முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக்கில் அதிக தங்க பதக்கங்களை இந்தியா வெல்லும்: அஞ்சுபாபி ஜார்ஜ் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

நாகர்கோவில் : ரியோ ஒலிம்பிக் போட்டியில் அதிகளவு தங்கப் பதக்கங்களை இந்திய அணி வெல்லும் என்று பிரபல தடகள வீராங்கனை அஞ்சுபாபி ஜார்ஜ் கூறியுள்ளார்.

ஆரல்வாய்மொழியில் உள்ள பள்ளி விழாவில் பிரபல தடகள வீராங்கனை அஞ்சுபாபி ஜார்ஜ்கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசும், தமிழக அரசும் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவது பாராட்டிற்குரியது. அதிலும் தமிழக அரசு தடகள போட்டிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறது.

முன்புபோல் இல்லாமல் தற்போது விளையாட்டுத்துறை வேலை வாய்ப்புகள் வழங்கும் துறையாக மாறி வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசு வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இத்துறையில் அதிகளவு வீரர்கள், வீராங்கனைகள் வருகை தருகின்றனர். இதுவரை ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்கள் 22 பேர் என்ற குறைந்த எண்ணிக்கையில் கலந்துகொண்டனர். ஆனால் தற்போது இதன் எண்ணிக்கை நூறையும் தாண்டிவிட்டது.

அடுத்து நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிகளவு தங்கப் பதக்கங்களை வெல்லும் என்பது உறுதி. மாணவர்கள் ஒழுக்கம் மற்றும் கல்வியுடன், விளையாட்டுத்துறைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் விளையாட்டு அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்