எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் சிறையிலிருந்து தப்பிய இரு கைதிகள் அங்கிருந்து கடத்தி வந்த கார் திருமங்கலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பிரபல ரவுடிகளான அந்த இரண்டு கைதிகளையும் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம அருகேயுள்ள சிவரக்கோட்டை கிராமத்திலிருந்து சிவரக்கோட்டை செல்லும் சாலையில் பழையபாலம் பகுதியில் முன் கண்ணாடி நொறுங்கிய நிலையில் நம்பர் பிளேட்டுகளின்றி சொகுசு காரொன்று நிற்பதாக கள்ளிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அனாதையாக நின்றிருந்த அந்த காரை சோதனையிட்டனர்.அப்போது காரினுள் மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட இரண்டு நம்பர் பிளேட்டுகளும்,செக் புத்தகமும்,பாஸ்போர்ட் படங்களும் கிடைத்தது.இந்த தடயங்களை வைத்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்து.
அதனடிப்படையில் கடந்த 23ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியிலிருக்கும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டேவிட்முருகேஷ்(எ)தேவேந்திரன்(25),மணிகாந்த்(எ)மணிகண்டன்நாடார்(24)ஆகிய இருகைதிகள் பாதுகாப்பு அம்சங்களை அலட்சியம் செய்துவிட்டு ஜெயிலின் உயரமான சுவரில் கயிறு போட்டு ஏறி தப்பியுள்ளனர்.பின்னர் அங்கு டூவீலரில் செல்போன் பேசியபடி நின்று கொண்டிருந்த நபரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த டூவீலரில் ஏறி அங்கிருந்து தப்பியுள்ளனர்.இதையடுத்து கடாக்படா பகுதியில் கார்களை பழுது பார்க்கும் நிறுவனம் வைத்துள்ள ராஜூரெட்டி என்பரை தலையில் தாக்கி படுகாயப்படுத்தி விட்டுஅங்கிருந்த ஸ்கோடா காரை எடுத்துக் கொண்டு கைதிகள் இருவரும் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடாக்படா காவல்நிலையத்தில் ராஜூரெட்டி புகார் செய்ததன் பேரிலும்,கல்யாண் சிறையின் நிர்வாக காவல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரிலும் அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கும் அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கள்ளிக்குடி போலீசார் நடத்திய விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் சிறையிலிருந்து தப்பிய கைதிகள் அங்கிருந்து கடத்தி வந்த கார்தான் சிவரக்கோட்டை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்த நிலையில் தற்போது தப்பிச் சென்றுள்ள மேற்கண்ட இருகைதிகளையும் கைது செய்திட போலீசார் தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளனர்.கைதி டேவிட்முருகேஷ் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும்,மணிகண்டன் நாடார் கடந்த 2016ம் ஆண்டும் வழிப்பறி,கொலை முயற்சி,கொடுங்காயப்படுத்துதல்,ரௌடித்தனம் செய்தல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகளின் பேரில் கல்யாண் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கைதிகள் கடத்தி வந்த காரின் டிரைவர் பகுதிக்கு முன்பக்க கண்ணாடி உடந்திருந்த காரணத்தினால் ஓட்டுவதற்கு சிரமம் ஏற்பட்டதால் அதை சிவரக்கோட்டை கிராமத்தின் காட்டுப்பகுதியில் அவர்கள் நிறுத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த சம்பவங்கள் குறித்தும்,போலீசாரின் தற்போதைய தேடுதல் வேட்டைகள் குறித்து மகாராஷ்டிர மாநில போலீசாருக்கு முறைப்படி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தப்பிச் சென்ற கைதிகள் இருவரும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் கடலோர தென் மாவட்டங்கள் முழுவதிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.ராமேஸ்வரம் பகுதியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.அப்துல்கலாம் நினைவு மண்டபம் திறப்புவிழாவிற்கு பிரதமர்,முதல்வர் மற்றும் ஏராளமானோர் வரவுள்ள நிலையில் மகாராஷ்டிர மாநில சிறையிலிருந்து தப்பிய இரண்டு கைதிகள் திருமங்கலம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.