எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 97 பேரும், எதிர்ப்பாக 122 பேரும் வாக்களித்தனர். இதில் ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த நட்ராஜூம் சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
சபாநாயகர் வேண்டுகோள்
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த ‘‘பேரவை தலைவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை’’ எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். முன்மொழிவதற்கு பேரவை இசைவு தர வேண்டும். இந்த தீர்மானத்திற்கு இசைவு தருபவர்கள் எழுந்து நி்ல்லுங்கள் என்று சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்றார்கள். தீர்மானத்தை எடுத்து கொள்வதற்கு 35 உறுப்பினர்களுக்கு குறையாமல் ஆதரவு தர வேண்டும். இப்போது அந்த தீர்மானத்தை எடுத்துக்கொள்வதற்கு பேரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இந்த தீர்மானத்தை உடனடியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த தீர்மானத்தை முன்மொழிந்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்காக பேரவை அலுவல்களை ஏற்று நடத்துமாறு துணை சபாநாயகரை கேட்டுக் கொள்கிறேன் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
விவாதம் தொடர்ந்தது
இதனையடுத்து சபாநாயகர் தனது இருக்கையில் இருந்து இறங்கி அவரது அறைக்கு போய் அமர்ந்தார். சபாநாயகர் இருக்கையிலிருந்து எழுந்து சென்றதும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சபையை நடத்தினார். எதிர்க்கட்சி தலைவர் தீர்மானத்தை முன்மொழியலாம் என்று துணை சபாநாயகர் கேட்டுக்கொண்டார். அதன்படி, ‘பேரவை தலைவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தை முன்மொழிவதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த தீர்மானத்தை வழிமொழிவதாக தி.மு.க. துணைத்தலைவர் துரைமுருகன் கூறினார். இதனையடுத்து விவாதம் தொடர்வதாக துணை சபாநாயகர் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முகமது அபுபக்கர் ஆகியோர் பேசினார்கள். இந்த தீர்மானத்தை எதிர்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சரும், அவை முன்னவருமான கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பேசினார்கள்.
குரல் வாக்கெடுப்பு
இதனையடுத்து இந்த தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விடுவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தார். குரல் வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக அதிகம் பேர் இருந்ததால், இந்த தீர்மானம் தோற்றுப் போனதாக துணை சபாநாயகர் அறிவித்தார். உடனே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, வாக்கெடுப்பை டிவிஷனுக்கு விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து துணை சபாநாயகர் டிவிஷன் வாக்கெடுப்புக்கு விடுவதாக அறிவித்தார்.
தீர்மானம் தோல்வி
இப்போது 3 முறை அழைப்பு மணி ஒலிக்க வேண்டும் என்று துணை சபாநாயகர் கூறினார். உடனே சட்டசபையிலிருந்த அழைப்பு மணி 3 முறை ஒலிக்கப்பட்டது. இந்த அழைப்பு மணி முடிவடைந்ததும், பேரவை வாயில்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று துணை சபாநாயகர் கூறினார். உடனடியாக பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. மீண்டும் இந்த தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விடுவதாக துணை சபாநாயகர் மீண்டும் அறிவித்தார். குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது.
அப்போது குரல் ஓட்டெடுப்பை எதிர்க்கட்சி தலைவர் ஏற்காததால், எண்ணி கழிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. எனவே அனைத்து உறுப்பினர்களும் அவரவர் இருக்கையில் அமர வேண்டும். வாக்கெடுப்பு முடியும் வரை யாரும் வெளியே செல்லக்கூடாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
சபையில் 6 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவு வாரியாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று துணை சபாநாயகர் கூறினார்.
வாக்கெடுப்பு நடந்தது
இதன்பின் 12.14 மணிக்கு வாக்கெடுப்பு துவங்கியது. ஒவ்வொரு பகுதி வாரியாக (டிவிஷன்) வாக்கெடுப்பு நடந்தது. பேரவை தலைவரை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரிப்போர் எழுந்து நிற்கலாம் என்று துணை சபாநாயகர் கூறினார். முதல் பிரிவில் யாரும் எழுந்து நிற்கவில்லை. அதன் பின்னர் இந்த தீர்மானத்தை எதிர்ப்போர் எழுந்து நில்லுங்கள் என்று கூறினார். உடனே முதல் பகுதியில் இருந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்றார்கள்.
எதிர்த்து வாக்கு
முதல் பகுதியில் மயிலாப்பூர் தொகுதி அ. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் இருந்தார். அவர் சென்றமுறை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களித்தார். ஆனால் நேற்று, நடராஜ் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தார். அவருக்கு அ.தி.மு.கவை சேர்ந்த உறுப்பினர்கள் மேசையை தட்டி பாராட்டினார். தொடர்ந்து ஒவ்வொரு பகுதி வாரியாக வாக்கெடுப்பு நடந்தது. சட்டசபை செயலாளர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களின் பெயரையும் படித்தார். ஒவ்வொருவரும் தங்களது பெயர் படிக்கப்பட்டவுடன் இருக்கையில் அமர்ந்தனர். 12.14 மணிக்கு துவங்கிய வாக்கெடுப்பு 12.28 மணிக்கு முடிவடைந்தது. தீர்மானத்தை ஆதரிப்போரும், எதிர்ப்போரும் இருந்தனர். யாரும் நடுநிலை வகிக்கவில்லை.
ஒ.பி.எஸ் அணி புறக்கணிப்பு
ஒ.பன்னீர்செல்வம் அணியில் மொத்தம் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று சபைக்கு ஒ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. தீர்மானத்தை ஆதரித்து தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஓட்டெடுப்பு முடிந்ததும் சிறிது நேரத்தில் முடிவுகளை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தார். பதவியிலிருந்து சபாநாயகரை நீக்ககோரும் தி.மு.க. தீர்மானத்தை ஆதரித்து 97 எம்.எல்.ஏ.க்களும், அதனை எதிர்த்து 122 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்திருப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் முன்மொழிந்து துணைத்தலைவர் வழிமொழிந்த இந்த தீர்மானம் தோல்வியுற்றது என துணை சபாநாயகர் அறிவித்தார்.
மொத்தம் 230 உறுப்பினர்கள்
அப்போது அ. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நீண்ட நேரம் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம் செய்தனர். சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் 234 பேர். இதில் ஜெயலலிதா மரணமடைந்ததால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வரவில்லை. சபாநாயகர், துணை சபாநாயகர் வாக்களிக்கவில்லை. எனவே மொத்தம் உள்ள 230 எம்.எல்.ஏ.க்களில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 122 பேரும், தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் 97 பேரும் வாக்களித்தனர். ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 11 பேரும் நேற்று சபைக்கு வராமல் புறக்கணித்தனர்.
துணை சபாநாயகர் புகழாரம்
ஓட்டெடுப்பு முடிந்து அறிவிப்பை வெளியிட்டபின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.,
சபாநாயகர் பல்வேறு பதவிகளை வகித்தவர். மூத்தவர். பேரவை தலைவர் என்பது மலர்பாதை அல்ல. முட்கள் உள்ள பாதையில் நடக்கும் பணி. மிக கண்ணியமாக மரபுகள்படி, விதிப்படி சபையை நடத்தினார். 6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அமைச்சராக இருந்திருக்கிறார். துணை சபாநாயகராக இருந்திருக்கிறார். ஆளும் கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அதிக நேரம் வாய்ப்பு கொடுத்தவர் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
சரியாக 12.34 மணிக்கு வாக்கெடுப்பு முடிந்தது. பின்னர் சபாநாயகர் சபைக்கு வந்தார். அப்போது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்றார்கள். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம் செய்து வரவேற்றார்கள். அப்போது சபாநாயகர் தனபால் பேசியதாவது:-
ஜெயலலிதா பாராட்டு
3-6-2016 அன்று நான் பேரவைத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றபோது, என்னை வாழ்த்திப் பேசிய முதல்வர் அம்மாவுக்கு நன்றியைத் தெரிவித்து உரையாற்றுகையில் நான் குறிப்பிட்டதை நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் குறிப்பிட்டது, “அம்மா என்னைப் பாராட்டிப் பேசியது, என்னுடைய வாழ்நாளில் நான் பெற்ற பெரும் வரமாகவே கருதுகிறேன். இனி, என் வாழ்நாளில் எவ்வளவு பெரிய வளம் கிடைத்தாலும், இந்த அளவுக்கு அவை எனக்கு மகிழ்ச்சியைத் தராது, இன்பத்தைத் தராது. மனதாரச் சொல்கிறேன், இதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. என் வாழ்வில் நான் பெற்ற பேரின்பம், பெரிய பாக்கியம், ஜெயலலிதா என்னைப் பாராட்டியது ஒன்றுதான் என்றேன்.” பெரும் மகிழ்ச்சியைத் தந்துவிட்டு, மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா மறைந்துவிட்டார்.
விருப்பு-வெறுப்பு இல்லை
அன்றைக்கு அம்மா வாழ்த்திப் பேசுகையில், “எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டாலும், கட்சி மாச்சரியங்களைப் புறந்தள்ளி, அனைவரையும் ஒருசேர நினைத்து நடுவராக இருந்து தீர்ப்பு அளிக்கும் பணியினை, நீங்கள் நடுநிலையோடு ஆற்றுவீர்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை” எனக் குறிப்பிட்டதற்கு மாறாக, ஒரு துளியேனும் விலகி செயல்படக்கூடாது என்பதை சிந்தையில் நிறுத்தி செயல்படுபவன் நான்.
இன்றைக்கு என்னை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்கிற தீர்மானம் தோல்வியுற்றுள்ளது. அம்மாவின் ஆசியோடு, பேரவைத் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கு, யார் மீதும் தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்பு கிடையாது. இந்த அவை இயற்றிக் கொடுத்த, விதிகளின்படி, மரபின்படியே நான் செயல்பட்டு வருகிறேன் என்பதை மட்டும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொண்டு அடுத்த அலுவலுக்குச் செல்கிறேன்.
இவ்வாறு சபாநாயகர் பேசினார்.
துறைமுருகன் பேச்சு
பின்னர் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசினார். இந்த தீர்மானத்தை நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கொண்டுவரவில்லை. தங்களை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாபாராட்டியது பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள். உங்கள் கட்சி தலைவர் பாராட்டி இருக்கிறார். இந்த சட்டசபை முடியும் வரை நாங்களும் உங்களை பாராட்டும் அளவுக்கு உங்களது பணி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தோம் என்று கூறினார்.
விவாதம் முடிந்தது
11.15 மணிக்கு எடுத்துக் கொண்ட இந்த தீர்மானம் 12.36 மணி அளவில் முடிந்தது. ஏற்கனவே கடந்த 18-ம் தேதி அன்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்து அதில் வெற்றி பெற்றார். இப்போது சபாநாயகர் தனபாலை பதவியிலிருந்து நீக்க கோரும் தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து தி.மு.க.வினர் பெரும் விரக்தியில் காணப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை3 min 37 sec ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 1 min ago |
மினி பான் கேக்1 week 19 hours ago |
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் பேட்டி
07 May 2024நெல்லை : அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என்று தன்னை தாக்கியவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் தெரிவித்தார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
பாலியல் வழக்கு விவகாரம்: ரேவண்ணா மீது 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்
07 May 2024பெங்களூரு : பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாக புகார் கொடுத்துள்ளது அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: மேற்குவங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
07 May 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கில் அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
எந்த குற்றவாளியும் தப்பக்கூடாது: பிரஜ்வல் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : பிரதமர் நரேந்திர மோடி உறுதி
07 May 2024புதுடெல்லி : பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்துவந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
-
சென்னையில் சட்டவிரோத மசாஜ் சென்டர்களுக்கு சீல்: மாநகர காவல்துறை நடவடிக்கை
07 May 2024சென்னை, சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களூக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 60.97 சதவிகிதம் வாக்குப்பதிவு
07 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப் பதிவில் ஏறத்தாழ 60.97 சதவிகிதம் வாக்குப் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சூர்யகுமார் யாதவ் அபார சதம்: ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை
07 May 2024மும்பை : சூர்யகுமார் யாதவ் அதிரடி சதத்தால் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிப்பெற்றது.
மும்பை பந்துவீச்சு...
-
ஜெயக்குமார் மர்ம மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் தங்கபாலுவிடம் விசாரணை
07 May 2024நெல்லை : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ், எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் மற்றும் கே.வி.தங்கபாலு ஆகி