எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பார்ப்பதையும், பார்க்காததையும் நினைத்து அலைபாயும் மனதை கொண்ட மாணவ பருவத்தில் பாடம் ஒன்று மட்டுமே மனதில் பதியாத பாதிப்பு நிலைகள் பலருக்கும் வருவதுண்டு. இந்த வயதில்தான் மனதை ஒருநிலைப்படுத்தி பாடங்களை கவனமுடன் படித்து தேர்வு எழுதினால் வாழ்வில் பயமில்லாமல் எதிர்கொண்டு வாழ்ந்து சாதிக்கலாம். பள்ளி பருவத்தில் படிக்கும்போது ஒரு பாடத்தினை எந்த முறையில் படிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் படிக்கும் முறை மாறினால் கூட மனதில் பதியாத நிலை ஏற்படும். சரியான முறைப்படி படித்தால் எவ்வளவு கடினமாக பாடமாக இருந்தாலும் மனதில் பதிந்துவிடும். இதற்கு முதற்கட்டமாக ஒரு பாடத்தினை படிக்க போகும் முன்னர் அந்த பாடம் முழுவதையும் மனப்பாடம் செய்யாமல் மேலோட்டமாக ஒருமுறை வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும், துணை தலைப்புகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் பாடத்தில் உள்ள பொருள் புரியாமல் போனாலும் தலைப்புகளையும், துணை தலைப்புகளையும் கவனத்தில் கொண்டால் எளிதில் மனதில் ஓடிவந்துவிடும்.
மேலும், நாம் படிக்கும் பாடம் எதனை பற்றியது என்பது தெளிவாக விளங்கி விடும். பாடத்தில் உள்ள சில குறிப்பிட்ட வார்த்தைகளை ஒருமுறைக்கு இருமுறை சொல்லிபார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த வார்த்தைகள் மனதில் பதிந்து மற்றவற்றை எடுத்துக்கொடுக்கும். மேலும், பாடங்களை படிக்கும்போது அதில் நமக்குள் பல கேள்விகளை எழுப்ப வேண்டும். குறிப்பாக அறிவியலில் மின்னாற்பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற்பகுப்பு என்றால் என்ற கேள்வி எழும்ப வேண்டும். இதற்கு விடை கண்டுபிடித்து விட்டால் அதனை வைத்தே முழுகேள்விக்கும் விடை எழுதி விடலாம்.
வாசித்தல்: எந்தவொரு பாடத்தையும் படிக்கும் முன்னர் முழுமையாக வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மனதில் பதிய வேண்டும் என்பதற்காக புத்தகத்தில் அதிளவில் அடிக்கோடு இடக்கூடாது. இதனால் பின்னாளில் படிக்கும்போது குழப்பமான சூழ்நிலை உருவாகும். தேவையான இடங்களில் தேவையான குறிப்புகளுக்கு மட்டும் புரிந்து கொள்வதற்காக அடிக்கோடு இட வேண்டும். படிக்கும்போது மனதினை ஒருநிலைப்படுத்தி திரும்ப திரும்ப சொல்லி பார்க்க வேண்டும். இந்த முறையானது பாடங்களை மனதில் பதிந்து கொள்ள மிகவும் எளிமையான வழியாகும். படித்தவற்றை அதற்கான வார்த்தைகளில் சொல்லி பார்க்காமல் தனது சொந்த வார்த்தையில் சத்தமாக சொல்லி பார்க்க வேண்டும். படித்து முடித்தபின்னர் மனதில் பதிந்து விட்டது என்று தோன்றினால் உடனடியாக அதனை நாமாகவே தேர்வு நடப்பதை போன்று எழுதி பார்க்க வேண்டும். இவ்வாறு எழுதியவற்றை நமக்கு நாமே திருத்தி மதிப்பெண் போட்டுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் தன் திறமை, தன் நிலைமை போன்றவை உணரப்பட்டு தனது தரத்தினை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
ஒரு விசயத்தை சாதாரணமாக ஞாபகம் வைத்துக்கொள்வதை விட சில குறிப்புகளால் மனதில் வைத்துக்கொண்டால் அவை எளிதில் மறக்காது. உதாரணமாக வண்ணங்கள், ஓசைகள், எழுத்துக்கள் போன்றவற்றை அதில் ஞாபகம் வைத்து கொண்டால் கவனம் சிதறாமல் எழுதி வெற்றி பெறலாம். என்னதான் படிப்பு முக்கியம் என்றாலும் எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்காமல் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் நிம்மதியாக மனதை அலைபாய விடாமல் தூங்க வேண்டும். உடல்நிலை சரியாக இருந்தால்தான் மனநிலையும் சரியாக இருக்கும். எனவே, நாள்தோறும் சில நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் உடல் புத்துணர்ச்சி அடைந்து ஞாபசக்தி அதிகரிக்கும். நடைப்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இவற்றிற்கும் சிறிதளவு நேரம் ஒதுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
உணவுமுறை: உணவுப் பொருட்களில் அதிக கொழுப்புள்ள இறைச்சி உள்ளிட்டவைகளை உட்கொள்ளாமல் பச்சை காய்கறிகள், இயற்கை உணவுப்பொருட்கள் முதலியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை மட்டுமல்லாமல் நல்ல சுற்றுச்சூழலும், அமைதியான குடும்ப பின்னணியும் நல்ல நண்பர்களையும் கொண்டிருப்பதும் கல்வி கற்பதற்கு மிகவும் அவசியமாக கருதப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றி படித்தாலே வெற்றி நிச்சயம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.