எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த உலகில் செல்வம் இருந்தும் மனநிம்மதி இன்றி வாழ்பவர்கள் ஏராளம். அதுபோல் செல்வம் இல்லாமல்; வாழ்வில் முன்னேற முடியாமல் வாழ்க்கையை போராடி கழிப்பவர்களும் அதைவிட அதிகம் உள்ளனர். பணம் இருப்பவர்களுக்கு மனக்கஷ்டத்தை போக்கவும், அதேபோல பணத்தட்டுப்பாட்டுடன் வாழ்பவர்களுக்கு செல்வவளம் பெருக்க உதவும் திருத்தலம் ஒன்று உள்ளது.
திருத்தவத்துறை என்னும் லால்குடியை அடுத்த நன்னிமங்கலம் சென்னிவாய்க்காலில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், லட்சுமி நாராயணபெருமாள் கோவில் தான் இந்த சிறப்புகளை பெற்று உள்ளது.
திருச்சியிலிருந்து திருத்தவத்துறை என்னும் லால்குடி வழியாக சாத்தமங்கலம் செல்லும் சாலையில் லால்குடியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் நன்னிமங்கலம் சென்னிவாய்க்கால் கோவில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ்நிலையத்திலிருந்து லால்குடி வழியாக சாத்தமங்கலம் ஆனந்திமேடு கிராமம் செல்லும் பஸ்ஸில் ஏறி நன்னிமங்கலம் சென்னிவாய்க்கால் சிவன்கோவில் என்று இறங்கவேண்டும். இந்த கோவில் செல்ல லால்குடி பஸ்நிலையத்திலிருந்து அதிக அளவில் ஆட்டோக்கள் உள்ளது. கோவிலுக்கு செல்லும் பேருந்து திருச்சி வழ ஆனந்திமேடு டவுன்பஸ் 80யு. லால்குடியிலிருந்து கோவிலுக்கு பஸ் புறப்படும் நேரம் காலை 6.00, 8.00, 10.30 மணி பகல் 1.10, 3.20 மாலை 5.40 மணி.
பவுர்ணமி அன்று திருவண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்கள் கிரிவலம் முடிந்து நேரே திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நன்னிமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி, கரும்பச்சை வண்ணத்தில் பேரளவினராய் மரகத மேனியாய் அருள்பாலிக்கும் ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரே~;வரரை வலம் வந்து வணங்கி பின் ஆலய ஸ்தல விருட்சமான வில்வ மரத்தை அடிபிரதட்சனம் செய்து வழிபட்டால் ஸ்ரீ குபேர மூர்;த்தியின் அருட்கடாசத்துக்கு பாத்திரமாவார்கள் என்று இந்த வரிகள் திருவண்ணாமலை கோவிலில் உள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டள்ளது. இதற்கு காரணம் ஸ்ரீ சிவபெருமான் குபேரனுக்கு அளித்த பொன் வில்வசாரம் இவ்வாலயத்தில் பன்மடங்காக பெருகி அற்புதம் அளித்ததே ஆகும்.
பொன்வில்வசாரம்
பொன்னாலாகிய மூன்று வில்வ தலங்களை உடைய பொன் வில்வசாரம் எந்த தேவலோகத்திலும் கிடைக்காத அருமை, பெருமைகளை உடையது. எந்த ஒரு சுயம்பு லிங்கத்தின் மீது வைத்து ஓம் நமச்சிவாயா என்று ஓதி ஒரு முறை அர்ச்சித்து வழிபட்டால் உடனே அது பன்மடங்காக பெருகி பிரகாசித்து நிறைந்த செல்வத்தை தரும் அற்புதம் உடையது ஆகும். குறித்த யோக, தவ, ஜெப சக்திகளை பெற்றிருப்பவர்களை தவிர இந்த பொன்வில்வ சாரமானது எவர் கண்களுக்கும் தென்படாது. ஏவர் கரங்களிலும் நிலைத்து நிற்காது. இவ்வளவு மஹிமையுடைய பொன் வில்வசாரத்தைச் சிவபெருமான் ஸ்ரீ குபேரனிடம் அளித்தார். இந்த அற்புதமான சிவன் அளித்த பொன்வில்ல சாரத்தை ஸ்ரீ குபேரன் தனது குமாரர்கள் மணிகிரீவன், நலகூபன் ஆகிய ஆகிய இருவரிடமும் அளித்து பூலோகம் எங்குமுள்ள சுயம்பு மூர்த்தி லிங்கங்களிடம் வைத்து வழிபட்டு இதன் மஹிமையை அறிந்து வரும்;படி கட்டளையிட்டார். சுயம்பு லிங்க பூஜையில் சிறப்பு பெற்றவர்களும் சிவ சேவகர்களுக்குமான ஸ்ரீ குபேரனின் புதல்வர்கள் கண்களில் பொன்வில்வசாரம் தென்பட்டது. அவர்தம் கரங்களில் நிலைத்து நின்றது. இதைக்கண்டு ஸ்ரீ குபேரன் பெருமகிழ்ச்சி பெற்றார்.
திரு அண்ணாமலையார் அருள்வழி
சிவபெருமான் தன் தந்தைக்கு அளித்த தெய்வீக மருத்துவம் வாய்ந்த பொன்வில்வசாரம் எந்த சிவாலயத்தில் பன்மடங்காக பெருகும் தெய்வீக தன்மையுடையது என்ற தேவ ரகசியம் அறியாமல் பூலோகம் எங்குமுள்ள சிவாலயங்களில் உள்ள சுயம்புலிங்க மூர்த்திகளின் மீது வைத்து ஸ்ரீ குபேரனின் குமாரர்கள் நலகுகன், மணிகிரீவன் இருவரும் வழிபடி ஸ்வர்ண வில்வதலம், சாதாரண வில்வதலம் போல் பசுமையான காட்சிதர சில இடங்களில் மறைந்தும் காணப்பட்டது. பலகோடி யுக தல யாத்திரையின் பயனாக கோடிக்கணக்கான சுயம்புலிங்க மூர்த்திகளை தரிசித்ததின் பலனாக அவர்களை பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாக விளங்கும் திரு அண்ணாமலை அடையும் பேறுபெற்று பவுர்ணமி அன்று கிரிவலம் வந்து கலியுக மக்களுக்கு தேவையான தர்ம நிதி மற்றும் ~pப்ரநிதி செல்வத்திற்காக சங்கல்பம் செய்துகொண்ட ஸ்வர்ண வில்வதலத்தை ஓம் நமச்சிவாயா என்று ஓதி திருஅண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து இதன் மஹிமையையும், தெய்வீக ரகசியத்தையும் உணர்த்துமாறு மனமுருகி பிரார்த்தனை செய்தனர். திரு அண்ணாமலையாரிடம் வில்வதலம் ஸ்வர்ணயாக பிரகாசித்து மேலும் திரு அண்ணாமலையார், ஸ்ரீ குபேரன் குமாரர்களிடம் இதன் மஹிமையையும், தெய்வீக ரகசியத்தையும் அறிய வேண்டுமெனில்
“ தென்திசை காவேரி இயல்சீர் சேர்
சென்னிச் சிவக்கயல் சுந்தரம் பார் ” என்று அருள்வழி காட்டினார்.
ஸ்வர்ண வில்வசார மஹிமை
திரு அண்ணாமலையார் அருள்வழி காட்டியதில் மகிழ்வுற்ற இருவரும் தென்திசை நோக்கி பயனித்து ஏழ்தலம் புகழ்க் காவிரியார் விளை சோழமண்டல மீது உள் திருத்தவத்துறை என்னும் லால்குடியை அடைந்தனர். அங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ சப்தரி~pஸ்வரர் ஆலயத்தின் சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடினர். நீராடி எழுந்த அவர்கள் தாங்கள் இன்னொரு ஆலயத்தில் இருப்பதை உணர்ந்தனர். தங்கள் கரங்களில் இருந்த பொன்வில்வ சாரமும் மறைந்துவிட்டதை கண்டு சிவன் சொத்திற்கு என்னவாயிற்றோ என்று பதறினர். எல்லாம் சிவனருள் என்று எண்ணி மூலஸ்தானம் நோக்கி சென்றனர்.
அங்கே ஓர் அற்புதத்தை கண்டு பரவசமும், பேரானந்தமும் கொண்டனர். கரும்பச்சை வண்ணத்தில் பேரளவினராய் மரகதம் போல் ஜொலிக்கும் சுயம்புலிங்க மேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன்வில்வசாரம் பொங்கிப் பொங்கி பன்மடங்காக பெருகி வாசைன நிறைந்து, ஸ்வர்ண வில்வ தலங்களாக மஞ்சள் நிறத்தில் ஜொலித்து பிரகாசிக்க கண்டனர். ஓம் நமச்சிவாயா என்று ஓதி அர்ச்சிக்க அது மேலும் மேலும் பொங்கி நிறைந்து பொலியக் கண்டனர். கரும்பச்சை வண்ண மரகத மேனியில் ஸ்வர்ணதளம் பன்மடங்கு பொங்கிப் பிரகாசித்ததைக் கண்டு பேருவுவகை அடைந்தனர்.
குபேரனருள்
தன் புதல்வர்களுக்கு தனக்கு கிட்டாத தரிசனம் கிட்டியது பற்றியும் பொன்வில்வசாரத்தின் மகிமையையும் அதன் தெய்வீக ரகசியத்தை உணர்ந்ததை பற்றியும் அறிந்து பெருமகிழ்ச்சியுற்ற ஸ்ரீ குபேரன் திரு அண்ணாமலை வாழ் அருள்வழி காட்டிய, தென்திவைக்காவேரி சோழமண்டலத்தில் உள்ள சென்னிவள நாட்டில் அருள்பாலிக்கும் கயல்விழிகளை உடைய ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரரின் பெருமைகளையுணர்’ந்து இங்கு வந்து வழிபட்டார். மேலும் இவ்வாலயத்திற்கு பவுர்ணமி அன்று வந்து ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வந்து வழிபடும் பக்தர்கள் தம் வாழ்நாளில் முறையாக ஈட்டும் ஒவ்வொரு பைசா சம்பாத்தியத்திலும் பரிபூரண சக்தி நிறைந்திடவும் பரிபூரண லெட்சுமி கடாட்சத்தை பெறவும் தன்னுடைய சங்க பதும புண்ணிய சக்திகளையும் அவற்றின் ஆசீர்வாதங்களையும் கூட்டி அவற்றை நன்முறையில் பெருக்கி நிறைவுபெற செய்து செலவிடச் செய்யவும், வியாபாரம், தொழில், பதவி போன்றவற்றில் அதர்ம முறையிலும் லஞ்சம் மூலமும் பணம் சம்பாதித்து பணக்க~;டம் இல்லாவிடினும் மனக்க~;டப்படுவோரின் சகல தோ~ங்களையும் நீக்கி அவர் தம் ஈட்டிய பொருளில் தர்மநிதி மற்றும் ~pப்ரநிதியை நிறைத்து முறையான வழயில் தர்ம காரியங்களில் செலவிடச் செய்து சொத்தை பெருக்கவும் குபேரன் அருள்பாலிக்கிறார்.
குபேர நாக தேவதைகள்
பிரபஞ்சத்தின் அனைத்து கோடி நாகலோகங்களிலும் உள்ள நாகங்களுக்கு அதிபதியாக விளங்கும் ஸ்ரீ அஸ்தீக சித்தர் யோககன யாத்திரையில் வந்து வழிபடும் நித்ய பூஜை ஸ்தலங்களுள் இதுவும் ஒன்றாகும். இங்கு குபேர சந்திர நாகங்களின் நடமாட்டம் அதிகம் ஆகும்.
இவ்வாலயத்தின் அருகேயுள்ள இவ்வாலயத்திற்கு சொந்தமான தோப்பில் பெரிய புற்று ஒன்று உள்ளது. பவுர்ணமி தோறும் திரளான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் பக்தர்கள் இந்த புற்று கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இன்றும் இவ்வாலயம் நாகங்கள் உலவும் இடமாக திகழ்கின்றது.
கல்வெட்டு கூறும் வரலாற்று தகவல்கள்
இவ்வாலயத்திற்கு அருகில் செல்லும் சென்னிவாய்க்காலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நடுக்கல் ஒன்று இவ்வாலயத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. இது பல்லவர் கால நடுக்கல் ஆகும். வலது இடது புறங்களில் பல்லவர் காலத்து கல்வெட்டு காணப்படுகிறது. இந்த நடுக்கல் தௌ;ளாறெரிந்த மூன்றாம் நந்திவர்மனின் 21-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.867); அமைக்கப்பட்டதாகும். மேலும் இவ்வாலயத்தில் உள்ள ஒரு கல்வெட்டு மூலம் மைசூர் நகரிலிருந்து ஹொய்சாலர்கள் இங்கு வந்து இவ்வாலய நிலங்களுக்கு மதகு அமைத்து கொடுத்து விவசாயம் தழைக்க உதவி செய்ததைக் கூறுகிறது. மிகப் பழமை வாய்ந்த கோவில் என்று இங்கு உள்ள கல்வெட்டுகளில் இருந்து தெரிய வருகிறது. உள்மண்டப மேல்நிலையில் உள்ள கல்வெட்டு சோழர்காலத்தவை. குறிப்பாக இராஜராஜ சோழன் காலத்தவை என கருதப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் சுமார் 1200 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என தெரியவருகிறது.
ஆலயஅமைப்பு
சுற்றிலும் பசுமை நிறைந்த வயல்கள், தோப்புகளுக்கு நடுவில் மேற்கு நோக்கி சுமார் 5 அடி உயரத்தில் கரும்பச்சை வண்ணத்தில் மரகத மேனியாய் ஸ்ரீ சுந்தரே~;வரர் அருள்பாலிக்கிறார். ஆலய ஸ்தல விருட்சம் பொன்வில்வ மரமும், அதனருகில் மகிழமரமும் உள்ளது. மார்ச் மாத கடைசி வாரத்தில் இருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை ஏறக்குறைய சுமார் 15 தினங்களுக்கு மாலையில் சூரிய கதிர்கள் இறைவன் மீது நேராக படும்போது கரும்பச்சை வண்ணத்தில் இறைவன் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சியாகும். இவ்வாலயத்தில் காண்பிக்கப்படும் தீபஆராதணை லிங்கத்தில் பட்டு பிரதிபலித்து லிங்கததில் ஒளிப்பிழம்பாக ஜெக ஜோதியாக தெரிவதைக்காண கண் கோடி வேண்டும்.
திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள் கிரிவலம் முடிந்து இவ்வாலயத்திற்கு வந்து வழிபடுகின்றனர். பௌர்ணமி அன்று திரளான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வந்து ஆலய ஸ்தலவிருட்சம், பொன்வில்வ சாரத்திற்கு அரைத்த சந்தனம் மஞ்சள் பூசி அடிப்பிரதட்சணம் செய்து பின் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வந்து வணங்கி வழிபட்டு அபிஷேக தீர்த்தத்தை பெற்று செல்கின்றனர்.
பக்தர்கள் தங்கள் பணகஷ்டம் மற்றும் மனக்கஷ்டம் நீங்கி வளமுடன் வாழ பௌர்ணமியன்று இங்கு வந்து வில்வமரத்தை அடிபிரதட்சணம் செய்து ஸ்ரீ மீனாட்சி சுந்தரே~;வரரை வலம் வந்து வணங்கி செல்கின்றனர்.
இத்திருக்கோவிலின் செயல் அலுவலராக முத்துசாமி, பரம்பரை அறங்காவலராக என்.சியாமளா ஆகியோரும் செயல்பட்டு வருகின்றனர்.
இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு 1.2.2016-ல் நடைபெற்றது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.