்.எனினும், ஆசிரியர் கல்வியில் மாற்றங்களை மேற்கொள்வது மிக மிக அவசியம். எனவே, ஆசிரியர் கல்வியில் நாடு முழுவதும் இந்த ஆண்டு புதியஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும். இதில், ஆசிரியர் பயிற்சி படிப்பு காலம் அதிகரிப்பு, ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வியியல் படிப்புகள் அறிமுகம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறும்.இவ்வாறு பாண்டா பேசினார்.
முன்னதாக தமிழக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா பேசியதாவது:
நாம் அனைவரும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கல்வி நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள் இடையே சிறப்பான தொடர்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இன்றைய சூழலுக்கு ஏற்ப ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னணியில் திகழ்கிறது. இந்தியாவிலேயே உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். ஆசிரியர்கள் மாணவர்களின் விஞ்ஞான ஆர்வத்தை தூண்டுவதுடன் சிந்திக்கும் ஆற்றலையும் மேம்படுத்த வேண்டும். அதற்கான முழு சுதந்திரமும் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.
இவ்வாறு அபூர்வா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.