எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு 1 சதவீத வரி விதிக்கும் முடிவை வங்கிகள் நிறுத்தி வைத்ததை அடுத்து, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வரும் 13-ம் தேதி வரை ஏற்றுக்கொள்வதாக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தெரிவித்துள்ளன.
ஜனவரி 9-ந்தேதி (இன்று) முதல் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தால் அதற்கு விற்பனையாளர்களிடம் இருந்து 1 சதவீதம் பரிவர்த்தனை வரியை வசூலிக்கும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியது. இது நாடு முழுவதும் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனையாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் 8–ந்தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் விற்பனை செய்வதில்லை; ரொக்கம் கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது திரும்ப பெறப்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ள ‘சுவைப்’ கருவிகளுக்கு தனி பயன்பாட்டு வரி விதிக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி 9-ந் தேதி (நேற்று) முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ள ‘சுவைப்’ கருவிகளுக்கு தனி பயன்பாட்டு வரி (எம்.டி.ஆர்.) விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது இனி பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தனி நபர் 1,000 ரூபாய்க்கு குறைவாக பெட்ரோல் நிரப்பி அந்த தொகையை தனது ‘டெபிட்’ கார்டு மூலம் தரும்போது, சம்பந்தப்பட்ட பெட்ரோல் டீலர் 0.25 சதவீத வரி செலுத்தவேண்டும். ரூ.1,000 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலான தொகைக்கு ‘சுவைப்’ செய்யும்போது 0.50 சதவீதமும், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பெட்ரோல் தொகையை ‘சுவைப்’ செய்யும் போது ஒரு சதவீத வரியும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கிரெடிட் கார்டு மூலம் ஒருமுறை ‘சுவைப்’ செய்தாலே ஒரு சதவீத வரி செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வரி விதிப்பு முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.இந்த நடவடிக்கைக்கு பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எங்களின் லாப வரம்பை எண்ணை நிறுவனங்கள்தான் நிர்ணயம் செய்கின்றன. ஏற்கெனவே, அந்த வரம்பை உயர்த்துமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்நிலையில், எங்களுக்கு கிடைக்கும் லாபத்திலும் பரிவர்த்தனைக் கட்டணத்தை பிடித்தம் செய்துவிட்டால் தொழிலை நடத்த முடியாது. எனவே வங்கிகளின் இந்த அறிவிப்பைக் கண்டித்து ஞாயிறு நள்ளிரவு முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளோம்” என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்தன.இந்த நிலையில் நேற்றிரவு இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டது. பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளையும், வங்கி அதிகாரிகளையும் சந்தித்து இதுபற்றி பேச வைத்தனர். அப்போது கார்டுகள் மூலம் நடைபெறும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு 1 சதவீதம் வரி விதிப்பதை 13-ந்தேதி வரை நிறுத்தி வைப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் வினியோகிப்பதற்கான 1 சதவீதம் வரி விதிப்பை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்க வங்கிகள் அவகாசம் அளித்துள்ளனஇதையடுத்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை ஏற்றுக் கொண்டு 13-ந்தேதி வரை பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று விற்பனையாளர்கள் அறிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 470 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் இன்று ‘சுவைப்’ கருவிகளை பயன்படுத்தி டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டது.இதனால் நேற்று பொதுமக்கள் கார்டுகளை பயன்படுத்தி தங்கு தடையின்றி பெட்ரோல் பெற்றனர்.இதற்கிடையே 1 சதவீதம் பரிமாற்ற வரி விதிப்பு பிரச் சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வங்கி அதிகாரிகளும், பெட்ரோல் விற்பனையாளர்களும் மீண்டும் சந்தித்து பேச உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்18 hours 42 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 21 hours ago |
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
15 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.