எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டியில் 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 30 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ஆணை ஆகியவற்றை தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் வழங்கினார்.
மதிப்பீட்டுக்குழு ஆய்வுக்கூட்டம்
தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழுவின் ஆய்வுக்கூட்டம் ஊட்டியிலுள்ள தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் தலைமை தாங்கி 100 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் 30 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை வழங்கி பேசியதாவது-
சிறப்பு பகுதி திட்டத்திற்கு ரூ.75 கோடி
மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் அரசு ஏழை_எளிய மற்றும் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை_எளிய மக்களுக்கு அத்தகைய திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய எங்களைப் போன்ற குழுக்களை எல்லா பகுதிகளுக்கும் அமைத்துள்ளது. சமூக பொருளாதார மேம்பாட்டினை மாநிலம் முழுவதும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நம்முடைய தமிழக அரசு சமச்சீர் வளர்ச்சி நிதியம் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 422 திட்டங்களைக்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.282.22.கோடியாகும். ஊரக பகுதியில் இருக்கும் 105 வட்டாரங்களை தேர்வு செய்து அங்கு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேபோல மலைப்பகுதி வளர்ச்சிக்கான சிறப்பு பகுதி மேம்பாட்டித்திட்டத்தை உருவாக்கி அதற்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நேற்றைய ஆய்வின் போது வனப்பகுதியில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும், தார்சாலைகளாக மாற்ற வேண்டும் என மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்கினர். அதன்படி அத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக
அரசு கொண்டு வரும் திட்டத்தை விரைவாகவும், வேகமாகவும் நிறைவேற்ற வேண்டும் என்பது மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் எண்ணமாகும். தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை விரைவுபடுத்தி நிறைவேற்ற வேண்டும் என்பது இங்கு வருகை தந்திருக்கும் மதிப்பீட்டுக் குழுவின் நோக்கமும், கடமையுமாகும். அரசுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு பாலமாக இருந்து அரசு கொண்டு வரும் திட்டங்களை மதிப்பீடு செய்து அந்த திட்டங்களையெல்லாம் விரைவாகவும், வேகமாகவும் மக்களிடையே கொண்டு சென்று பணியை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் மதிப்பீட்டுக்குழுவின் நோக்கம். எனவே அரசின் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
இந்த ஆய்வுக்கூட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா(தாம்பரம் சட்டமன்ற தொகுதி) ஆர்.கனகராஜ்(சூலூர்), ஆர்.சக்கரபாணி(ஒட்டன்சத்திரம்), எஸ்.சுதர்சனம்(மாதவரம்), செல்வமோகன்தாஸ் பாண்டியன்(தென்காசி), நந்தகுமார்(அணைக்கட்டு), டாக்டர் பரமசிவம்(வேடசந்தூர்), பாஸ்கர்(நாமக்கல்), மணோன்மணி(வீரபாண்டி), ராஜேஷ்குமார்(கிள்ளியூர்), ஜெயந்தி பத்மநாபன்(குடியாத்தம்), மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வளர்ச்சிப்பணிகள் ஆய்வு
அதனைத்தொடர்ந்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுவானது ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோழிப்பண்ணை பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.143 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட கோழிப்பண்ணை கோட்டேஸ் சாலையினையும், நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட அனுமாபுரம் பகுதியில் தலா ரூ.2.10 லட்சம் வீதம் கட்டப்பட்டு வரும் 7 பசுமை வீடுகளையும், நடுவட்டம் பகுதியில் பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் கட்டும் பணியினையும் மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல: இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
15 May 2024காந்திநகர் : வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் நான் அல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரி
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024 -
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.