எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - பாலாற்றில் கட்டப்பட்ட பெரும்பள்ளம் தடுப்பணை சுவர் மீது நின்று வேடிக்கை பார்க்கும்போது தண்ணீரில் தவறி விழுந்து இறந்த சீனிவாசனின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது., பாலாறு, கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகி, ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் வழியாக, தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் நுழைந்து, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக 222 கி.மீ பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 1892-ம் ஆண்டைய மதராஸ் - மைசூர் ஒப்பந்தப்படி, பாலாறு ஒரு பன்மாநில நதி என்பதால், தமிழ்நாட்டின் முன் அனுமதி இல்லாமல் எந்த அணைக் கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் ஆந்திர அரசு மேற்கொள்ள முடியாது.
2006-ம் ஆண்டு ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் தாலுக்காவில் உள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரப் பிரதேச அரசு கட்ட எத்தனித்த போது, அதனை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசு ஒரு வழக்கினை தாக்கல் செய்து, அது இன்னமும் நிலுவையில் உள்ளது. தற்போது பாலாற்றின் குறுக்கே சித்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பள்ளம் என்னும் இடத்தில், ஆந்திரா-தமிழ்நாடு எல்லைக்கருகே அமைந்துள்ள தடுப்பணையின் உயரத்தை 9 அடியிலிருந்து 12 அடியாக ஆந்திர அரசு உயர்த்தியுள்ளது. இது பற்றி தெரிய வந்தவுடன், 1.7.2016 அன்று ஆந்திர மாநில முதல்வருக்கு இது குறித்து கடிதம் ஒன்றை நான் எழுதினேன். அந்தக் கடிதத்தில் உயர்த்தப்பட்ட தடுப்பணையின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும் என்றும், இயற்கையாக தமிழ்நாட்டிற்கு வந்தடைய வேண்டிய பாலாறு நீரை எவ்வகையிலும் தடுத்திடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டேன்.
இதே போன்று, கடந்த இரண்டு மாதங்களில், கங்கனஉறள்ளி, சித்தாவூர் மற்றும் கங்குந்தி ஆகிய இடங்களில் உயர்த்தப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும் எனவும் ஆந்திரப் பிரதேச அரசு கேட்டுக் கொள்ளப்பட்டது. மத்திய அரசும் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு, உரிய அறிவுரைகளை ஆந்திர அரசுக்கு வழங்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மத்திய அரசு இது பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், எனது உத்தரவின் பேரில், 18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்தது. தமிழ்நாட்டின் இசைவுப் பெறாமல் ஆந்திரப் பிரதேச அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் உயரத்தினை உயர்த்தியது. தமிழ்நாடு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என அறிவிக்க வேண்டும். பெரும்பள்ளம், கங்கனஉறள்ளி, சித்தாவூர் மற்றும் கங்குந்தி ஆகிய இடங்களில் உயர்த்தப்பட்ட தடுப்பணைகளை முன்பிருந்த நிலைக்கே கொண்டு வர வேண்டும் என உறுத்துக்கட்டளை பிறப்பிக்க வேண்டும்.
ஆந்திரப் பிரதேச அரசு இவ்வாறு செய்வதற்கு நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும். பாலாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் இயற்கையாக ஒடுகின்ற நீரை தமிழ்நாட்டிற்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆந்திரப் பிரதேச அரசுக்கு நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த வழக்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், வாணியம்பாடி வட்டம், புல்லூர் மதுரா கீழ்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரின் மகன் சீனிவாசன் 29.7.2016 அன்று மாலை பெரும்பள்ளம் தடுப்பணையின் மீது நின்று கொண்டு தடுப்பணையில் நிரம்பி இருந்த தண்ணீரைப் பார்த்து வேதனைப்பட்டு ஆந்திரப் பிரதேச அரசு தடுப்பணையைக் கட்டியதால், தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு விட்டதே என்ற விரக்தியில், உணர்ச்சிவயப்பட்டு, தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
எனினும், மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறையினரின் விசாரணையில் சீனிவாசன் பெரும்பள்ளம் தடுப்பணை சுவர் மீது நின்று வேடிக்கைப் பார்க்கும் போது, தண்ணீரில் தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இறந்த சீனிவாசனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.