முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலை: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில் நடைபெற்றது. திங்கட்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறைகள் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், களியல் கிராமத்தை சார்ந்த விஜயலட்சுமி என்பவரின் கணவர் சுனில் என்பவர் 24.12.2015 அன்று ஆற்றில் குளிக்க சென்றபோது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தமைக்காக, அன்னாரது குடும்பத்திற்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை, கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) எம். சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்