எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : காவிரி டெல்டா மாவட்டஙகளில் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் பெற்று தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் தி.மு.க உறுப்பினர் சந்திரசேகரன் கவனஈர்ப்பு தீ்ர்மானத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் வருமாறு:-
12.83 லட்சம் ஏக்கர்...
காவிரி டெல்டா படுகை மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் கரூரில் நெற்பயிரானது சம்பா மற்றும்தாளடி பருவத்தில் சுமார் 14.93 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றது. நடப்பு 2017-18-ம் ஆண்டில், சம்பா பருவ சாகுபடிக்காக 2.10.2017 அன்று மேட்டூர் அணைதிறக்கப்பட்டது. திறக்கப்பட்ட பாசன நீரைக் கொண்டும், வடகிழக்கு பருவ மழையினைக்கொண்டும், நேரடி நெல் விதைப்பினை ஊக்குவிக்கும் வகையில் 41.15 கோடி ரூபாய் நிதிஒதுக்கீட்டில் சம்பா தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுப்புத் திட்டத்தினைப்பயன்படுத்தி, இது வரை 12.83 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 19 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டும். எஞ்சியுள்ள 12.64 லட்சம் ஏக்கர் பரப்பில், தற்போது சுமார் 4.64 லட்சம் ஏக்கர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
111 டிஎம்சி தண்ணீர்...
மீதமுள்ள 8 லட்சம் ஏக்கர் நெற்பயிரில், சுமார் 2.15 லட்சம் ஏக்கர் நிலம் நிலத்தடி நீரினை ஆதாரமாகக் கொண்டுள்ளது. எஞ்சியுள்ள 5.85 லட்சம் ஏக்கர் நெற்பயிரினை முழுமையாக அறுவடை செய்ய 26.75 டிஎம்சி நீர் தேவையாக உள்ளது. 3 லட்சம் ஏக்கர் பரப்பிற்கு ஒருமுறை பாசனமும், 2.85 லட்சம் ஏக்கர் பரப்பிற்கு இருமுறை பாசனமும் அவசியமாகிறது. தற்போது மேட்டூர் அணையில் நீரின் அளவு 21.70 டிஎம்சி ஆக உள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டின்படி, கர்நாடக அரசு, ஆண்டுதோறும் தமிழ் நாட்டிற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்கவேண்டும். இது நாள் வரை, 111 டிஎம்சி தண்ணீர் தான் வழங்கியுள்ளது. எஞ்சியுள்ள 81 டிஎம்சி தண்ணீர் 2018 மே மாதத்திற்கு முன்பாக வழங்க வேண்டியுள்ளது.
தொடர் நடவடிக்கை....
தீர்ப்பாய ஆணையின்படி, தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மீதமுள்ள நீரைப் பெறுவதற்கு கர்நாடக அரசிடம் நேரடியாகவும், மத்திய அரசு மூலமாகவும்,தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தவிர, உச்ச நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் பெற தொடர்ந்துநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு தஞ்சை மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகப்பட்டினம்மாவட்டத்தில் மழை பெய்திருக்கின்றது. மேலும், கால்வாய்களில் பகிர்ந்து அளிக்கப்படும் பாசனநீரினை சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்திட வேண்டும் என்று இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
கிடைக்கவில்லை ...
அமராவதியிலே நான்கு அரசாணை வெளியிட்டதாக சொன்னார்கள். நீர் இருக்கின்ற அளவு பொறுத்துதான் தண்ணீர் திறந்துவிடமுடியும். அதையெல்லாம் கருத்திலே கொண்டுதான், பெய்கின்ற நீரை அளவாக கொண்டு எந்தெந்த வாய்க்காலில் எவ்வளவு தண்ணீர் விடவேண்டும் என்று முறைப்படுத்தி அதற்குதக்கவாறு அரசு திறந்து விடுகிறது. விவசாயிகளின் நலன் கருதி இருக்கின்ற நீரினுடைய அளவைவைத்துதான் அரசு அதை வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, நமக்கு கிடைக்க வேண்டியநீர் கிட்டத்தட்ட கர்நாடக அரசு 81 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இந்த மே மாதத்திற்குள். எவ்வளவோ போராடினோம், இன்னும் கிடைக்கவில்லை.
4 வாரத்தில் தீர்ப்பு
நான் குறிப்பிட்டவாறு அரசு தொடர்ந்து மத்திய அரசின் மூலமாகவும், நேரடியாகவும் கர்நாடக அரசிற்கு அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்றத்திலும் இடைக்கால மனு தாக்கல் செய்தோம். இன்னும் நான்கு வாரத்திலே நம்முடைய காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். ஆகவே, அரசை பொறுத்தவரை விவசாயிகளுக்கு தண்ணீர் பெற்றுதருவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்18 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 19 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.