எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் மறைவுக்கு இன்று தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மவுன அஞ்சலி செலுத்தினார்கள். சட்சபை நேற்று காலையில் கூடியது. அப்போது சபாநாயகர் தனபால் இரங்கல் தீர்மானங்களை வாசித்தார். இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் வருமாறு :–
‘‘இந்தியாவின் ஏவுகணை நாயகன்’’ என்றும் ‘‘அணுசக்தி நாயகன்’’ என்றும் ‘‘தலைசிறந்த விஞ்ஞானி’’ என்றும் ‘‘திருக்குறள் வழி நடப்பவர்’’ என்றும் ‘‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்’’ என்றும் போற்றப்படுபவரும் தன்னுடைய பொன்மொழிகளாலும் கவிதைகளாலும் எழுத்துக்களாலும் தனது எளிமை மற்றும் மென்மையான அணுகுமுறையினால் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவரும் நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தவரும் தமிழகத்தின் மண்ணின் மைந்தருமாகிய பன்முகத் தலைவர் ‘‘பாரத ரத்னா’’ டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் 27.7.2015 அன்று தனது 83-வது அகவையில் திடீரென மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
இராமேஸ்வரத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தமது கடின உழைப்பினாலும் ஒருமுக சிந்தனையாலும் விடா முயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசுத் தலைவராக விளங்கினார். தன்னம்பிக்கையைவளர்த்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் அதன் பின்னரும் அவரது சிந்தனை எப்பொழுதும் மாணாக்கர்கள், இளைஞர்கள் ஆகியோரைப் பற்றியே இருந்தது. 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்டவர்.
இந்தியா வல்லரசாக உருவெடுக்க மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக ‘கனவு காணுங்கள்’ அது உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டுமென்றும் வெற்றிபெற வேண்டுமென்றால் பதட்டமில்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்தவழி என்றும் வெற்றியின் ரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார். இளைய தலைமுறையினரும் மாணாக்கர்களும் இந்தியாவின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்காற்றிட உந்துசக்தியாக விளங்கினார்.
அன்னாரது பிறந்த தினம் ‘‘இளைஞர் எழுச்சி நாளாக’’ தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது நினைவைப் போற்றும் விதமாக ‘‘டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது’’ சுதந்திர தினத்தன்று தமிழக அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் செந்தூர் பாண்டியன்திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி சட்டமன்றப் பேரவை உறுப்பினராக 2011-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவரும் விவசாய குடும்பத்தில் பிறந்து தன்னை இளம் வயது முதல் பொது வாழ்வில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்காக பணியாற்றியவரும் 1986 முதல் 1991 வரை கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினராகவும், 1996 முதல் 2001 வரை கடையநல்லூர் நகர்மன்ற துணைத் தலைவராகவும் திறம்பட பணியாற்றிய வரும் ஜூலை 2011 முதல் மே 2015 வரை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சராகவும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றியவரும் இனிய பண்பும் எளிமையும் தன்னகத்தே கொண்டவரும் அனைவரிடத்திலும் நட்புறவோடும், அன்போடும் பழகியவருமான பூ. செந்தூர் பாண்டியன் சிறிது காலம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 11.7.2015 அன்று தனது 64-வது அகவையில் மறைவுற்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
அன்னாரது மறைவால் அவரைப் பிரிந்து வருந்தும் அவரது குடும்பத்தினருக்கு இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. இசையமைப்பாளர்எம். எஸ். விஸ்வநாதன் மெல்லிசை மன்னர் என்றும் எம்.எஸ்.வி என்றும் அன்புடன் அழைக்கப்படுபவரும் தமிழ் திரையுலகில் மாபெரும் சகாப்தமாக திகழ்ந்தவரும் தனது ஈடு இணையற்ற இசை வல்லமையால் தமிழ் திரையுலகத்தினருக்கும் குறிப்பாக தமிழ்நாடு மக்களுக்கும் பெருமை சேர்த்தவரும் பழம்பெரும் இசை அமைப்பாளருமான திரையுலக இசை மேதை எம். எஸ். விஸ்வநாதன் 14.7.2015 அன்று உடல்நலிவுற்று மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
எம்.எஸ். விஸ்வநாதன் அன்பும் அடக்கமும் எளிமையும் இறை பக்தியும் உள்ளவர். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராரும் கடலுடுத்த பாடலுக்கு மோகன ராகத்தில் இசை அமைத்து தமிழர்களின் இதயத்தில் குடிகொண்டு, அனைவராலும் போற்றப்படும் இசையமைப்பாளர் ஆவார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரை உலக நண்பர்களுக்கும் ரசிக பெருமக்களுக்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறி சபாநாயகர் தனபால் இரங்கல் தீர்மானங்களை வாசித்தார்.
அதைத்தொடர்ந்து மறைந்த பெருமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட நேரம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.