முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் உடல் நல விழிப்புணர்வு பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்-- கொடைக்கானலில் உடல் நல்த்திற்கு நடைபயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டவர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
 கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த இந்த விழிப்புணர்வு பேரணி கொடைக்கானல் ஏரியினைச் சுற்றி நடந்தது. இந்த பேரணியினை ரோட்டரி சங்க கவர்னர் கோபாலகிரு~;ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணிக்கு முன்னாள் கவர்னர் சாம்பாபு, தலைமை தாங்கினார். கொடைக்கானல் ரோட்டரி சங்க தலைவர் ரோகன் சாம்பாபு முன்னிலை வகித்து பேரணியினை நடத்திச் சென்றார். ரோட்டரி சங்க செயலாளர் ராஜ்குமார், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் ராமன்ராஜ்குமார், சாந்தசதீஸ், ஹார்ட் பவுன்டேசன் தலைவர், துணைகவர்னர் சுல்பி, முன்னாள் செயலாளர் ஜஸ்வந்த், கொடைக்கானல் பீட்டர்ஸ் பள்ளி நிர்வாகி நிர்மலா சாம்பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் சர்வதேசப் பள்ளி, சாந்தம் பள்ளி, பவன்ஸ் பள்ளி உள்ளிட்ட பள்ளியின் மாணவ மாணவிகள் இந்த உடல் நல விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணி 5 கி.மீட்டர் தூரம் நடந்தது.
பட விளக்கம்: கொடைக்கானலில் ரோட்டரி சங்கம் சார்பில் உடல்நல விழிப்புணர்வு பேரணியினை ரோட்டரி கவர்னர் கோபாலகிரு~;ணன் துவக்கி வைத்தார். அருகில் ரோட்ரி தலைவர் ரோகன் சாம்பாபு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து