எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: மக்கள் பயன்பெறும் வகையில் 521 புதிய திட்டங்கள் அறிவித்தும், 3,200 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 2,329 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புள்ளிவிவரத்துடன் நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு கவர்னர் 8-ம் தேதி அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கான முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் பதில் அளித்து கூறியதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டில் எப்பொழுதும் ஆர்வம் காட்டிவரும் அம்மாவின் அரசு, பழங்குடியினர்களின் கல்வி மேம்பாட்டிற்கென திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் செங்காட்டுப்பட்டி மாணாக்கர்களுக்கு விடுதியும், பச்சமலை மற்றும் தென்புற நாட்டில் இரண்டு சமுதாயக் கூடங்களும், ஜவ்வாது மலையில் இரண்டு உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகள் மற்றும் ஆசிரியர் குடியிருப்புகள் 30.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் அறிஞர்கள் மற்றும் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு சிறப்பு செய்தவர்களை அம்மாவின் அரசு பெருமைப்படுத்தி வருகிறது.
அதன்படி, அறிவியல் தமிழறிஞர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் பெயரில் புதியதாக ஒரு விருது தோற்றுவிக்கப்பட்டதுடன், திண்டுக்கல் மாவட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோருக்கு 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டு 31.12.2017 அன்று என்னால் துவக்கிவைக்கப்பட்டது.மேலும், திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ஒரு மணி மண்டபம் கட்டப்படும் என தூத்துக்குடி மாவட்டத்தில் 22.11.2017 அன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது நான் அறிவித்திருந்தேன். இது தவிர, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 2.80 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு நினைவு மண்டபம் அமைத்து 1.10.2017 அன்று திறந்து வைக்கப்பட்டது. சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய கலைவாணர் அரங்கம் 62.73 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு...
இவ்வாறு தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த பலருக்கு பல்வேறு விருதுகளை வழங்கியும், மணி மண்டபம் மற்றும் நினைவு மண்டபங்களை கட்டி பெருமை சேர்த்த அம்மாவின் நினைவைப் போற்றும் வகையில் அம்மா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு நினைவு மண்டபம் அமைக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அம்மா குடியிருந்த ‘வேதா நிலையத்தை’ அரசுடைமை ஆக்கி, அவர்தம் நினைவும், புகழும், மேன்மையும், சிறப்பும், அடுத்து வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்காக ஒரு நினைவுச் சின்னமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நினைவு வளைவு...
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் ஒரு மாபெரும் நினைவு வளைவு அமைக்கப்படவுள்ளது என்பதை இம்மாமன்றத்திற்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சுற்றுலாவுக்கு உகந்த இடமாக தமிழ்நாடு உள்ளது என்பதற்குச் சான்றாக கடந்த மூன்று ஆண்டுகளாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.
30 மாவட்டங்களில்...
பக்தர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அம்மாவின் அரசு, கடந்த ஆண்டில் 30 திருக்கோயில்களில் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளது. 655 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு 1.11.2017 அன்று பழமை மாறாமல் திருப்பணி மேற்கொண்டதற்கு ‘‘யுனெஸ்கோ” நிறுவனம் விருது வழங்கியுள்ளது. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு 2.10.2017 அன்று தூய்மை இந்தியா விருது மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 2.5.2017 அன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், 2017 டிசம்பர் வரை 30 மாவட்டங்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
521 புதிய திட்டங்கள்
அந்தந்த மாவட்டங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் 521 புதிய திட்டங்கள் அறிவித்தும், 3,200 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 2,329 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன.
அரசு ஆணை ...
இவ்வாறு பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை இந்த அரசு மேற்கொண்டு வருவதுடன், சட்டப் பேரவை விதி 110ன் கீழும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதன் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பு 2017-18-ம் நிதி ஆண்டில் சட்டமன்றத்தில் சட்டமன்ற விதி 110-ன் கீழ் நான் 102 அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறேன். அவற்றில் 76 அறிவிப்புகளுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு, 8 அறிவிப்புகளுக்கான பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டும். 68 பணிகள் நடைபெற்றும் வருகின்றன. 23 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 3 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.