எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவம் சார்ந்த பி.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. மருத்துவ மாணவர்கள் சேர்கையில், தமிழக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
8-ம் தேதி கடைசிநாள்
இது குறித்து மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜன் கூறியதாவது:-
2017-18-ம் ஆண்டிற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவம், பல்மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணி முதல் ஜூலை 7-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விற்பனை செய்யப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 8-ம் தேதி மாலை 5 மணி வரை செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162. பெரியார் ஈ.வே.ரா.நெடுஞ்சாலை, கீழ்பாக்கம். சென்னை 10.என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விநியோகிக்கும் இடங்கள்
மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருத்தல் வேண்டும். சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, அரசு தேனி மருத்துவக் கல்லூரி, அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
ரூ.500 கட்டணம்
விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்கம், மாணவர் சேர்க்கை குழுவில் வழங்கப்படாது. விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பு கையேட்டினை பெறுதவற்கு கட்டணமாக ரூ.500-க்கு செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம் என்ற பெயரில் டி.டி.எடுத்துக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி.எஸ்.டி.பிரிவினர், அருந்ததியினர் சாதி சான்றிதழ்களின் நகலை சமர்பித்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களையும், பிற விவரங்களையும் www.tnhealth.org., www. tnmedicalselection.org என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தமிழத்தில் உள்ள மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
நீட் தேர்வு மதிப்பெண் ...
தமிழகத்தில் 22 அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து மொத்தம் 3050 இடங்கள் உள்ளது. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 15 சதவீதம் 456 இடங்கள் அளிக்கப்படும். மீதமுள்ள 2594 இடங்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாநில தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. அவற்றில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 2094 இடங்களும், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 109 இடங்களும் ஆக 2,203 இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், 401 இடங்கள் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மற்றும் பிற தேர்வு வாரியங்கள் மூலம் படித்த மாணவர்களுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கப்படும்.
85 சதவீதம் ஒதுக்கீடு
அதேபோல் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளை பொறுத்தவரை மாநில அரசால் ஒப்புதல் பெற்ற 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் அரசுக்கு ஒப்படைக்கப்படும் 783 இடங்களில் 85 சதவீதம் அதாவது, 664 இடங்களுக்கு மாநிலத் தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள¢ள 15 விழுக்காடு அதாவது 119 இடங்கள் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மற்றும் பிற தேர்வு வாரியங்கள் மூலம் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்.
கலந்தாய்வு மூலம் ...
பல்மருத்துவப் படிப்பில் தமிழ்நாடு அரசு பல்மருத்துவக் கல்லூரி, ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியில் உள்ள 200 இடங்களில் 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், மாநில ஒதுக்கிட்டிற்கான 170 இடங்களில் மாநிலப்பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 144 இடங்களும், பிற வாரியப்பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 26 இடங்களும் அளிக்கப்படும். சுயநிதி பல்மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கான 1,190 இடங்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 1,011 இடங்களும், பிற வாரியப்பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 179 இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் விளக்கம்
இந்த ஆண்டு நீட் தேர்வு முறை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? பிளஸ் 2 மார்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்களா? என்ற குழப்பம் நிலவி வந்தது. பெற்றோர், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்துக்கு தமிழக சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சமீபத்தில் சட்டசபையில் விளக்கம் அளித்தார். இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மேலும் தெரிவித்தாவது:-
அரசு மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்பட்டது போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில கலந்தாய்வு நடைபெறும். குறிப்பாக தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியையும் சேர்த்து மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கிட்டு இடங்கள் 456 ஆகும். மீதமுள்ள 2594 இடங்கள் தற்போது வெளியிட்டுள்ள அரசாணைப்படி 85 சதவீத இடங்கள் தமிழக சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் கலந்தாய்வு தொடங்கும் நாள் வரை கிடைக்காவிட்டால் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாநில தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
பாதிப்பு ஏற்படாது
இந்த ஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் 2094 இடங்களும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்களையும் சேர்த்து 2203 இடங்களும் அடங்கும்.மீதமுள்ள 15 சதவீத 391 இடங்கள் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, பிற தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். சுயநிதி மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை மாநில அரசால் ஒப்புதல் பெற்ற 10 கல்லூரிகளில் உள்ள 783 இடங்களில் 667 இடங்கள் மாநில வாரியத்தில் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள 119 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.