எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா 27.7.2015 அன்று தலைமைச் செயலகத்தில், பதிவுத் துறையின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் - மார்த்தாண்டத்தில் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், பதிவுத் துறையின் சார்பில் 46 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடங்கள், சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் வணிகவரித் துறை சார்பில் 11 கோடியே 79 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள் மற்றும் தணிக்கைச் சாவடி கட்டடங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்கள்.
வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் பதிவுத்துறை அலுவலகங்களில், பதிவு ஆவணங்களைப் பராமரிப்பதற்கும், பணியாளர்கள் திறம்படப் பணியாற்றுவதற்கும், போதிய இடவசதி இல்லாததை கருத்தில் கொண்டும், பொது மக்கள் அதிகம் வந்து செல்கின்ற சார்பதிவாளர் அலுவலகங்களில் பொது மக்களுக்கு தக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டியதின் அவசியத்தைக் கருதியும், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சொந்த கட்டடங்கள் கட்டும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பதிவுத் துறையின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் - மார்த்தாண்டத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் மொத்தம் 9768 சதுர அடி கட்டட பரப்பளவில், மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), மாவட்டப் பதிவாளர் (தணிக்கை), 1எண் மற்றும் 2எண் இணை சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகிய அலுவலகங்களுடன் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
மேலும், விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி, ஈரோடு மாவட்டம் - ஈரோடு மற்றும் கோபிசெட்டிப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம் - சேரன்மகாதேவி, திண்டுக்கல் மாவட்டம் - பழனி, வேலூர் மாவட்டம் - அரக்கோணம், தஞ்சாவூர் மாவட்டம் - கும்பகோணம், காஞ்சிபுரம் மாவட்டம் - செங்கல்பட்டு, நாமக்கல் மாவட்டம் - நாமக்கல், தருமபுரி மாவட்டம் - தருமபுரி, இராமநாதபுரம் மாவட்டம் - இராமநாதபுரம், அரியலூர் மாவட்டம் - அரியலூர் ஆகிய இடங்களில் 16 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடங்கள்; விழுப்புரம் மாவட்டம் - கண்டமங்கலம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், செஞ்சி, மரக்காணம், வானூர், ரிஷிவந்தியம், அவலூர்பேட்டை; தஞ்சாவூர் மாவட்டம் - திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, அதிராம்பட்டினம்; ஈரோடு மாவட்டம் - அந்தியூர், சூரம்பட்டி, நம்பியூர், அம்மாப்பேட்டை, தூக்கநாயக்கன்பாளையம்; நாமக்கல் மாவட்டம் - வேலகவுண்டன்பட்டி, மோகனூர், எருமைப்பட்டி; கடலூர் மாவட்டம் - புதுச்சத்திரம், குறிஞ்சிப்பாடி, வேப்பூர்; கோயம்புத்தூர் மாவட்டம் - கணபதி, காந்திபுரம், நெகமம், வடவள்ளி; மதுரை மாவட்டம் - திருப்பரங்குன்றம், அலங்காநல்லூர், மதுரை தெற்கு-4எண் இணை சார்பதிவாளர் அலுவலகம்; இராமநாதபுரம் மாவட்டம் - நயினார்கோவில், கீழக்கரை; தருமபுரி மாவட்டம் - கடத்தூர், காரிமங்கலம்; கன்னியாகுமரி மாவட்டம் - மணவாளக்குறிச்சி, இரணியல்; திருநெல்வேலி மாவட்டம் - சுரண்டை, வாசுதேவநல்லூர்; வேலூர் மாவட்டம் - ஆம்பூர், ஒடுகத்தூர்; விருதுநகர் மாவட்டம் - வத்திராயிருப்பு, விருதுநகர்-2எண் இணை சார்பதிவாளர் அலுவலகம்; கரூர் மாவட்டம் - மேலக்கரூர், வெள்ளியணை; சிவகங்கை மாவட்டம் - தேவகோட்டை, இளையான்குடி; பெரம்பலூர் மாவட்டம் - வேப்பூர், பெரம்பலூர்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருவெறும்பூர், கே.சாத்தனூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் - பர்கூர், கெலமங்கலம்; புதுக்கோட்டை மாவட்டம் - சுப்ரமணியபுரம், ஆலங்குடி; அரியலூர் மாவட்டம் - கீழப்பழுவூர்; தேனி மாவட்டம் - சின்னமனூர்; ஆகிய இடங்களில் 30 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 56 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்; என மொத்தம் 48 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதிவுத் துறை அலுவலகக் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வேலூர் மாவட்டம் - ராணிப்பேட்டையில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம்; புதுக்கோட்டை மாவட்டம் - புதுக்கோட்டையில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம்; திருப்பூர் மாவட்டம் - திருப்பூரில் 2 கோடியே 71 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூடுதல் வணிகவரி அலுவலகக் கட்டடம்; விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி, கடலூர் மாவட்டம் - விருத்தாச்சலம், தருமபுரி மாவட்டம் - அரூர், திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரம் மற்றும் நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர் ஆகிய இடங்களில் 5 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 வணிகவரி அலுவலகக் கட்டடங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம், காரைக்கால்–நாகூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேலவாஞ்சூரில் 29 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி தணிக்கைச் சாவடிக் கட்டடம்;
விழுப்புரம் மாவட்டம் - கோட்டக்குப்பத்தில் 29 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரி தணிக்கைச் சாவடிக் கட்டடம்; கோயம்புத்தூர் மாவட்டம் - வாளையார் கிராமத்தில் 33 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கே.ஜி. சாவடி (வெளிவழி) வணிகவரி தணிக்கைச் சாவடிக் கட்டடம்;என மொத்தம் 11 கோடியே 79 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிகவரித் துறை அலுவலகக் கட்டடங்கள் மற்றும் தணிக்கைச் சாவடிக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் மொத்த மதிப்பு 60 கோடியே 5 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், ., தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், . (ஓய்வு), வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், ., முதன்மைச் செயலாளர் / வணிகவரி ஆணையர் க. இராஜாராமன், பதிவுத்துறைத் தலைவர் சு.முருகய்யா, . மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்18 hours 42 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 21 hours ago |
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
15 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.