எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம் இராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேலம் அகற்றும் பணிகள் குறித்து அனைத்து துறைகளை அதிகாரிகளின் ஆலோசணைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.நடராஜன்,தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள 11.565 ஹெக்டர் பரப்பளவிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றப்பட்டுள்ளதாகவும், வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்திட முன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதார்.
செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் மேலும் தெரிவித்தது:
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற உத்தரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 104947.03.5 ஹெக்டர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதில் தனியார் பட்டா நிலங்களில் 68657.97.5 ஹெக்டர் பரப்பளவிலும், அரசு நிலங்களில் மொத்தம் 36259.06.0 ஹெக்டர் பரப்பளவிலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதாக கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டுமென உத்தரவிடப்பட்டது.அதன் பேரில் இப்பகுதிகளில் இதுவரை மொத்தம் 11565.82.5 ஹெக்டர் பரப்பளவில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக பரப்பளவிலான சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுப்பணித்துறை கண்மாய்கள், ஊராட்சிகளுக்குட்பட்ட கண்மாய்கள் பொது ஏலத்தில் கொண்டுவர உரிய விளம்பரம் செய்யப்பட்டு ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.அதுபோல நேரு யுவகேந்திரா போன்ற தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் பெருமளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மூலமாக அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் சீமைக் கருவேல மரங்களின் தீமைகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டு தங்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களிடம் உறுதி மொழி பெறப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியர் அடங்கிய விழிப்புணர்வு பேரணிகள் மற்றும் அரசு கேபிள் மூலமாகவும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுப்பணித்துறை, நகராட்சி, ஊராட்சிகள், பேரூராட்சிகள், வனத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NH) உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி முன்னேற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. இதுதவிர தனியார் பட்டா நிலங்களில் உள்ள கருவேல மரங்களை உடனடியாக அவரவர்களே அகற்ற வேண்டும் எனவும் அவ்வாறு அகற்ற தவறும் பட்சத்தில் அரசு செலவில் சீமைக்கருவேல மரங்களை அகற்றி அதற்குரிய செலவுத் தொகை இருமடங்காக பட்டா உரிமைதாரர்களிடம் வசூல் செய்து அரசு கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், அறிவிப்பு விளம்பரம் மற்றும் ஒவ்வொரு பட்டா உரிமைதாரர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு தனி நபர் பட்டா நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை துரிதமாக அகற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர்விநியோகம் செய்திட ஏதுவாக மொத்தம் ரூ.1531.77 இலட்சம் மதிப்பீட்டில் 1,061 பணிகள் செயல்படுத்த சிறப்பு திட்டம் தயார் செய்யப்பட்டு அவற்றில் இதுவரை ரூ.1010.490 இலட்சம் மதிப்பீட்டில் 831
பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. புதிதாக உறைக் கிணறுகள் வெட்டவும், பழைய கிணறுகளை ஆழப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி குடிநீர்; விநியோக குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்திட வேண்டுமென குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் முள்ளிமுனை, சின்ன ஏர்வாடி குடிநீர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்திட மத்திய உவரி ஆராய்ச்சி நிறுவன தொழில்நுட்ப அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து உடனுக்குடன் சரிசெய்து வருகின்றனா;. இவ்விரு திட்டங்களும் இன்னும் இரு தினங்களில் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். காரங்காடு கிராமத்தில் 16 இலட்சம் மதிப்பில் கடல்நீரை குடிநீராக மாற்றம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணி இன்னும் ஒரு வார காலத்திற்குள் துவங்கப்படவுள்ளது. இவை தவிர 15 பெரிய ஊராட்சிகளில் உவரி நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்த பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வறட்சி நிவாரண பணிகள், வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியாரின் (வேளாண்மை) பிரிவு நேர்முக உதவியாளர் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 22 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 18 hours ago |
ஆனியன்ப்ரை6 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
தேர்தல் நன்கொடை நிதி பத்திர விவகாரம்: சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
14 May 2024புதுடெல்லி : தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.