எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணை பலமாகவே உள்ளது. இந்த அணை தொடர்பாக உள்ள பிரச்சினையை தமிழக அரசுடன் பேசி தீர்ப்போம் என்று கேரளாவில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளாவில் கடந்த 16ம்தேதியன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றது. அந்த கூட்டணி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியை தோற்கடித்தது. இதனால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
புதிய முதல்வராக இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் பதவியேற்றார். அவர் கள் இறக்கும் ஏழை தொழிலாளியின் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் முதல் முறையாக கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்றதும் பினராயி விஜயன் தலைநகர் டெல்லிக்கு நேற்று முன்தினம் சென்றார். அவருடன் கேரள அதிகாரிகள் குழுவும் சென்றது.
டெல்லியில் பிரதமர் மோடியை பினராயிவிஜயன் சந்தித்தார். அப்போது பினராயிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரதமரிடம் கேரள மாநிலத்திற்கு தேவையான திட்டங்கள் பற்றிய கோரிக்கை மனுவையும் பினராயி விஜயன் வழங்கினார். அந்த மனுவில், கேரளாவில் முக்கிய தொழிலாக ரப்பர் விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரப்பர் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும். சுற்றுலா, ஆயுர்வேதம் போன்றவை வளர்ச்சி பெற புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. பிரதமரை சந்தித்த பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மற்றும் மத்திய அமைச்சர்களை பினராயி விஜயன் சந்தித்து பேசினார். அவர் இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பின்னர் அவர் கேரள அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு, பேட்டி அளித்தார். அப்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது,
புதிய முதல்வராக பதவியேற்ற பின்னர் மரியாதை நிமித்தமாக பிரதமர் , ஜனாதிபதி ஆகியோரை சந்தித்தேன். எங்களின் கோரிக்கைகளையும் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம். 5ஆண்டுகளில் கேரளாவை முதன்மை மாநிலமாக மாற்ற முழு முயற்சி எடுப்போம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவோம். கேரளாவில் தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுக்கப்படும்.
முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது . எந்த வித பிரச்சினையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினர் தெரிவித்து இருக்கிறார்கள். முல்லை பெரியாறு அணை தொடர்பாக உள்ள பிரச்சினைக்கு தமிழக அரசுடன் பேசி சுமூக தீர்வு காண்போம். முல்லைப்பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்ற நிபுணர்கள் அறிக்கையை கேரள அரசு ஏற்றுக்கொள்கிறது. எனவே அந்த அணைக்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற முந்தைய காங்கிரஸ் அரசின் முடிவில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. புதிய அணை கட்ட வேண்டிய அவசியமும் இல்லை.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் முரண்பாடுகளை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை. அதேசமயம் முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தும் எண்ணமும் இல்லை. நீர்மட்டத்தை உயர்த்தினால் கேரளாவில் உள்ள பொது மக்கள் குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். அணை பகுதியில், ஏராளமான ஏழை குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முடியாது. தண்ணீர் எல்லோருக்கும் தேவையாக உள்ளது. எனவே முல்லை பெரியாறு அணை நீர் இரு மாநில மக்களுக்கும் பயன்படும்வகையில் செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட போது கேரளாவில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் முல்லைபெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்றும் புதிய அணை கட்டப்போவதாகவும் பிரச்சினையை கிளப்பியது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. புதிய அணையை கட்ட மாட்டோம் என்று அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.