எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கதேர் உலா வரக்கூடிய கிரி பிரகாரம் மண்டபத்தில் 50 அடி நீளத்திற்கு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளிடையே சிக்கிய மோர் விற்கும் பெண் நசிங்கி பலியானார். திருப்பூர் பக்தர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கோயில் நடை உடனடியாக சாத்தப்பட்டது
சம்பவ இடத்தை பார்வையிட்ட கலெக்டர் வெங்கடேஷ், கிரி பிரகாரம் மற்றும் கட்டிடங்களை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை இன்ஜினியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே பலியானவர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண கேட்டு அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயில் கடலருகே அமைந்து சிறப்பு வாய்ந்தது. இயற்கை எழிலுடன் கோயில் கிரிபிரகாரத்துடன் பார்ப்பதற்கே ஆச்சரியமூட்டும் வகையில் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க தேரில் உலா வரக்கூடிய கிரி பிரகாரம் மண்டபம் தூண்களால் தாங்கி நிற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரி பிரகாரத்தின் வள்ளி குகை எதிர்புறம் வடக்கு பிரகாரம், தெற்கு பிரகாரம் திரும்பும் இடத்தில் உள்ள மண்டபத்தின் மேற்கூரை சுமார் 50 அடி நீளத்திற்கு நேற்றுகாலை 10.30 மணியளவில் திடீரென எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இச்சம்பவம் பற்றி அறிந்ததும் அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இடிந்த விழுந்த இடத்தில் மேற்கூரை கனமான கட்டிடங்களாக இருந்ததால் உடனடியாக ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இரண்டு ஜே.சி.பி. மூலம் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டன. அப்போது இடிபாடுகளிடையே சிக்கி திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆதிநாராயணன் மனைவி பேச்சியம்மாள்(44) நசிங்கி இறந்தது தெரியவந்தது. இவர் இந்த பகுதியில் உட்கார்ந்து மோர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும் சம்பவ இடத்தில் கட்டிடம் விழுந்த போது காயமடைந்த திருச்செந்தூர் சுப்பிரமணியரபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் செந்தில் ஆறுமுகம்(64), சுவாமி தரிசனத்திற்காக வந்த திருப்பூர் பெருமாள்நல்லூரைச் சேர்ந்த முத்துசாமி மகன் கந்தசாமி(74) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் செந்தில்ஆறுமுகம் சம்பவ இடத்தில் சுக்கு காபி வியாபாரத்தில் ஈடுப்பட்டு வந்தார். கந்தசாமி முன்னாள் வி.ஏ.ஒ.,வாக பணியாற்றியவவர். மேலும் சம்பவ இடத்தில் இடிந்த கட்டிடங்கள் உடனடியாக சுமார் ஒரு ஒன்றரை மணி நேரத்தில் அகற்றப்பட்டன. மேலும் சம்பவ இடத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த உடனே கோயில் நடைசாத்தப்பட்டது.
சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், எஸ்.பி. மகேந்திரன், திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., கணேஷ்குமார், தாசில்தார் அழகர், போலீஸ் டி.எஸ்.பி. பாலசந்திரன்(பொறுப்பு), கோயில் இன்ஸ்பெக்டர் ஷீஜராணி, தாலுகா இன்ஸ்பெக்டர் ரகுராஜன், கோயில் உதவி ஆணையர் ராமசாமி, கோயில் அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன், உள்துறை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மனோரஞ்சிதம் ஆகியோர் விரைந்து மீட்பு பணிகளை பார்வையிட்டனர். இடிபாடுகளில் சிக்கி இறந்த பேச்சியம்மாளுக்கு சுமதி(14) மகளும், சுரேஷ்(12) மகனும் உள்ளனர். இவர்கள் 9ம் வகுப்பு மற்றும் 7ம் வகுப்பு படித்து வருகின்கின்றனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் கலெக்டர் வெங்கடேஷ் கூறியதாவது:
திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரத்தில் வடக்குவாசல் அருகே மேற்கூரை சுமார் 20 மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்தது. இதில் பேச்சிம்மாள் இடிபாடுகளிடையே சிக்கி இறந்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் செந்தில் ஆறுமுகம்(64), திருப்பூரைச் சேர்ந்த பக்தர் கந்தசாமி(74) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோயில் பகுதியில் உள்ள 40 முதல் 45 ஆண்டுகள் வரையிலான பழமையான கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப்பணித்துறையினர் சூப்பிரெண்டென்ட் இன்ஜினியர் தலைமையில், வருவாய் துறை, போலீஸ், அறநிலையத்துறை, டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் 5 பேர் அடங்கிய குழுவினர் கட்டிடங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இவர்கள் உடனடியாக ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே இறந்த போன பேச்சியம்மாளின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மெயின்ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கலெக்டரோ, அறநிலையதுறை அதிகாரிகளோ நேரில் சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை. பாதிக்கப்பட்ட பேச்சியம்மாள் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.50 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர். மறியல் நடத்தியவர்களிடம் திருச்செந்தூர் ஆர்.டி.ஒ. கணேஷ்குமார், தாசில்தார் அழகர், டி.எஸ்.பி.பாலசந்திரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் 12.45 மணி முதல் 1.15 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அரசு தெரிவித்து நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் குவிந்தனர்.
கிரிபிரகாரம் வரலாறு
மேற்கூரை இடிந்த விழுந்த கிரி பிரகாரம் 1760 அடி நீளம் கொண்டது. கடந்த 1971ம் ஆண்டு சாண்டோ சின்னப்ப தேவர் உபயமாக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட பணி துவங்கியது. இப்பணி 1974ல் நிறைவடைந்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த கிரி பிரகாரம் கடந்த 2009ம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. அப்போது மேற்கூரையி சேதமடைந்த பகுதிகளை மட்டுமே சீரமைக்கப்பட்டது. கிரி பிரகாரத்தின் பலம், தன்மை குறித்து இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
பிரேசிலில் வரலாறு காணாத மழை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது
05 May 2024பிராசிலா : பிரேசிலில் வரலாறு காணாத மழைக்கு 56 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
05 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது
05 May 2024கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
05 May 2024திருநெல்வேலி : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்
-
நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
05 May 2024பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் த