எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: பாராளுமன்றத்தின் இரு அவைகளில் காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் கடும் விவாதத்தில் ஈடுபட்டன. பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதங்கள் விவரம் வருமாறு,. லோக்சபையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் ஆயுதப்படையினருக்கு தரம் குறைந்த ஆயுதங்கள் விநியோகப்படக்கூடாது என்கிற விஷயத்தில் உறுதியாக இருக்கிறோம் .மகாராஷ்டிராவில் வெடிப்பொருள் கிடங்கில் தீப்பற்றி பெரும் விபத்து ஏற்பட்டு 19பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், குறைபாடு உள்ள கருவிகளை அகற்றுவதில் ராணுவம் உரிய தர நிலையை கடைபிடிக்க ஆய்வு செய்கிறது.
வெடி பொருட்கள் கிடங்கு மிகவும் பாதுகாப்பான நிலையிலேயே உள்ளது. அதில் உள்ள பொருட்களால் ஏற்படும் அபாய வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ள வகையில் இருக்கின்றன. கோர்ட் உத்தரவின் படியே வெடிப் பொருட்கள் கிடங்கில் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் புல்கான் வெடி பொருள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ7.90கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 19பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதுகாப்புத்துறை கிடங்கில் வெடி பொருட்கள் வைக்கப்படும் தர நிலையை உயர்த்த ராணுவம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். லோக்சபையில் பா.ஜ.க.எம்.பி ஆர்.கே.சிங் கூறுகையில், இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவி வருகிறது. இதுபோன்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி தர வேண்டும். பாகிஸ்தானில் பயிற்சி பெறும் தீவிரவாதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறார்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் விமானப்படை தள தாக்குதல், காஷ்மீர் வன்முறைகள் போன்றவற்றில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபடுகிறார்கள். இதைபோன்ற பாகிஸ்தான் ஆதரவு தாக்குதலுக்கு நாமும் பதிலடி தர வேண்டும் என்றார்.லோக்சபாவில், கேபினட் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி பேசுகையில், மகளிர் முன்னேற்றத்திற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுக்கிறது என்றார். கண்ணூர் எம்.பி. பி.கே. ஸ்ரீமதி (சி.பி.எம்) எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மேனகா காந்தி இவ்வாறு பதிலளித்தார். ராஜ்ய சபை நேற்று கூடியதும் அவைத்தலைவர் ஹமீத் அன்சாரி மறைந்த அறிஞர் மகேஸ்வதா தேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவை உறுப்பினர்கள் ஒரு நிமிடம் எழுந்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் காலை 11.6மணிக்கு அவைத்தலைவர் இருக்கையில் குரியன் இருந்தார்முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் போட்டார்கள்.
இந்த நிலையில் ராஜ்ய சபை மதியம் 12மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12.01மணிக்கு ராஜ்ய சபை மீண்டும் கூடியது. அப்போது தெலுங்கானா மாநிலத்தின் தெலுங்கு தேச கட்சியின் எம்.பி. சி.எம். ரமேஷ் பேசுகையில், விவசாயிகளின் வருமானத்தை பற்றி பேசாமல் வேளாண் உற்பத்தியை மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாக தனி பட்ஜெட்டை கொண்டு வருவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றார்.இதற்கு பதிலளித்த ராதா மோகன் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாக நாங்கள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ராஜ்ய சபையில் கூறினார்..
ராஜ்ய சபையில் ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வெளிநடப்பு செய்தது. ராஜ்ய சபையில், நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், ஆந்திர மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இந்தியாவில் பல துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த முறை வெளிப்படையாகவே உள்ளது. இதில் அயல் நாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பணியாற்றுவதற்கு உரிய இடமாக இந்தியா உள்ளது என்றார். என்றார். ஜெட்லி பதிலளித்துக்கெண்டிருக்கும் போது அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி எழுந்து பதில் பேச முயன்றார். அதற்கு அவை துணை தலைவர் குரியன் கூறுகையில், அவை விவாதத்தின் போது ஒரு அமைச்சர் பேசும் போது மற்றொரு அமைச்சர் குறுக்கிடுவது மிக அரிதான நிகழ்வு என சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார்.
ராஜ்ய சபையில் வலது கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா கொண்டு வந்த மரண தண்டனை குறித்த தீர்மானத்தை விவாதித்து அதனை அவை தள்ளுபடி செய்தது. பாராளுமன்றத்தில் காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.