எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் - விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், பொம்;மையாபுரம் கிராமத்தில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் .அ.சிவஞானம் நடைபெற்றது.
இம்முகாமில், 19 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவினையும், 4 பயனாளிக்கு நத்தம் தூயசிட்டாக்களையும், 30 பயனாளிகளுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளையும், வேளாண்மைத்துறையின் கீழ் தேசிய நீட்டித்த நிலையான வேளாண் இயக்கத்தின் மூலம் 2 பயனாளிக்கு இடுபொருட்கள்(பாராம்பரிய அங்கக பயிர் பாதுகாப்பு மருந்துகள் தயாரிப்பதற்கு), முதியோர் உதவி தொகை 9 பயானிகளுக்கும் ஆக மொத்தம் 64 பயானாளிகளுக்கு ரூ.5,72,500 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொம்;மையாபுரம் கிராமத்தில் உள்ள பயானாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம் வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது :-
அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைசார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்கள் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
இம்முகாமினை முன்னிட்டு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கிராமங்களில் முன்னோடி மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.
மேலும், இம்முகாம்களில் வருவாய்த்துறை மட்டுமல்லாது, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை போன்ற பிற அரசுத்துறைகள் மூலமும் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதையும், அவற்றை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களால் எடுத்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, கிராமத்தில் உள்ள இ-பொது சேவை மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உள்ள பொது இ-சேவை மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புதிதாக தொடங்கப்பட்ட மனுக்கள் பதிவு செய்யும் பிரிவிலும் தங்கள் மனுக்கள் தகுதியானதா என தெளிவாக தெரிந்து கொண்ட பின் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் சீமை கருவேல மரங்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். ஆகையால் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் பட்டாநிலங்களில் உள்ள அனைத்து சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்.
தற்போது வறட்சி பாதித்த விவசாயிகளின் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மூலமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனவே வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களின் அடங்கல் விவரங்களை முறையாக பதிவுசெய்ய வேண்டும் என்றும், பதிவு செய்தவர்களுக்கு வறட்சி நிவாராண தொகை அவர்களிடம் நேரடியாக வழங்கப்படும். தட்டம்மை, ரூபல்லா நோய்களின் தீமைகளை பற்றி விரிவாக பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் தட்டம்மை- ரூபெல்லா ஆகிய நோய்களுக்கான போடப்படும் தடுப்பூசியானது முற்றிலும் பாதுகாப்பானது. எனவே பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், தட்டம்மை- ரூபெல்லா ஆகிய நோய்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் 06.02.2017 முதல் 28.02.2017 வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் நடைபெறுகிறது. எனவே பெற்றோர்கள் தங்களின் 9 மாதம் நிறைவுற்ற குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து சிறுவர் சிறுமியர்களுக்கும் தட்டம்மை- ரூபெல்லா தடுப்பூசிகளை தவறாமல் போடவேண்டும் என அறிவுறுத்தினார்.
பல்வேறு சுகாதாரமற்ற சூழ்நிலைகளினால் பல்வேறு நோய் தொற்று ஏற்படுகிறது. நமது சுற்றுப்புறங்களை நாம் தூய்மையாக பராமரிக்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பொது மக்கள் காய்ச்சல் அறிகுறி தங்களுக்கு தென்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எவ்வித மருந்துகளையும் மருந்துக்கடைகளில் வாங்கி உட்கொள்ளக் கூடாது, வருகின்ற பிப்ரவரி 10 அன்று தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என்றும் அதை தவறாமல் உட்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, அனைத்து அலுவலர்களும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு செல்ல ஏதுவாக அரசு பேருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு பேருந்தில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் பயணம் செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டார்.
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சி.முத்துக்குமரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு. சுரேஷ் , தனித்துணை ஆட்சியர் (சா.ப.தி) திரு.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திரு.த.டே.சத்தியராய், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.கனகராஜ், வட்டாட்சியர்(விருதுநகர்) திரு.சங்கரபாண்டியன் உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.