எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளின் இருதய அறுவைசிகிச்சை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழாவினை கலெக்டர் சி.அ.ராமன், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:-பெற்றோர்கள் தங்களின் குழந்தைக்கு இருதய குறைபாடு உள்ளது என்று தெரியவந்தால் அறுவை சிகிச்சை செய்ய பயந்தோ அல்லது தங்களுடைய வாழ்க்கை பொருளாதாரத்தின் இயலாமையினாலோ இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில்லை. இந்த நிலையினை போக்குவதற்காகவே வேலூர் மாவட்டத்தில் இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையான அறுவை சிகிச்சைகள் செய்து குணப்படுத்த பெற்றோர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பினை இந்த விழிப்புணர்வு விழாவின் மூலம் வழிகாட்டுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சை குறித்து கவலையோ அச்சமோ இல்லாமல் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் குழந்தைகளுக்கு இருதய குறைபாடு இருக்கிறதா என்று பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு சென்று முதல்நிலை பரிசோதனையினை மேற்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் நோயின் குறைபாடுகள் அறிந்துகொள்ள 1 வார காலம் தேவைப்படும். ஆனால் தற்போதுள்ள நவீன மருத்துவ கருவிகளின் மூலம் ஒரே நாளில் தங்கள் குழந்தைக்கு இருதய குறைபாடு உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவும் அதற்கு மேல் ஆகும் செலவினத் தொகையினை ஐஸ்வர்யா தொண்டு நிறுவனம் மூலமாகவும் பெற்று இருதய அறுவை சிகிச்சைகளை இலவசமாகவே மேற்கொள்ளலாம். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்கள் தங்கள் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள கவலை கொள்ள தேவையில்லை.மேலும் இருதய அறுவை சிகிச்சை செய்த பின் குழந்தைகளுக்கு சத்தான உணவு வகைகள் மட்டுமே உண்ண வேண்டும். சிகிச்சைகள் மேற்கொள்ளும் போது வெளியில் சாப்பிடக்கூடாது. மேலும் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளின் படி மட்டுமே நடத்தல் வேண்டும்.வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் செப்டம்பர் 2016 முதல் ஏப்ரல் 05, 2017 வரை பிறந்த நாள் முதல் 18 வயது வரை நிரம்பிய குழந்தைகளில் பல்வேறு இருதய குறைபாடுகளுடன் 399 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர்.இவர்களில் 108 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சைகள் செய்து குணமடைந்து ஆரோக்கியமாக உள்ளனர். மீதமுள்ள 291 குழந்தைகள் முன் சிகிச்சையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைக்கு முழு ஆரோக்கியத்தை வழங்க முதலில் குழந்தைகளை இருதய பரிசோதனை செய்து இருதய குறைபாடுகள் இருப்பின் இருதய அறுவை சிகிச்சைகளை செய்து பயன்பெற வேண்டும். வெற்றி கரமாக பல்வேறு இருதய அறுவை சிகிச்சைகளை செய்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ பிரிவின் துறைத்தலைவர், மலர் மருத்துவமனை குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களை பாராட்டி மேலும் தங்களின் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள கலெக்டர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சிகளின் போது குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ பிரிவின் துறைத்தலைவர் மரு.தேரணிராஜன், அடுக்கம்பாறை மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவின் துறைத்தலைவர் மரு.செல்லையா, குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்க திட்ட இயக்குநர் ராஜபாண்டியன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.உஷா சதாசிவன், மலர் மருத்துவமனை குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மரு.பாலகிருஷ்ணன், மரு.சுவாமி, ஐஸ்வர்யா தொண்டு நிறுவனர் சித்ராவிஸ்வநாதன், மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.