எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லியான், (பிரான்ஸ் - யூரோ 2016 கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் வெல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டம் முழுதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆட்டத்தின் 2-வது பாதியின் 3 நிமிடங்களில் 2 கோல்கள் வேல்ஸ் அணியின் இறுதிக் கனவைத் தகர்த்தது. போர்ச்சுக்கல் முழுதும் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் ஷார்ட் கார்னர் கிடைக்க போர்ச்சுகல் வீரர் ரஃபேல் குரேரியோ அருமையாக அதனை கிராஸ் செய்ய கிறிஸ்டியானோ ரொனால்டொ மிக அருமையாக தலையால் கோலுக்குள் முட்டித் தள்ளினார். இத்தனைக்கும் வேல்ஸ் அணியின் தடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் செஸ்டர் தடுப்பதற்காக உயரே எழும்பினார். ஆனால், அவருக்கு மேலே எழும்பி ரொனல்டோ கோல் அடித்து வேல்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
கோல் கீப்பர் ஹெனெசேவுக்கு வாய்ப்பேயில்லாமல் போனது. 2-வது கோலிலும் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பங்கு அதிகம். இவர் கொடுத்த பந்தைத்தான் நானி கோலாக மாற்றினார். மற்ற ஆட்டங்களைப் போல் அல்லாமல் இந்த அரையிறுதியில் ரொனால்டோ அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கக் கணங்களிலேயே வேல்ஸ் அணியின் தடுப்பாட்ட அணையை உடைக்க முயற்சி செய்தார், ஆனால் ரொனால்டோவை மிக நன்றாக வேல்ஸ் வீரர் ஆஷ்லி வில்லியம்ஸ் மேலே செல்ல விடாமல் தடுத்தார். வேல்ஸ் அணியில் நம்பிக்கை நட்சத்திரம் ஏரோன் ராம்சே சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் இந்தப் போட்டியில் இல்லாதது சற்றே பின்னடைவை ஏற்படுத்தினாலும் அபாய வீரர் காரெத் பேல் அருமையான சவால் அளித்தார்.
கார்னர் ஷாட் ஒன்றை பேல் அடிக்க பந்து மேலே சென்றது. இதற்கு சில நிமிடங்கள் கழித்து காரெத் பேல் மேலும் அபாயகரமான ஒரு தாழ்வான கிராஸ் செய்ய போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பேட்ரிசியோ நன்றாக அதனைத் தடுத்தார். 23 நிமிடங்கள் சென்ற பிறகு காரெத் பேல் தனது பகுதியிலிருந்தே ஒரு தாக்குதல் முயற்சியைத் தொடுத்து முன்னேறிச் சென்று 25 யார்டிலிருந்து அடித்தார் ஆனால் இதுவும் தடுக்கப்பட்டது. முதல் பாதி ஆட்டம் முடியும் தருணங்களில் இருந்த போது அட்ரியன் சில்வாவின் கிராஸை ரொனால்டோ தலையால் முட்ட அது பாருக்கு வெளியே சென்றது. முதல் பாதியில் வேல்ஸ் அணிக்கு பந்துகள் கிடைத்ததே அரிதாக இருந்தது, போர்ச்சுகல் முயற்சிகள் கோலாக மாறவில்லை.
இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியவுடன் 48-வது நிமிடத்தில் வேல்ஸ் வீரர் செஸ்டர் இடது புறம் அருமையாக பேலுக்கு பந்தை அனுப்ப அவர் ஆல்வேசுடன் ஒற்றைக்கு ஒற்றை ஆட்டத்தில் இறங்கினார் ஆனால் பந்தைத் தாண்டிச் சென்றார் பேல். இந்நிலையில்தான் 50-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆச்சரியகரமான கோல் விழுந்தது. குரெய்ரோ மிக அருமையாக பந்தை தூக்கி அடிக்க ரொனால்டோ எழும்பிய செஸ்டரை ஆட்கொண்டு மேலே எழும்பி சக்திவாய்ந்த தலைமுட்டலால் கோலில் செலுத்தினார், வேல்ஸ் கோல் கீப்பருக்கு வாய்ப்பேயில்லை. இந்த கோல் மூலம் யூரோ 2016-ல் ஒரு தொடரில் அதிக கோல்களை அடித்த பிரான்ஸ் வீரர் மைக்கேல் பிளாட்டினியின் சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ. இருவரும் 9 கோல்கள்.
53-வது நிமிடத்தில் நீண்ட தூர ஷாட் ஒன்றை ரொனால்டோ துல்லியமாக அடிக்க அங்கு நானிக்கு தடுப்பாட்ட வீரர்களுக்கு இடையே இடைவெளி கிடைக்க அருமையாக ஸ்லைட் செய்து கோலாக மாற்றினார். 63-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது, அதனை ரொனால்டோ அருமையாக கோல் நோக்கி அடிக்க கோலுக்கு மேலே வலையில் போய் விழுந்தது. 83-வது நிமிடத்தில் வேல்ஸ் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. பேலை போர்ச்சுகல் வீரர் ஜோ மரியோ ஃபவுல் செய்தார். ஃப்ரீகிக் கிடைத்தது ஆனால் பேல் அதனை கோலாக மாற்ற முடியவில்லை.
நேராக போர்ச்சுக்கல் அமைத்த சுவரால் தடுக்கப்பட்டு திரும்பிய பந்தையும் பேல் எடுத்தார், ஆனால் நானி அவர் கோல் வாய்ப்பை முறியடித்தார். கடைசியில் போர்ச்சுக்கல் 2-0 என்று வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. முக்கிய சர்வதேச கால்பந்து தொடர்களில் போர்ச்சுகல் 5 முறை அரையிறுதியில் தோல்வி தழுவி வெளியேறியுள்ளது. இம்முறை இறுதிக்குள் நுழைந்துள்ளது. இறுதியில் ஜெர்மனி அல்லது பிரான்ஸ் அணியைச் போர்ச்சுகல் அணி சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
காங்கிரஸ் சாதிக்க முடியாததை பாரதிய ஜனதா சாதித்துள்ளது : மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
30 Apr 2024மும்பை : கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன் என்று தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் 60 ஆண்டுகளாக சாதிக்க முடியாததை பா.ஜனதா 10 ஆண்டுகளில்