எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம்
வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெற்ற விழாவில் 2481 பயனாளிகளுக்கு ரூ.12.80 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவி தொகையினை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
------------------
கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தில் சமூக நலத்துறையின் மூலம் பத்தாம் வகுப்பு, பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு படித்த ஏழைப்பெண்களுக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவித் தொகை வழங்கும் விழாவில் தமிழக சட்டபேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி.வ.ஜெயராமன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் . தலைமையில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2481 பயனாளிகளுக்கு ரூ.12.80கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கத்துடன் நிதியுதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நலத்திட்டங்கள் வழங்கி பேசுகையில்,
அம்மா வருமை கோட்டிற்கு கீழ் வாழும், ஏழை எளிய பெண்களின் திருமணம் தங்குதடையின்றி நடைபெற வேண்டும் அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு நாளும், சிந்தித்து எண்ணற்ற திட்டத்தை வழங்க உத்தரவிட்டு அதன்படி, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும், திருமண நிதியுதவித்திட்டம் மற்ற மாநிலங்களே புகழ்ந்திடும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் 5வகையான திருமண நிதியுதவித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. சமூக நலத்துறையின் மூலம் முவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவுத்திருமண நிதியுதவித்திட்டம், பழங்குடியினர் பயன்பெறும் வகையில் மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவு சிறப்பு நிதியுதவித்திட்டம், ஏழை விதவைத்தாய்மார்களின் குடும்பம் பயன்பெறும் வகையில் ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித்திட்டம், விதவை பெண்கள் மறுமணம் செய்திடுவதை ஊக்குவிக்கும் வகையில் டாக்டர் தர்மாம்பாள் திருமண நிதியுதவித்திட்டம் மற்றும் மக்களிடையே வகுப்பு வேறுபாடுகளை களையும்பொருட்டு டாக்டர் முத்துலட்சுமிரெட்டி அம்மையார் நினைவு கலப்புத்திருமண நிதியுதவித்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
அதில், மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவுத்திருமண நிதியுதவித்திட்டம் ஏழைக்குடும்பங்களுக்கு மிக உன்னத திட்டமாக திகழ்நது வருகின்றது. இதில், 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ.25,000மும் திருமாங்கல்யத்திற்கு 4கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50,000மும் திருமாங்கல்யத்திற்கு 4கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருவதுடன். தற்பொழுது அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க 8கிராம் தங்கமும் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், ஒரு ஆரோக்கியமான போட்டி, இருந்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எல்லோரும் பட்டப்படிப்பு படித்து முழுமையான பயனைப் பெறவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ஒரு காலத்தில் பெண்கள் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பெற்றோர்கள் இருந்த காலகட்டத்தை மாற்றி ஒவ்வொரு பெண்ணும் ஒரு சாதனையாளராக வேண்டும் என்ற நோக்குடன் அம்மா பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் என்றால் அம்மா எப்பொழுதுமே தனிக்கவணம் எடுத்துக்கொள்வார்கள்.
பெண்களின் பணிச்சுமையை குறைக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கியதுடன் அனைத்துப் பேருந்துநிலையங்களிலும் தாய்ப்பால் ஊட்டும் அறை கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவித்திட்டம். பேறு கால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9மாதமாக உயர்த்தி வழங்கியது. தன்னம்பிக்கையுடன் வாழ விலையில்லா ஆடு, கறவை மாடு வழங்கும்திட்டம். பிறந்த குழந்தைகளுக்கான அம்மா பரிசுப்பெட்டகம் என எண்ணற்ற திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தாலே போதும், பட்டப்படிப்பு முடியும் வரை கட்டணமின்றி பயின்று வர அனைத்து திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு உறுதுணையாக இருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பட்ட மேற்படிப்பு வரை படிக்க வைத்து பொருளாதாரத்தில் நிலைநிறுத்திக் கொள்வதுடன் அரசு வழங்கிடும் திட்டங்களை முழுமையாக பெற்று பயன்பெற்றுக்கொள்ள வேண்டும்
இன்று பத்தாம் வகுப்பு படித்த 878 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவியுடன் 4கிராம் தாலிக்கு தங்கம் ரூ.3.11கோடி மதிப்பீட்டிலும் பட்டம் மற்றும் பட்டயபடிப்பு படித்த ஏழை பெண்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியுடன் 4கிராம் தங்கம் ரூ.9.69கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 2481 பயனாளிகளுக்கு ரூ.12.80கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது என நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நாகராஜன், சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஒ.கே.சின்னராஜ், அம்மன்.கே.அர்சுனன், ஆர்.கனகராஜ். எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, மாவட்ட வருவாய் அலுவலர் தா.கிருஸ்துராஜ், சமூக நல அலுவலர் ஐ.பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல: இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
15 May 2024காந்திநகர் : வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் நான் அல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரி
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024 -
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.