எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 27 மீனவர்களையும் 71 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் மோடி நேரடியாக அறிவுறுத்த வேண்டியும், 10-2-2016 அன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்கள் மற்றும் 2 மீன்பிடி படகுகளையும் சேர்த்து அனைத்து மீனவர்களையும் விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் எழுதியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரி மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் போது அவர்களை தடை செய்வதும், கைது செய்யும் நடவடிக்கையையும் இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகிறது.
இது துரதிர்ஷ்டவசமானது. இந்த கைது நடவடிக்கைள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 10-2-2016அன்று ராமேஸ்வரத்தில் இருந்து 12 மீனவர்கள் இரு எந்திர படகுகளில் மீன் பிடிக்கச்சென்றனர். அவர்களை 11-2-2016 அன்று தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படை கைது செய்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கொண்டு சென்றது. பாக்ஜல சந்தியில் பாரம்பரிய நீர் எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை தமழக அரசு முழுமையாக ஆதரித்து வருகிறது.
தமிழக மீனவர்கள் பாரம்பரிய நீர் எல்லையில் மீன் பிடிப்பதை இலங்கை கடற்படை தொடர்ந்து தடுத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தமிழக மீனவர்களை கைது செய்து தாக்குதலும் நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. இதுபோன்ற இலங்கை கடற்படையின் தாக்குதல்களை இந்திய அரசின் முயற்சிகள் மூலம் நிறுத்த வேண்டும். மீனவர்களுடன் படகுகளையும் பறிமுதல் செய்யும் இலங்கை கடற்படையினர், மீனவர்களை விடுவித்தாலும் அவர்களது படகுகளை விடுவிப்பது இல்லை. இதனால் பல மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
படகுகளை நீண்ட காலம் வைத்திருத்தல், அதனை பயன்படுத்தாமல் அப்படியே போட்டு வைத்தல் காரணமாக அந்த படகுகள் பருவ மழையில் சேதமடைந்துள்ளன. இந்த படகுகள் மீனவர்களின் வாழ்வாதாரம் ஆகும். அந்த படகுகளை மீட்டு புதுப்பித்து அதனை இந்திய அரசு விரைவில் தர வேண்டும். சர்வதேச கடல்சார் எல்லை கோடு (ஐ.எம்.பி.எல்) பிரச்சினை இந்திய சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நான் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
தமிழக அரசும் இதில், தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டுள்ளது. நமது மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வாங்குவதற்கு ரூ.30 லட்சம் மானியத்தை அளிக்கும் திட்டத்தை எனதுஅரசு அறிமுகப்படுத்தியது. இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த திட்டத்தை எனது அரசு அறிமுகப்படுத்தியது. ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் ரூ.1520 கோடி நிதி உதவியை கேட்டுள்ளேன். மேலும் அந்த உள்கட்டமைப்பை பராமரிக்க ஆண்டுதோறும் ரூ.10 கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளேன். தமிழக அரசின் இந்த கருத்துவிற்கு விரைவில் மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை சூழ்ந்துள்ள துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 27 மீனவர்களையும் 71 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை அரசிடம் பேசி நடவடிக் கை எடுப்பதற்கு தாங்கள் நேரடியாக அறிவுறுத்த வேண்டுகிறேன். தற்போது (10-2-2016)இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்கள் மற்றும் 2 மீன் பிடி படகுகளையும் சேர்த்து அனைத்து மீனவர்களையும் விடுவிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.