எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நிலவேம்பு குடிநீரைப் பருகுவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக இதுவரை நடைபெற்ற ஆய்வு ஆதாரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு தடுப்பு மருந்தாகவும், அதற்கான சிகிச்சைகளுக்காகவும் நிலவேம்பு குடிநீரும், டெங்கு காய்ச்சலினால் குறையும் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட மருந்துகள் பயனளிக்கும் என்ற அடிப்படையில், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்ட மருந்துகளை தமிழக அரசு பரிந்துரைத்து வருகிறது.இதன் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலும் இது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிலவேம்பு குடிநீர் பருகினால் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் என்று செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.எனவே, இதுதொடர்பான சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு, சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இதில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககத்தின் ஆணையர் மோகன் பியாரே, இணை இயக்குநர் மருத்துவர் பார்த்திபன், ஆயுஷ் மருத்துவத்துக்கான மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் பிச்சையா குமார் ஆகியோர் கூறியது: நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனம், பற்படாகம், பேய்புடல், கோரைக்கிழக்கு, சுக்கு, மிளகு ஆகிய 9 வகை மூலிகைகளை சம அளவு கொண்ட மருந்தாகும். இந்த 9 மூலிகைகளும் மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டத்தின்படி, விஷ மருந்துகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவேம்பு குடிநீரும் இதே சட்டத்தின்கீழ் தரமான மருந்து தயாரிப்பு முறைகளின்படி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.முந்தைய ஆய்வுகள்: நிலவேம்பு குடிநீர் பாரம்பரிய மற்றும் பாதுகாப்பான மருந்து என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலால் (ஐ.சி.எம்.ஆர்.) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தலாம் என, சர்வதேச மருந்துகள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் குடிநீர், டெங்கு வைரஸூக்கு எதிராகச் செயல் புரிவதை உறுதிச் செய்யும் ஆய்வு முடிவுகள் அமெரிக்க மருந்து தொழில்நுட்ப ஆராய்ச்சி இதழ் மற்றும் சர்வதேச நடப்பு ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.மேலும், நிலவேம்பு குடிநீரினால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்று தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.சிகிச்சை ஆதாரங்கள்: கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சை மேற்கொண்ட 132 காய்ச்சல் நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுத்ததில், 82 பேருக்கு காய்ச்சல் தணிந்து, ரத்த ஓட்டமும் அதிகரித்துள்ளது. 45 பேருக்கு காய்ச்சல் தணிந்து, தட்டணுக்கள் குறையாமல் அதே அளவிலேயே தக்கவைக்கப்பட்டது.இதேபோன்று, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த 218 நோயாளிகளில் 158 பேருக்கு காய்ச்சல் தணிந்து, தட்டணுக்கள் உயர்ந்துள்ளன. 42 பேருக்கு காய்ச்சல் தணிந்து, தட்டணுக்கள் குறையாமல் அதே அளவிலேயே தக்கவைக்கப்பட்டது.மருத்துவர் பரிந்துரை அவசியம்: எனவே, பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் பருகுவது குறித்து பீதியடைய வேண்டாம். சித்த மருத்துவர்களின் பரிந்துரையைப் பெற்று நிலவேம்பு குடிநீரைப் பருகலாம்.உரிமம் பெற்றிருக்க வேண்டும்: கடைகளில் நிலவேம்பு பொடி என்று விற்பனை செய்வதை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. நிலவேம்பு குடிநீர் சூரணம் என்ற பெயரிடப்பட்ட பொடியையே வாங்க வேண்டும். அவற்றிலும் உரிமம் பெற்றதற்கான விவரங்கள், தயாரிப்பு தேதி, குறியீட்டு எண்கள் இடம்பெற்றுள்ளதா என்று பரிசோதித்து வாங்க வேண்டும். நிலவேம்பு குடிநீர் சூரணத்தைக் கொண்டு கசாயம் தயாரித்து மட்டுமே பருக வேண்டும், பொடியாக உட்கொள்ளக் கூடாது. கசாயம் தயாரித்த 3 மணி நேரத்தில் அதனைப் பருக வேண்டும். அதற்கு பின்பு அதனைப் பருகக் கூடாது, புதிதாக தயாரித்தே பருக வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.