முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசியில் அம்மா ஆரோக்கிய திட்டம்: செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      திருநெல்வேலி

தென்காசியில் அம்மா ஆரோக்கிய திட்டத்தினை தென்காசி சட்மன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் துவக்கி வைத்தார்.தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அம்மா ஆரோக்கிய திட்டத்தின் முழுஉடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ்பாண்டியன்  துவக்கிவைத்தார்.

 பல்வேறு பரிசோதனைகள்

நிகழ்ச்சிக்கு மாவட்ட சுகாதாரப் பணிகளின் இணை இயக்குனர் இளங்கோ தலைமை தாங்கினார். தமிழக அரசின் சார்பில் துவங்கப்பட்டுள்ள அம்மா ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 30 வயது பூர்த்தி அடைந்த அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடல் எடை குறியீடு, உடல்எடை, உயரம், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு, ரத்தசோகை, ரத்த வெள்ளை அணுக்கள், மொத்த அணுக்களின் எண்ணிக்கை, மற்றும் உட்பிரிவு விகிதம், ரத்தவகை கண்டறிதழ், ரத்தகொதிப்பு, சர்க்கரை நோய், சர்க்கரையின் அளவு உப்புச்சத்து கண்டறிதல், கர்ப்பவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், உள்ளிட்ட பரிசோதனைகள் செய்;யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன் மரக்கன்று நட்டார்.

பலர் பங்கேற்பு

நிகழ்ச்சியில் மாவட்ட அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் முத்தையா, டாக்டர் ஜஸ்டின் கார்த்திக், தென்காசி நகர அதிமுக செயலாளர் எஸ்.முத்துக்குமார், தென்காசி ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.சங்கரபாண்டியன், கூட்டுறவு சங்கத்தலைவர் துப்பாக்கி பாண்டியன், குற்றாலம் பேரூர் அதிமுக செயலாளர் சி.அசோக்பாண்டியன், வழக்கறிஞர் சின்னத்துரை பாண்டியன், தென்காசி நகர ஜெ.பேரவை செயலாளர் ஆர்.முருகன்ராஜ், கீழப்புலியூர் வெள்ளப்பாண்டியன், எம்.வி.குணம், பூசைத்துரை பாண்டியன், என்.எச்.எம்.பாண்டியன், செந்தூர்பாண்டியன், ரமே~; கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து