எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் 2016-17-ம் நிதியாண்டில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2240 பயனாளிகளுக்கு ரூ.1,88,72,000- மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 4127 பயனாளிகளுக்கு ரூ.5,14,47,500- மதிப்பிலான இயற்கை இறப்பு நிவாரணத்தொகையும் என 6367 பயனாளிகளுக்கு ரூ.7,03,19,500- மதிப்பிலான உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. இதேபோல் 2016-17-ம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறை மூலம் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 24675 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.8,82,25,440- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் கோட்டங்களுக்குட்பட்ட 2126 பயனாளிகளுக்கு ரூ.2,43,41,500- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகையை வழங்கினார்.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலெக்டர் டி.பி.ராஜேஷ், முன்னிலையில் கடலூர் கலெக்டர் பொதுமக்கள் குறைதீர் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடலூர் கோட்டத்திற்கு உட்பட்ட 1003 பயனாளிகளுக்கு ரூ.1,13,91,000- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகைகளையும், விருத்தாச்சலம் கோட்டத்திற்கு உட்பட்ட 807 பயனாளிகளுக்கு ரூ.95,19,500- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகைகளையும் என ஆகமொத்தம் 1810 பயனாளிகளுக்கு ரூ.2,09,10,500- மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை இறப்பு நிவாரணத்தொகைகளையும் வழங்கினார். மேலும், தொழில்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை மூலம் 20 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.71,500- மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.12,000- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.47,500- மதிப்பிலான இலவச சலவைப்பெட்டிகளையும் வழங்கினார். ஆகமொத்தம் 1863 பயனாளிகளுக்கு ரூ.2,10,41,500- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தொழில்துறை அமைச்சர் கலெக்டர் முன்னிலையில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிதம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட 126 பயனாளிகளுக்கு ரூ.11,46,000- மதிப்பிலான திருமண உதவித்தொகையும், 190 பயனாளிகளுக்கு ரூ.23,75,000- மதிப்பிலான இயற்கை இறப்பு நிவாரணத் தொகைகளையும் வழங்கினார். மேலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.24,000- மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 25 பயனாளிகளுக்கு ரூ.1,14,000- மதிப்பிலான விலையில்லா சலவைப்பெட்டிகளையும் என ஆகமொத்தம் 347 பயனாளிகளுக்கு ரூ.36,59,000- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆகமொத்தம் தொழில்துறை அமைச்சர் இன்று 2210 பயனாளிகளுக்கு ரூ.2,47,00,500- (ரூபாய் இரண்டு கோடியே நாற்பத்து ஏழு லட்சத்து ஐநூறு மட்டும்) மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிதம்பரத்தில் நடைபெற்ற விழாவில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் தலைமையுரையின்போது தெரிவித்ததாவது,
தமிழக அரசு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிராமப் புறங்களில் வாழும் மக்கள், ஏழை எளிய மக்கள், பெண்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினார் போன்றோர்களுக்கு தமிழகத்தில் மட்டும்தான் பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வருவாய்த்துறை மூலம் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் கல்வி, தரமான கல்வி வழங்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டமாகும். இன்று தொழில்துறை அமைச்சர் அவர்களால் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசால் பொங்கல் பரிசு தொகுப்பும், இலவச வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப்;பெற்று பொங்கல் திருநாளை நீங்கள் சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்ட இடங்களில் நடைபெற்ற விழாக்களில் தொழில்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெரிவித்ததாவது,
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா தொடங்கிய உழவர் பாதுகாப்புத்திட்டம் 14 அம்சங்களை உள்ளடக்கிய திட்டமாகும். ஆண், பெண்ணுக்கு திருமண உதவித்தொகை, இயற்கையாக மரணமடைந்தால் ரூ.10000- ஈமச்சடங்கு செலவு செய்ய ரூ.2500-, முதியோர் ஓய்வூதியம், காசநோய், தொற்றுநோய், விபத்தின் மூலம் இறப்பு, இரண்டு கைகள் மற்றும் கால்கள் இழப்பு போன்றவற்றிற்கு நிவாரணத்தொகை வழங்கும் பல்வேறு அம்சங்களை கொண்ட உன்னதமான திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் இன்றைய தினம் கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாச்சலம் கோட்டத்திற்கு உட்பட்ட 2126 பயனாளிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2,43,41,500- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை, இயற்கை இறப்பு நிவாரணத்தொகை வழங்கப்படுகின்றது. நமது மாவட்டத்தை பொறுத்தவரை முதியோர் உதவித்தொகை ரூ.132 கோடி திட்ட மதிப்பீட்டில் நமது மாவட்டத்தில் அனைத்து முதியோர்களுக்கும் வழங்கப்படுகின்றது. முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உழவர் பெருங்குடி மக்களின் நலனை காக்கும் வகையில் தமிழ்நாடு மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துள்ளது. வறட்சியால் பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உதவி இல்லாமல் வறட்சி நிவாரணங்களுக்கு முதற்கட்டமாக நிவாணரங்களை அறிவித்துள்ள அரசு இந்த அரசு என்பதை பெருமையோடு செல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களால் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமாகும். கிட்டதட்ட 14 ஆண்டுகளாக பதினொராம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு முடித்தபிறகு மாணவ மாணவிகளுக்கு கல்வி தடைபடாமல் இருக்கவும், உந்து சக்தியாக திகழும் வகையிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழக அளவில் ரூ.240 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 லட்சத்திற்கு மேற்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொராம் வகுப்பு படிக்கும் 24675 மாணவ மாணவிகளுக்கு ரூ.8.82 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. இன்றைய தினம் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.15,86,04,440- உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு அம்சங்களுக்கு வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பும், விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகைகள் பெறும் பயனாளிகள் அனைவரும் பொருப்பாக இந்த பணத்தை பெற்றுக்கொண்டு உபயோகமான காரணத்திற்கு நீங்கள் செலவிட வேண்டும் என்ற அன்பான வேண்டுகோலினை வைத்துக்கொள்கின்றேன். இந்த உதவித்தொகைகளை பெற்று நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டும் என வாழ்த்தி; பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், கலைமணி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, கடலூர் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பி.ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, வட்டாட்சியர்கள், முன்னாள் நகர் மன்றத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல