எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், - ஜல்லிக்கட்டு தடை அகற்றம், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதிநீர் பெற்றுத் தந்தது உட்பட தமிழகத்தை சிறந்த முறையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி புரிந்து வருகிறார் என திண்டுக்கல்லில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மண்டல செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றார். மாநில பொருளாளர் சுந்தரேசன், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் என்.எஸ்.நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்,
கடந்த அக்டோபர் மாதம் முதல் சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகத்தில் பதிவுச்சான்றிதழ் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டந்தோறும் நிர்வாகிகளை சந்தித்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2014 மே மாதம் 7ம் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து ஜூன் மாதம் 6ம் தேதி மதுரையில் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் பல தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றேன். அப்போதைய தமிழக முதல்வர் அம்மா 12 சட்டமன்ற உறுப்பினர்களை அதில் கலந்து கொள்ள செய்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்தனர். தற்போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்துள்ளனர். முத்தாய்ப்பாக மாணவர்களும், இளைஞர்களும் சிறந்த வழியில் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
போராட்டம் நடைபெறும் போது தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு தடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் டெல்லியிலேயே தங்கி அதற்கான ஆவணங்களை தயராதித்து ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியதன் பலனாக ஜல்லிக்கட்டு தடை அகற்றப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஆந்திராவிற்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தண்ணீரைப் பெற்று தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவர் சிறந்த முறையில் ஆட்சி புரிகிறார் என்றால் அது மிகையல்ல.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் 10 அம்ச கோரிக்கைகள் வகுக்கப்பட்டு அதை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட உள்ளது. குறிப்பாக மழையின்மை காரணமாகவும், கடும் வறட்சியினால் குடிதண்ணீருக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. இப்பிரச்சனையை போக்குவதற்கு கடைபிடிக்க வேண்டிய திட்டங்களை வலியுறுத்துவோம். இந்நேரத்தில் மறைந்த தமிழக முதல்வர் அம்மாவை நினைத்து பார்க்கின்றேன். குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்காக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உருவாக்கியவர். அது மட்டுமல்லாது வறட்சியின் போது நட வேண்டிய பயிர்கள் குறித்தும் ஆய்வு நடத்தியவர்.
தற்போது நமது இந்தியாவின் மின்சாரத்தேவை 1 லட்சத்து 28 ஆயிரம் மெகாவாட் ஆகும். இன்னும் சில ஆண்டுகளில் மின் தேவை 2 லட்சம் மெகாவாட்டாக ஏற்படும். ஆகவே முன் ஏற்பாடாகவே மின் உற்பத்தியை பெருக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் அம்மா மறைந்தாலும் அ.இ.அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியாக சமத்துவ மக்கள் கட்சி செயல்படும். பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது தேனி மாவட்டத்தின் சார்பில் சரத்குமாருக்கு வீரவேல் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தெய்வேந்திரன் மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.