எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கிராமப்புற மாணவர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க தமிழகத்தில் 'நீட்' தேர்வை தவிர்ப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில் தற்போது உள்ள நிலையே தொடர வழிவகை செய்யும், தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு விரைவாக ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுற்தியுள்ளார். மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பல்மருத்துவ மேல்படிப்பு ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர தேசிய அளவில் ஒரு பொதுத்தேர்வை (நீட்) நடத்தி அதன் மூலம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய முறையை வரும் ஆண்டில் இருந்து அமுல்படுத்த உள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால் நகர்ப்புற மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் வலியுறுத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த 2 மசோதாக்களுக்கும் இன்னும் அனுமதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்படாமல் இருக்கிறது. ஆனால் மருத்துவக்கல்லூரிகளுக்கு நீட் தேர்வு நடத்துவதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டியிருக்கிறது. இதனால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் விரைந்து கிடைக்க செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
மசோதாக்கள் நிறைவேற்றம்
அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு பல்மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல்மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கு தமிழகத்தில் பின்பற்றப்பட்ட அதே நிலை நீடிக்க வகை செய்யும்படி சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் கவர்னர் மூலம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 2 மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்துவிட்டால் தமிழகத்தில் வழக்கம்போல் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு பல்மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நியாயமாகவும்,வெளிப்படையாகவும் நடக்க உதவும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
நல்ல மருத்துவ வசதி
தற்போதுள்ளபடி மருத்துவக்கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கு மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத இடங்களை தேர்வு மற்றும் அனுபவம் ரீதியாக நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது இந்த 50 சதவீதத்தில் பாதி அளவுக்கு பணி அனுபவம் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. மீதமுள்ள பாதி அளவுக்கு மருத்துவ பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2 ஆண்டுகள் மருத்துவ சேவை செய்தவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு அட்மிஷன் கொடுக்கப்படுகிறது. இதனால் கிராமப்புறம் மற்றும் மலைஜாதியினர்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்கிறது.
நீட் தேர்வு அமல்
இந்தநிலையில் நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவகல்லூரிகளில் மாணவர்கள் சேர தேசிய அளவில் ஒரு பொதுத்தேர்வை (நீட்) மத்திய கொண்டு வரும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956, மறறும் பல் மருத்துவ சட்டம் 1948 ஆகியவற்றில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத இடங்களிலும் நீட் தேர்வு மூலமே நிரப்ப வேண்டும் என்றும் அந்த திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசு மேல்முறையீடு
நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை விபரம் குறித்து வெளியிட்டுள்ள விபர தொகுப்பில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது நீட் தேர்வு அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளானது இந்திய மருத்துவ கவுன்சில் முதுகலை மருத்துவ படிப்புக்கான 2000 -ம் ஆண்டு சட்டத்தில் 2017 மார்ச் 31-ம் தேதி வரை இருக்கும் விதிமுறைகளுக்கு முரண்பாடாக உள்ளது. இதனால் கிராமப்புற மக்களுக்கும், தொலைதூரத்தில் வசிக்கும் மக்களுக்கும் மருத்தவ வசதி கிடைக்காமல் போகும். மேலும் அரசு பணியில் உள்ள டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டின் ஒரு நீதிபதியை கொண்ட பெஞ்ச் பிறப்பித்துள்ள 2 உத்தரவில் இந்திய மருத்துவ கவுன்சிலின் 2000-ம் ஆண்டின் விதிமுறைகள் படிதான் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பில் அட்மிஷன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த 2 உத்தரவுகளையும் எதிர்த்து தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்ய உள்ளது.
தற்போதுள்ள நிலையே ...
கிராமப்புற மாணவர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க தமிழகத்தில் 'நீட்' தேர்வை தவிர்ப்பது அவசியமாகும். அதனால் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. அதனால் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது மாநில அரசின் ஒதுக்கீட்டின்படி இருக்க சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த 2 மசோதாக்களுக்கும் விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வேண்டும். முதுநிலை மருத்துவ படிப்புக்கான மத்திய அரசின் நீட் வழிகாட்டுதலில் நீட் தேர்வை தவிர மாநில அரசின் கொள்கையில் தலையிட மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது பின்பற்றப்படவில்லை. தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள 2 மசோதாக்களில் கூறப்பட்டுள்ளபடி மாநில அரசின் கொள்கைகளை இணைக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சிலின் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
பெரிதும் பாதிப்பு
மருத்துவ இளம்நிலை வகுப்புகளில் நீட் தேர்வு அடிப்படையில் அட்மிஷன் கொடுத்தால் மாநில தேர்வு வாரியம் மூலம் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களில் 98 சதவீதம் பேர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள மசோதாவில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மற்றும் இதர ஆதாரங்கள் கிடைக்காமல் இருக்கிறது. இதனால் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக தகுதி உள்ள மாணவர்கள் நீட் தேர்வு கட்டாயத்தால் இந்தாண்டு அட்மிஷன் கிடைக்காமல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகுவார்கள். இதனால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார உரிமை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் மாணவர்களிடத்தில் அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ஒப்புதல் ...
இந்த அச்சத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவ மேற்படிப்பு பல் மருத்துவ மேல்படிப்புக்கான 2017-ம் ஆண்டு மசோதாவுக்கும் தமிழ்நாடு மருத்து கல்லூரி பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கான மசோதா 2017-க்கும் விரைந்து ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.