எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் : மறைந்த முதல்வர் அம்மாவின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபட்டு வருகின்றனர் என்று திண்டுக்கல்லில் நடந்த கல்லூரி விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
திண்டுக்கல் நொச்சியோடைப்பட்டி அனுகிரஹா அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மையை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த தேசிய அளவிலான பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் ஐசக் வரவேற்றார். துணை முதல்வர் சூசைமாணிக்கம், சேர்மன் அருமைநாதன், கல்லூரி செயலாளர் லாரன்ஸ், பேராசிரியர் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெங்களூர் நிமன்ஸ் நிறுவனமும், அனுகிரஹா அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இம்முகாமில் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மாணவ, மாணவிகளை வாழ்த்தி பாராட்டி வருவாய்த்துறை அமைச்சரும், பேரிடர் மேலாண்மை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றுகையில், பேரிடர் ஏற்படும் போது அதனை எதிர்கொள்வது எப்படி என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். முன்பெல்லாம் எப்போதாவது தான் சுனாமி, நிலச்சரிவு போன்ற பேரிடர் ஏற்படும். ஆனால் சமீபகாலமாக இவை அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழையின் போது 48 சதவீதம் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை மூலமாக 32 சதவீதம் மழை பெய்யும். இதன்மூலம் பெறக்கூடிய தண்ணீரை வைத்துத்தான் குடிஞிர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரியான மழைப்பொழிவு கிடைக்காவிட்டால் வறட்சி ஏற்படும்.
சில நேரங்களில் பேரிடர் நிகழ்வு ஏற்படுகிறது. அதனைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் தாழ்வான பாதிக்கப்பட்ட பகுதி. பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ள பகுதி உள்ளிட்ட 5 வகையாக அடையாளம் கண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வானிலை அறிக்கை கிடைத்தவுடன் மக்களுக்கு தேவையான நிவாரணமும் பாதுகாப்பு முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு உணவு, உடை ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடரின் போது மக்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிசெய்யப்பட வேண்டும்.
அம்மாவின் ஆட்சியில் சுனாமி பேரலை ஏற்பட்ட போது அவரது துரித நடவடிக்கையால் மீட்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு மக்கள் இயல்புநிலைக்கு திரும்பினர். இவ்வாறு செய்த நடவடிக்கையை மற்ற மாவட்டங்களுக்கும், பிற நாடுகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடலோர 13 மாவட்டங்களில் அடிக்கடி பேரிடர் ஏற்படுகின்ற காரணத்தால் முதல்நிலை காவலர்களாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியை நன்கு அறிந்தவர்களே இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மாணவர்கள் மட்டுமின்றி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அரசு பயிற்சி அளித்து வருகிறது.
வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டால் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அம்மாவின் ஆட்சியில் தான் முதன் முதலாக வறட்சிக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்வித்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்தார். மாணவர்களுக்கு தேவையான 16 கல்வி உபகரணங்களை அம்மா வழங்கினார்.
தொலைநோக்கு திட்டத்தோடு மாணவர்களின் நலன் கருதி அம்மா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். தனிநபர் வருமானம் உயர வேண்டும் என்பதற்காகவும் அம்மா திட்டங்களை அறிவித்தார். அம்மாவின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாணவர் சமுதாயம் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகின்றனர் என்று பேசினார்.
அதன்பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கோடு செயல்படுத்தப்படுவதில்லை. மக்களின் சேவைக்காகவே போக்குவரத்து கழகங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக கிராம மக்கள் தங்குதடையின்றி செல்வதற்கு சாலை வசதி, புதிய பேருந்து வசதி, புதிய வழித்தடங்கள் உருவாக்குதல் போன்றவை உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக அண்டை மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் பலமுறை மாற்றி உயர்த்தியுள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள டீசல் விலையேற்றத்தின் காரணமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து கழகம் நலிந்து விடக்கூடாது. அதனைக் காப்பாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு சிறந்ததொரு சேவை அளிக்க வேண்டும் என்பதாலேயே முதல்வரும், துணை முதல்வரும் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து கட்டண உயர்வை அறிவித்துள்ளனர் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப