எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழக அரசு, நிலையான அரசு, உறுதியான அரசு, 123 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசு. எங்கள் ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்ட மக்களுடைய நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுகின்ற விதமாக 239 கோடி ரூபாயில் பிரம்மாண்டமான மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு ஆணையிட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, அரசு வேகமாக, துரிதமாக செயல்பட்டு அந்தப் பணி 11 மாத காலத்திலே நிறைவேற்றி மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனாதிபதி தேர்தலில் அதிமுக-வின் நிலைப்பாடு என்ன? நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தல் இப்பொழுது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவாக முடிவு செய்து அறிவிப்போம். தமிழக அமைச்சர்களில் ஒரு அமைச்சர், பா.ஜ.க. ஒன்றும் தீண்டத்தகாத கட்சியில்லை, அதனால் ஆதரவு கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இதுவரைக்கும் எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைவதாக ஒரு தகவல் வந்துள்ளது, அதற்கு நீங்கள் ஏதாவது பரிந்துரை செய்திருக்கிறீர்களா?. எய்ம்ஸ் மருத்துவமனையைப் பொறுத்தவரையில், ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கு அமைய வேண்டுமென்று மத்திய அரசிடம் தெரிவித்திருக்கின்றார்கள். அதன்படிமருத்துவமனையை, மத்திய அரசு தமிழகத்தில் அமைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
குடிநீர், நீட்தேர்வு, மாட்டிறைச்சி என அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இதுவரை வாய் திறக்காமல் மௌனமாக இருக்கிறார் என்று, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனவே. நீட்தேர்வைப் பொறுத்தவரை எத்தனை முறை பேட்டி கொடுத்தேன் என்று உங்கள் அத்தனைபேருக்கும் தெரியும். பத்திரிகைக்கும் தெரியும், பிரதமரை மூன்று முறை சந்தித்த போது, நீட் தேர்வு குறித்து அவரிடத்திலே, விவரமாக, விளக்கமாக, தமிழக மாணவர்கள், ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் பாதிப்பார்கள். ஆகவே, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்கவேண்டுமென்று பலமுறை கோரிக்கை வைத்திருக்கின்றேன், உங்களுக்குத் தெரியும்.
மாட்டிறைச்சி சம்பந்தமாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? இன்னும் மத்திய அரசினுடைய முழுமையான அறிக்கை கிடைக்கப்பெறவில்லை. அதுகிடைத்தவுடன் எங்களுடைய நிலைப்பாட்டை கூற முடியும். அதற்கிடையிலே மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர், எதிர்க்கட்சியினுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற கருத்தையும் தெரிவித்திருக்கின்றார்.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எரிவாயு...? ஏற்கனவே நான் தெரிவித்திருக்கின்றேன். மக்களுக்கு எந்தவகையில் பாதிப்பு ஏற்படுத்தினாலும், அதை அம்மாவினுடைய தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று ஏற்கனவே தமிழக அரசின் நிலைப்பாட்டை கூறியிருக்கிறேன். தமிழக அரசு ஸ்திரத்தன்மையற்ற அரசு என்று ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார்கள். இரண்டு அணிகளின் இணைப்பு சம்பந்தமாக என்ன நடவடிக்கை நீங்கள் எடுக்க இருக்கிறீர்கள்? தமிழக அரசு வலுமையாக இருக்கின்றது. 123 சட்டப்பேரவைஉறுப்பினர்களைக் கொண்டு, ஒரு வலிமையான கட்சியாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.நாங்கள் ஏற்கனவே, 100 நாள் திட்டத்தைப் பற்றி, தெளிவாக எல்லா ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தியிருக்கின்றோம். இதுவரை எந்த ஒரு அரசும் செய்யாத அளவிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியிலே நின்று சிறப்பான திட்டங்களை இன்றைக்கு நாட்டு மக்களுக்குத் தந்திருக்கிறது. விவசாயிகளுக்கு, ஏரி, குளம், அணைகளிலே வண்டல் மண் அள்ளுகின்ற திட்டம். அந்தத் திட்டத்தை இன்றைக்கு அம்மாவினுடைய அரசு நிறைவேற்றியிருக்கிறது. மணலை, அரசே ஏற்று இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறது.
அதோடு இன்றைக்கு நிலத்தினுடைய வழிகாட்டி மதிப்பு, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி, ஏராளமான திட்டங்களை, அம்மாவினுடைய அரசு, குறுகிய காலத்திலே விரைந்து செயல்பட்டு, இன்றைக்கு மக்கள் மனத்திலே இடம்பெற்றிருக்கிறது. பொறுக்க முடியாதவர்கள், வேண்டுமென்றே, திட்டமிட்டு அவதூறான செய்திகளை இன்று பரப்பி வருகிறார்கள்.
மருத்துவர்கள் பற்றாக்குறை...? மருத்துவர்கள் பற்றாக்குறை என்ற கேள்வி எழவில்லை. இருந்தாலும், அரசு, காலியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எப்பொழுது பார்த்தாலும் இந்த அரசு பினாமி அரசு, சுனாமி அரசு, ஜெராக்ஸ் அரசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அம்மாவினுடைய அரசைப் பொறுத்தவரை, இது நிலையான அரசு. மக்கள் என்ன எண்ணுகின்றார்களோ, அதை நிறைவேற்றுகின்ற அரசாக இன்று இருந்து கொண்டிருக்கிறது. அத்தனை பேருக்கும் நன்றாகத் தெரியும், உங்கள் பத்திரிகை, ஊடகங்களுக்கும் தெரியும், அடிக்கடி, பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் சந்தித்து பேசினால்தான் அந்த அரசு இருக்கிறதென்று நினைக்காதீர்கள்.
எங்களுடைய செயல்பாடுகளை நான் ஏற்கனவே பொதுக்கூட்டத்திலே அழகாக பேசியிருக்கின்றேன். இன்றைக்கு கல்லூரியை திறந்துவைத்துப் பேசியிருக்கின்றேன். பேசுவது மட்டுமல்ல, செயல்பாட்டினுடைய திறமையையும் நாங்கள்காட்டிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, அம்மாவினுடைய அரசு, நிலையான அரசு, உறுதியான அரசு, 123 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசு. இவர்களுடைய ஆட்சிகாலத்திலே, அரசாக இருந்தது. எங்கள் ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்தத் தகுதியும் இல்லை.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.