எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மழை வெள்ளத்தை சமாளிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளோம் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
அதிகாரிகளின் வேகமான பணியை பல்வேறு நலச் சங்கங்கள் என்னை நேரில் வந்து சந்தித்து பாராட்டி நன்றி தெரிவித்தார்கள் என்று அமைச்சர் கூறினார்.
முதலமைச்சரின் உத்தரவுப்படி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி. தங்கமணி, வணிக வரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, சமூக நலத்துறை அமைச்சர் வி. சரோஜா ஆகியோர் தொடர்ந்து 4–வது நாளாக மண்டலம் 9 மற்றும் 10–ல் மழை பாதிக்கபட்ட இடங்களை ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினர். நேற்று மாலை கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இரு மண்டல அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்தனர்.
நலச்சங்கங்கள் பாராட்டு
மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார். மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள். மேலும் பலத்த மழை காரணமாக சில இடங்களில் தேங்கிய தண்ணீரும் மக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாமல் உடனடியாக அகற்றியுள்ளீர்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வந்ததும், பல்வேறு பகுதிகளில் இருந்து நலச்சங்க நிர்வாகிகள் வந்து என்னை சந்தித்தனர்.அப்போது அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினரும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். இரவு பகல் பாராது பணிகளை செய்தனர்.இவ்வளவு வேகமாக பணிகள் நடைபெறும் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு பணியாற்றினீர்கள்.எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது என்று அந்த நலச் சங்கங்களின் நிர்வாகிகள் நேரில் வந்து பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்கள்.மக்களுடன் மக்களாக இருந்து அவர்களது கஷ்டங்களை உணர்ந்து செயல்படுங்கள் என்று அம்மா சொல்லி இருக்கிறார். அவர் எங்களுக்கு கற்று தந்த பாடம் இது. அம்மா வழியில் நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம்.உங்களுக்கு பணி செய்ய காத்திருக்கிறோம் என்று அந்த நலச் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தேன்.
உங்களது (அதிகாரிகள்) பணியை மக்கள் பாராட்டுகிறார்கள், நன்றி சொல்கிறார்கள். எனவே உங்களது பணி மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
முதலமைச்சர் முன் கூட்டியே பலமுறை ஆய்வு கூட்டம் நடத்தினார். வெள்ள நிவாரண பணிகளுக்காக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக ஒவ்வொரு பகுதிக்கும் நியமித்து பணியை முடுக்கிவிட்டார். கடந்த கால அனுபவங்களை எல்லாம் வைத்து பணிகளை செய்தோம். மேலும் மழை வரும் என்று சொல்கிறார்கள். மழையில் ஒரு தெருவில் கூட தண்ணீர் தேங்க கூடாது. அதற்கு இன்னும் வேகமாக செயல்படுங்கள் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார். இந்த மண்டலத்தில் 181 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4 சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 650 டன் குப்பைகள் தினசரி அள்ளப்படுகிறது. 1500 கிலோ பிளிச்சிங் பவுடர் தௌி்க்கப்பட்டுள்ளது. 10 நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.103 மருத்துவ முகாம்கள் மூலம் 7 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். போதுமான மருந்து இருப்பில் உள்ளது. மின் துறையை பொறுத்தவரை எந்தவித புகாரும் மக்களிடமிருந்து வரவில்லை. அனைத்து இடங்களிலும் மின் வினியோகம் சீராக உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்க 16 இடங்கள் தயாராக உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிக்க போதுமான சமையல் பொருட்கள் இருப்பில் உள்ளது என்று இந்த ஆய்வு கூட்டத்தில் அந்தந்த துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி. தங்கமணி பேசினார்.
80 ஆயிரம் மின்சார பில்லர் பாக்ஸ்
சென்னையில் 80 ஆயிரம் மின்சார பில்லர் பாக்ஸ்கள் உள்ளன. இதில் 6700 பில்லர் பாக்ஸ்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வந்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து 5900 பில்லர் பாக்ஸ்களை எடுத்து மாற்றி இருக்கிறோம். மீதியுள்ளவைகளும் மாற்றப்பட்டு வருகின்றன. தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. தண்ணீர் வடிந்து காய்ந்ததும் உடனடியாக மின் வினியோகம் செய்யப்படுகிறது.
மின்சாரம் பற்றி ஏதேனும் புகார் செய்ய எனது வீட்டில் தனியாக போன் உள்ளது. அதில் தகவல் சொல்லலாம். என் கைபேசி நம்பருக்கும் போன் செய்யலாம். உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தமிழக முதலமைச்சர் சென்னை மாநகர பகுதியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து மழை நிவாரண பணிகளை கண்காணிக்கவும் துரிதபடுத்தவும் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 9 மற்றும் 10 மண்டலங்களில் கடந்த நான்கு நாட்களாக மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினோம். மாநகராட்சி, மெட்ரோ வாட்டர், மின்துறை, சுகாதாரத் துறை, காவல் துறை போன்ற துறைகளின் அலுவலர்கள் மிக சிறப்பாக நிவாரண பணிகளை மேற்கொண்டனர். இதற்காக எங்களது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறோம்.இந்த வாரம் பெய்த மழையால் மண்டலம் 9 மற்றும் 10–ல் உள்ள பகுதிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து அடுத்து புயல் மற்றும் கனமழை வந்தால் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ளபட்டு தயார் நிலையில் உள்ளது.சுரங்கபாதைகளில் நீரை வெளியேற்ற போதுமான மோட்டார் பம்புகள், சரிந்து விழும் மரங்களை வெட்ட மரம் வெட்டும் இயந்திரங்கள், தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை தங்கவைக்க சிறப்பு மையங்கள், உணவு தயாரிக்கும் கூடங்கள், பொக்லைன் மற்றும் சூப்பர் ஸ்ட்ரக்கர் வாகனங்கள், போதுமான மருந்து மாத்திரைகள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள், தி.நகர் சத்யா, விருகம்பாக்கம் ரவி, மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மண்டல நிர்வாக என்ஜினீயர்கள் பெரியசாமி, ஆர். சின்னதுரை, தி.நகர் பகுதி செயலாளர் டி.டி.பால்ராஜ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப